மக்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு மூர்த்தியாரின் மேல் மலர் தூவி ஆரவாரித்தனர் . அமைச்சர் ஓடிவந்து மூர்த்தியாரை பணிந்து தன் சந்தோஷத்தை தெரிவித்தார் . அவரை மேளதாளத்துடன் அரண்மனை முடிசூட்டு விழா மண்டபத்திற்கு அழைத்து சென்றனர் . மங்கல நீராடலுக்கு பின்பு அவரை அலங்காரம் செய்து சிங்காதனுக்கு அழைத்து செல்ல அமைச்சர்கள் வந்தனர் . மூர்த்தியார் அவர்களை வரவேற்று அமர செய்து 'உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . ஆனால் ஒரு வேண்டுகோள் நான் சைவத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவன் . நாட்டில் பெரும்பாலோர் சைவத்தை கடைபிடிப்பதையே நான் விரும்புகிறேன் . திருநீறு அபிஷேகமாகவும் , ருத்திராக்ஷமே அணிகலனாகவும் , ஜடைமுடியே கிரீடமாகவும் இருப்பதையே நான் விரும்புகிறேன் . என்று தம் நிபந்தனையை உரைத்தார் . எல்லோரும் மனதார ஆமோதித்தனர் . அவரும் சுந்தரேச பெருமானை மனதார துதித்துவிட்டு விபூதி பூசி ருத்திராக்ஷம் அணிந்து சடாமுடியுடன் அரண்மனை சென்று முடிசூடி கொண்டு ஆட்சியை ஏற்றார் . பாண்டிய நாட்டில் வெகுகாலம் நல்லாட்சி புரிந்தார் . சிவனடியார்கள் பயமின்றி தங்கள் இறைப்பணிகளை செவ்வனே செய்தனர் . மூர்த்தியாரும் தாம் செய்து வந்த திருப்பணியை தொடர்ந்து செய்து செய்து கொண்டு பலகாலம் வாழ்ந்து சிவனடி சேர்ந்து மூர்த்திநாயனார் ஆனார் .
Thursday, 28 December 2017
Wednesday, 27 December 2017
வாரிசு இல்லாமல் மன்னன் இறந்ததால் அடுத்தது பட்டத்திற்கு வருபவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ற பிரச்சினை ஏற்பட்டது ... இவ்வாறு நேரும்போது பட்டத்து யானையின் துதிக்கையில் பூமாலையை கொடுத்து இறைவனை மனதார துதித்து தெருவில் அனுப்பி யானை யார் கழுத்தில் மாலை இடுகிறதோ அவரை அரசராக முடி சூடுவது மரபு. அதை பின்பற்றி பட்டத்து யானையை குளிப்பாட்டி அலங்கரித்து கோவிலை வலம் வந்து தெருவில் விட்டனர் . மூர்த்தியார் மன நிறைவோடு ஈசனை கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியே வந்தார் . பட்டத்து யானை மாலையோடு கோவில் வாசலுக்கு வந்து வாசலில் நின்ற மூர்த்தியார் கழுத்தில் அம்மாலையை அணிவித்து விட்டு பிளிறலோடு மண்டியிட்டு தன் வணக்கத்தை தெரிவித்தது . அவரை துதிக்கையால் தூக்கி தன் முதுகில் அமைத்திக்கொண்டது .
Saturday, 23 December 2017
மறுநாள் காலை அவர் நீராடிவிட்டு வரும்போது அந்த கொடுங்கோல் மன்னன் இரவு இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்டார் . அவரால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை . இரவில் கனவில் ஈசன் உரைத்தது நினைவு வந்து புல்லரித்து போனார் . மேலும் ஈசன் ஆட்சி பொறுப்பை இவரை அல்லவா ஏற்றுக்கொள்ள ஆணை இட்டார் . எல்லாம் அவன் பொறுப்பு . அவன் பார்த்துக்கொள்வான் என்று மௌனமாக கோவிலுக்கு கிளம்பினார் . இறந்து அரசனுக்கு பிள்ளை இல்லாத காரணத்தால் அடுத்த பட்டத்திற்கு வருவது யார் என்ற கேள்வி கிளம்பியது .
Wednesday, 20 December 2017
அவருக்கு சுய நினைவே இல்லை . தன் கைங்கரியம் நின்று போன வேதனை அவரை பித்தனாக்கியது . முழங்கை தேய்ந்து எலும்பு வெளிப்பட்டது . அவர் நிறுத்துவதாக இல்லை . குருதி பெருகியது . ஈசன் இனி பொறுப்பாரா ? 'அன்பனே என் மேல் கொண்ட பக்தியால் நீ செய்ய துணிந்த இச்செய்கையை நிறுத்து . கொடுங்கோல் மன்னன் இன்று இரவு இறந்து போவான் . நீயே உன் மனம் போல் ஆட்சி செய்வாய், உன் இறை பணியும் இனி இனிதே தொடரும் ' என்று கூறி மறைந்தார் . திடுக்கிட்டு விழித்த மூர்த்தியார் தன் முழங்கையை பார்த்தார் . எலும்பு தேய்ந்து உதிரம் கொட்டிய முழங்கை எலும்பு சதை வளர்ந்து முன்போல் ஆகி இருப்பதை கண்டு ஈசனின் அன்பை நினைந்து உருகி கண்ணீர் பொங்க ஐயனை மனமாற துதித்தார் . எம்பெருமான் மீது அளவு கடந்த பக்தி பெருக்கெடுத்தது.
Monday, 18 December 2017
எங்கு தேடியும் சந்தனம் கிடைக்காத காரணத்தால் மனமுடைந்த மூர்த்தியார் கோயிலில் அமர்ந்து புலம்பலானார் . ''இறைவா உன் அருமை அறியாத இந்த மூட அரசனிடமிருந்து நாங்கள் எப்போது விடுபடுவோம் ? தங்களுக்கு நாங்கள் தடையின்றி கைங்கர்யம் செய்ய இந்த மூட அரசனிடமிருந்து எப்போது விடுதலை பெறுவோம் ? என்று பலவாறாக'' புலம்பினார். நேரம் செல்ல செல்ல மாலை ஈசனுக்கு சந்தனகாப்பு சாற்ற சந்தனம் அரைக்கும் ஞாபகம் வந்தது . சந்தன கட்டை தானே இல்லை தன் கை இருக்கிறதே என்ற எண்ணம் வந்து சந்தனம் அரைக்கும் கல்லில் தன் முழங்கையை வைத்து தேய்க்கலானார் . சிறிது நேரம் தேய்த்ததும் முழங்கையில் ரத்தம் வர ஆரம்பித்தது . நேரம் செல்ல செல்ல குருதி பெருக்கு அதிகமாயிற்று .
Saturday, 16 December 2017
மன்னன் சமண மதத்தை தழுவியவன் ஆதலால் மக்களை சமண மதத்தை தழுவ கட்டாயப்படுத்தினான் . மறுப்பவர்களை கடுமையாக தண்டிக்கலானான் . சிவனடியார்கள் தங்கள் தொண்டினை செய்ய முடியாதவாறு பலவித தடைகளை செய்தான் . பூஜை செய்ய எவ்வித வசதியும் இல்லாமல் செய்தான் . மூர்த்தியாரையும் பாதிக்கும் வகையில் சந்தனம் விற்பதை தடை செய்தான் . அவர் பக்கத்து ஊர் சென்று சந்தனம் வாங்கி வந்து தன் கடமையை தொடர்ந்தார் . ஆனால் அதற்கும் முடியாதவாறு அந்த ஊர் வியாபாரிகளை பயமுறுத்தி அவருக்கு சந்தனம் விற்க விடாமல் தடுத்து விட்டான் .
Friday, 15 December 2017
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் |
மதுரை மாநகரில் மூர்த்தி என பெயர் கொண்ட ஒரு சிறந்த சிவபக்தர் வாழ்ந்து வந்தார் . வணிகர் குலத்தில் பிறந்த அவர் சுந்தரேச பெருமானிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் . பகவானுக்கு சந்தனகாப்பு சாற்றுவது பெரும் புண்ணிய காரியமாக சாஸ்த்திரங்கள் சொல்வதை உணர்ந்து அத்தொண்டை மிக விரும்பி மேற்கொண்டார் . தினந்தோறும் பகவானுக்கு சாற்ற சந்தனம் அரைத்து கொடுக்கும் பணியை தவறாமல் செய்து வந்தார் .இவ்வாறு நடந்து கொண்டிருந்த காலத்தில் கர்நாடக மன்னன் பாண்டிய நாட்டை கவர எண்ணி பெரும் படையுடன் போருக்கு வந்தான் . பாண்டிய மன்னன் கர்நாடக படையுடன் போரிட முடியாமல் தோற்று போனான் . பாண்டிய நாடு கர்நாடக மன்னன் வசம் ஆயிற்று . கர்நாடக மன்னன் சமண மதத்தை ஏற்றுக்கொண்டவன் . அவன் சைவர்களை கொடுமை செய்ய ஆரம்பித்தான் .
மதுரை மாநகரில் மூர்த்தி என பெயர் கொண்ட ஒரு சிறந்த சிவபக்தர் வாழ்ந்து வந்தார் . வணிகர் குலத்தில் பிறந்த அவர் சுந்தரேச பெருமானிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் . பகவானுக்கு சந்தனகாப்பு சாற்றுவது பெரும் புண்ணிய காரியமாக சாஸ்த்திரங்கள் சொல்வதை உணர்ந்து அத்தொண்டை மிக விரும்பி மேற்கொண்டார் . தினந்தோறும் பகவானுக்கு சாற்ற சந்தனம் அரைத்து கொடுக்கும் பணியை தவறாமல் செய்து வந்தார் .இவ்வாறு நடந்து கொண்டிருந்த காலத்தில் கர்நாடக மன்னன் பாண்டிய நாட்டை கவர எண்ணி பெரும் படையுடன் போருக்கு வந்தான் . பாண்டிய மன்னன் கர்நாடக படையுடன் போரிட முடியாமல் தோற்று போனான் . பாண்டிய நாடு கர்நாடக மன்னன் வசம் ஆயிற்று . கர்நாடக மன்னன் சமண மதத்தை ஏற்றுக்கொண்டவன் . அவன் சைவர்களை கொடுமை செய்ய ஆரம்பித்தான் .
Monday, 11 December 2017
நேரம் செல்ல செல்ல எல்லா உயிரினங்களும் இசையில் மயங்கி ஆனாயரை சூழ்ந்து கொண்டு அனுபவிக்க தொடங்கின . எல்லா சிறிய பெரிய ஜீவராசிகளும் பகையை மறந்து ஒரே மனதோடு இசையை தங்களை மறந்து ரசித்துக்கொண்டிருந்தன . அவர் இசை இப்போது விண்ணவர்களையும் கவர்ந்தது. தேவர்கள் , கந்தர்வர்கள் , கின்னரர்கள் எல்லோரும் கூடினர் . மண்ணும் விண்ணும் எங்கும் ஆனந்த வெள்ளம் . உமை அன்னையும் இசையில் மயங்கி ஈசனோடு அங்கு வந்தார் . ரிஷபாரூடராக அவர்கள் காட்சி தந்தனர் . ஆனாயரின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை . அப்போது ஈசன் 'அன்பனே உன் இந்த குழலோசையை என் அடியார்கள் கேட்க வேண்டாமா? இப்படியே வா என்று அழைத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார்
மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மேய மறந்து நின்றன . கன்றுகள் தங்கள் ஓட்டத்தை மறந்து அவரை பார்த்தன . மரங்கள் அசையவில்லை . பக்கத்து சோலையிலிருந்த பறவை இனங்கள் இசையில் மயங்கி பறந்து வந்தன . புதர்களில் மறைந்து இருந்த ஓநாய்கள் மான்கள் சிறுத்தை போன்ற மிருகங்கள் எல்லாம் இசையில் மயங்கி அங்கு கூடின . இசையில் மயங்கிய நாகங்கள் புற்றிலிருந்து வெளிவந்து படம் எடுத்து ஆடின . நேரம் செல்ல செல்ல அவர் இசை கல்லையும் உருக்குவதாக இருந்தது .
Friday, 8 December 2017
அலைமலிந்த புனல் மங்கை ஆனாயருக்கு அடியேன் |
மழ நாட்டில் திருமங்கலம் எனும் ஊரில் ஆயர் குலத்தில் பிறந்தவர் ஆனாயர் என்பவர். அவர் ஆயர்குலத்தின் தலைவர் . சிறந்த சிவபக்தர் . பஞ்சாக்ஷ்ரத்தை சதா உச்சரிப்பவர் . தினந்தோறும் மாடுகளையும் கன்றுகளையும் மேய்வதற்கு ஒட்டி சென்று வருவார் .அவர் இசையிலும் தேர்ந்தவர் . புல்லாங்குழலில் பஞ்சாக்ஷரத்தை தன்னை மறந்து வாசித்து கொண்டே இருப்பார் . அவர் இசையில் மயங்காதவர் கிடையாது . வழக்கம் போல் ஒரு நாள் அவர் ஆவினங்களை மேய்த்து கொண்டு வனம் சென்றார் . அங்கு பூத்து குலுங்கும் ஒரு புன்னை மரத்தை கண்டார் . அவருக்கு உடனே சடையுடைய சிவபெருமான் நினைவே எழுந்தது . உடனே குழலை எடுத்து பஞ்சாக்ஷரத்தை பண்ணோடு இசைக்க தொடங்கினார் .
மழ நாட்டில் திருமங்கலம் எனும் ஊரில் ஆயர் குலத்தில் பிறந்தவர் ஆனாயர் என்பவர். அவர் ஆயர்குலத்தின் தலைவர் . சிறந்த சிவபக்தர் . பஞ்சாக்ஷ்ரத்தை சதா உச்சரிப்பவர் . தினந்தோறும் மாடுகளையும் கன்றுகளையும் மேய்வதற்கு ஒட்டி சென்று வருவார் .அவர் இசையிலும் தேர்ந்தவர் . புல்லாங்குழலில் பஞ்சாக்ஷரத்தை தன்னை மறந்து வாசித்து கொண்டே இருப்பார் . அவர் இசையில் மயங்காதவர் கிடையாது . வழக்கம் போல் ஒரு நாள் அவர் ஆவினங்களை மேய்த்து கொண்டு வனம் சென்றார் . அங்கு பூத்து குலுங்கும் ஒரு புன்னை மரத்தை கண்டார் . அவருக்கு உடனே சடையுடைய சிவபெருமான் நினைவே எழுந்தது . உடனே குழலை எடுத்து பஞ்சாக்ஷரத்தை பண்ணோடு இசைக்க தொடங்கினார் .
Tuesday, 5 December 2017
இத்தனை நாள் தவறாமல் நடந்த இந்த திருப்பணி இன்று இவ்வாறாக என்ன தவறு செய்து விட்டேன் ? நாங்கள் பட்டினி கிடந்தும் இப்பணி தொடர்ந்து செய்து வந்தும் இன்று இவ்வாறு உன்னை பட்டினி போடும்படி ஆகிவிட்டதே . இனி நான் வாழ்வதில் அர்த்தமில்லை என்று கூறி அரிவாளை எடுத்து தன்னை மாய்த்துக்கொள்ள கழுத்தில் வைத்தார் . அன்பு கடலான ஈசன் சகிப்பாரா ? நிலத்திலிருந்து ஒரு கை நீண்டு '' வேண்டாம் அன்பனே !'' என்று கூறி அவர் கையை பிடித்தது . தாயனாரின் மேனி சிலிர்த்தது . நீர் கொண்டு வந்த அமுதினை நாம் ஏற்றுக்கொண்டோம் . உன் பக்தியை மெச்சினோம் என்று குரல் கேட்டது . ஈசன் மாவடு கடிக்கும் அந்த ஓசையும் கேட்டது . தரையில் சிந்திய அன்னம் கீரை எல்லாம் மறைந்தன . கணவன் மனைவி இருவரும் அது கண்டு மகிழ்ந்தனர் . இருவரும் சிவனடி சேர்ந்தனர் . அரிவாளால் தன்னை மாய்த்துக்கொள்ள எண்ணியதால் அவருக்கு அரிவாட்டாயர் என்ற பெயர் வழங்கலாயிற்று .
Monday, 4 December 2017
வெகு நாட்களாய் உணவு அருந்தாத நிலையில் தாயனார் உடல் மிக தளர்ந்து போயிருந்தார் . அவருடைய மனைவி பூஜைக்கு தண்ணீர் மற்ற சிறிய பொருள்களை ஏந்தி கொண்டு பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார் . அவர்கள் சாலையை தாண்டி புல்வெளியில் இறங்கி நடக்க தொடங்கினர் . புல் வெளியில் தரை சமனாக இல்லாததாலும் தாயனாரும் சோர்ந்து போயிருந்தாலும் அவர் கால் தடுக்கி விழ பின்னே வந்த அவர் மனைவி அவர் கீழே விழாமல் தாங்கி கொண்டார் . ஆனால் துரதிஷ்டவசமாக கூடை மண்ணில் வீழ்ந்து அன்னம் கீரை மாவடு யாவும் மண்ணில் வீழ்ந்தன . மனமுடைந்த தாயானார் தான் தினமும் செய்து வந்த திருப்பணி இன்று செய்ய முடியாமல் போனது கண்டு நிலைகுலைந்து போனார் . கதறினார் தான் பட்டினி கிடந்தும் தவறாமல் செய்து வந்த இத்திருப்பணி தவற என்ன காரணம் என்ன தவறு செய்தேன் ? என்று ஈசனிடம் புலம்பினார் .
Saturday, 2 December 2017
- கீரையை சாப்பிட்டுக்கொண்டு ஈசனுக்கு தம் திருத்தொண்டை மட்டும் குறைவர செய்து வந்தார் . தோட்டத்தில் விளையும் கீரை எத்தனை நாள் காணும் . கீரையும் அற்று விட்டது .. கணவன் மனைவி இருவரும் வெறும் ஜலம் குடித்துகாலத்தை ஓட்டினர். ஒரு நாள் தாயானார் வழக்கம்போல் தலையில் ஐயனுக்கு அமுது படைக்க அன்னமும் கீரை யும் மாவடுவும் கூடையில் வைத்துக்கொண்டு மனைவி பின் தொடர கோவிலுக்கு கிளம்பினார் .
Thursday, 30 November 2017
தாயனாரின் செல்வம் குறைய தொடங்கியது .அப்போதும் அவர் தன் திருத்தொண்டை நிறுத்தவில்லை . ஆட்களை வைத்து வேலை வாங்கி வந்த அவர் செல்வம் எல்லாம் இழந்த நிலையில் ஒருவரிடம் கூலி வேலைசெய்து அந்த வருவாயிலும் தவறாமல் ஐயனுக்கு தாம் செய்து வந்த தொண்டினை தொடர்ந்து செய்து வந்தார் . தமக்கு கிடைத்த கூலியில் செந்நெல்லை இறைவனுக்கு அமுது படைக்க எடுத்துக்கொண்டு கார்நெல்லை தானும் தன்மனைவியும் உண்ண உபயோகித்து கொண்டார் . வறுமையிலும் விடாது தொண்டு செய்து வரும் அவருடைய அப்பெரும் அன்பை மேலும் சோதிக்க எண்ணி அவ்வூரில் விளையும் எல்லா நெல்லையும் செந்நெல்லாக மாறச்செய்தார் . தன் கொள்கையிலிருந்து சிறிதும் மாறாத தாயனார் கூலியாக கிடைத்த மொத்த நெல்லையும் ஈசனுக்கே படைத்தார். அவர் மனை வி தோட்டத்தில் விளையும் கீரையை சமைத்து அதில் இருவரும் பசியாறினர்
Tuesday, 28 November 2017
எஞ்சாத வாட்டாயர் அடியார்க்கும் அடியேன் |
சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் தாயனார் என்பவர் . அவர் வேளாளர் குல தலைவர் . அவ்வூரில் எழுந்தருளி இருக்கும் நிதிநெறிநாதரிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் . தினமும் அவருக்கு செந்நெல் அரிசியில் அன்னமும் செங்கீரையும் மாவடுவும் செய்து கொண்டு சென்று நைவேத்யம் செய்து அங்கு வரும் சிவனடியார்களுக்கு அளிப்பதை தமக்கு கிடைத்த பாக்கியமாக சிரத்தையாக செய்து கொண்டு வந்தார் .தாயானார் மேற்கொண்டிருக்கும் இத்தொண்டினையும் அவருடைய பக்தியையும் உலகுக்கு உணர்த்த இச்சை கொண்டான் ஐயன் .
சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் தாயனார் என்பவர் . அவர் வேளாளர் குல தலைவர் . அவ்வூரில் எழுந்தருளி இருக்கும் நிதிநெறிநாதரிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் . தினமும் அவருக்கு செந்நெல் அரிசியில் அன்னமும் செங்கீரையும் மாவடுவும் செய்து கொண்டு சென்று நைவேத்யம் செய்து அங்கு வரும் சிவனடியார்களுக்கு அளிப்பதை தமக்கு கிடைத்த பாக்கியமாக சிரத்தையாக செய்து கொண்டு வந்தார் .தாயானார் மேற்கொண்டிருக்கும் இத்தொண்டினையும் அவருடைய பக்தியையும் உலகுக்கு உணர்த்த இச்சை கொண்டான் ஐயன் .
Saturday, 25 November 2017
மானக்கஞ்சாறர் வெட்டிய கூந்தலை கையில் எடுத்து இதோ பிடியுங்கள் என்று அடியாரிடம் நீட்டினார் . அதை அடியார் வாங்கி கொள்வார் என்று திரும்பியவர் அவர் மறைந்து விட்டது கண்டு திகைத்தார் . கூந்தலும் பழையபடி தன் பெண்ணின் தலையில் இருப்பதை கண்டார் . அப்போது ஈசன் வானில் தோன்றி ''அப்பனே உன் உயரிய பக்தியை உலகுக்கு காட்டவே இவ்வாறு செய்தோம் .'' என்று கூறி மறைந்தார் . மானக்கஞ்சாறர் மெய்சிலிர்த்து பலவாறு ஐயனை போற்றி துதித்தார் . மானக்கஞ்சாறரின் பெண்ணின் கூந்தல் முன்னினும் அதிக காந்தியுடன் விளங்கியது . இதனிடையே மணமகனின் வீட்டார் மண வீட்டை நெருங்கி கொண்டிருந்தனர் . அவர்கள் மணமகளின் கூந்தலை வெட்டி கொடுத்த செய்தியை கேள்விப்பட்டு கூந்தலில்லாத மணப்பெண்ணை மணப்பது சாஸ்திர விரோத மாயிர்றே என்று கவலை கொண்டனர் . ஆனால் சிறிது நேரத்தில் வந்தது சிவபெருமானே என்றும் பெண்ணின் கூந்தல் இப்போது அதிக காந்தியுடன் இருப்பதாக கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர் . திருமணம் இனிதே நடந்து முடிந்தது .
இதன் பிறகு மானக்கஞ்சாறர் இன்னும் பக்தியுடன் சிவனடியார்களுக்கு சிறந்த சேவை செய்து சில காலம் வாழ்ந்து பிறகு சிவனடி சேர்ந்தார் .
இதன் பிறகு மானக்கஞ்சாறர் இன்னும் பக்தியுடன் சிவனடியார்களுக்கு சிறந்த சேவை செய்து சில காலம் வாழ்ந்து பிறகு சிவனடி சேர்ந்தார் .
Friday, 24 November 2017
இப்போது ஈசன் தன் அன்பனின் பக்தியை சோதிக்க எண்ணம் கொண்டார் . தன் பக்தனின் பெருமை உலகு அறிய வேண்டாமா ? சைவ சமயத்தில் ஒரு சாரார் சிவபெருமானை எலும்பு மாலை தரித்த மூர்த்தியாக த்யானிப்பர் . அவர்கள் நெற்றியில் திருநீறும் தலையில் கேசத்தை முடித்து அதில் எலும்பு செருகிக்கொண்டும் மார்பில் மயிரினால் ஆன பூணுலும் அணிந்திருப்பர் . சிவபெருமான் அக்கோலத்தில் திருமண மண்டபத்தை அடைந்தார் . சிவனடியார் வந்திருப்பது கண்டு மானக்கஞ்சாறர் ஓடோடி வந்து பக்தியோடு அவரை வணங்கி வரவேற்றார் . ஈசன் ஒன்றும் அறியாதவர்போல் இங்கு என்ன விசேஷம் ? என வினவினார் . மானக்கஞ்சாறர் தன் மகள் விவாகம் நடக்கப்போவதாக சொல்லி அவளுக்கு ஆசி வழங்குமாறு கூறி அவளை அழைத்து அடியாரை வணங்க கூறினார் . அவளும் அவர் காலில் வீழ்ந்து வணங்கினாள் . நீண்ட அவள் கூந்தலை கண்டு ஈசன் ஆஹா இந்த கூந்தல் பூணுலுக்கு ஏற்றதாக இ ருக்கும் என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் மானக்கஞ்சாறர் தன் வாளை உருவி பெண்ணின் கேசத்தை வெட்டி எடுத்து அடியார் கையில் கொடுத்தார் . அவர் பெண்ணும் முகத்தில் புன்னகை மாறாமல் தன் தந்தை செயலுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் முகமலர்ச்சியுடன் அவர் செயலை ஏற்றுக்கொண்டாள் .
Thursday, 23 November 2017
பெற்றோர் தகுந்த இடத்தில் மகளை மணமுடித்து கொடுக்க ஆவல் கொண்டனர். தகுந்த மாப்பிள்ளையை தேடினர் . அப்போது பக்கத்து ஊரிலிருந்து அவளை பெண்கேட்டு வந்திருந்தனர் . அவர்களும் இவர்களுக்கு சம அந்தஸ்து உடையவர்கள். ஏயர்கோன் கலிக்காமர் என்ற அவரும் சேனைத்தலைவர் . நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் . மானக்கஞ்சாறருக்கு பரிச்சியமானவர் . எல்லாம் நல்லபடியாகவே முடிய அவர்கள் பேசி நல்ல நாள் குறித்து மணமுடிக்க நிச்சயித்தனர் . மணநாளும் வந்தது . சேனாதிபதி வீட்டு திருமணம். ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்றன . மாப்பிள்ளை வீட்டார் திருமணம் முடித்து செல்ல கோஷ்டியுடன் வந்து கொண்டிருந்தனர் .
Tuesday, 21 November 2017
ஈசன் அத்தம்பதியற்கு எல்லா வசதிகளையும் கொடுத்திருந்தார் . இன்பமான வாழ்க்கை தான். ஆனால் அவர்களுக்கு பிள்ளை பேறு அளிக்காதது பெரும் குறை . ஐயனை மனமுருக பிரார்த்தனை செய்தனர் . ஈசன் தன் அருமை பக்தர்களை கவனிக்காமல் இருப்பாரா? சிலகாலத்தில் அவர் மனைவி கருத்தரித்து ஒரு அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் . அவர்கள் ஆனந்தத்திற்கு அளவேது ? அருமை பெருமையுடன் குழந்தை வளர்ந்தது . குழந்தையும் குலப்பெருமையை காக்கும் பண்பு மிக்கவளாக வளர்ந்தாள் . பெற்றோர் ஆனந்தத்திற்கு அளவேது ? அவள் மணப்பருவம் எய்தினாள் .
Thursday, 16 November 2017
மலைமலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன் |
சோழ நாட்டில் கஞ்சானுர் என்கிற ஒரு தலம் இருக்கிறது . அவ்வூரில் வேளாளர் குடியில் பிறந்தவர் மனக்கஞ்சாறர் என்பவர் . அக்குடும்பம் பரம்பரையாக அரசர்களிடம் சேனாதிபதியாக பதவி வகித்து வாழ்ந்து வந்தவர்கள்.மானக்கஞ்சாறர் சிவபெருமானிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் .. சிவனடியார்களை மீது அளவு கடந்த மதிப்பு வைத்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து அதையே தம் லட்சியமாக கொண்டு இருந்தார் . அவர் மனைவியும் சிறந்த சிவபக்தை . இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்
சோழ நாட்டில் கஞ்சானுர் என்கிற ஒரு தலம் இருக்கிறது . அவ்வூரில் வேளாளர் குடியில் பிறந்தவர் மனக்கஞ்சாறர் என்பவர் . அக்குடும்பம் பரம்பரையாக அரசர்களிடம் சேனாதிபதியாக பதவி வகித்து வாழ்ந்து வந்தவர்கள்.மானக்கஞ்சாறர் சிவபெருமானிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் .. சிவனடியார்களை மீது அளவு கடந்த மதிப்பு வைத்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து அதையே தம் லட்சியமாக கொண்டு இருந்தார் . அவர் மனைவியும் சிறந்த சிவபக்தை . இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்
Tuesday, 14 November 2017
சந்தோஷத்துடன் மனநிறைவோடு கலயர் ஊர் திரும்பி இன்னும் அதிக பக்தியோடு தன் பணியை தொடங்கினார் . இவ்வாறு வாழ்ந்திருந்த காலத்தில் அப்பர் சம்பந்தர் தங்கள் பரிவாரங்களோடு அவ்வூர் சென்ற ..போது அவர்களை அன்போடு வரவேற்று அமுது படைத்து உபசரித்தார் . இவ்வாறு மனநிறைவோடு வாழ்ந்து பிறகு சிவனடி சேர்ந்து குங்கிலியகலய நாயனாராகி சிவாலயங்களில் சிலையாக இன்றும் அமர்ந்திருக்கின்றார் . வாழ்க !
Sunday, 12 November 2017
இச்செய்தியை கேட்ட கலயர் தன் பக்தைக்காக சிரம் தாழ்த்திய எம்பெருமானை காண மிக்க ஆவலுடன் உடனே திருப்பனந்தாள் புறப்பட்டார் . கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த அரசனை கண்டார் .யானைகள் சங்கிலியால் இழுத்து லிங்கதிருமேனியை நிமிர்த்த முடியாமல் தவிப்பதையும் கண்டார் . இத்திருப்பணிக்கு உதவாத தன் திருமேனி எதற்கு என்று எண்ணி லிங்கத்தில் கட்டி இருந்த கயிற்றை எடுத்து தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஈசனை தியானித்து கண்ணை மூடிக்கொண்டு இழுத்தார் . அதிகாரத்திற்க்கு கட்டுப்படாத ஐயன் அன்புக்கு உடனே கட்டுப்பட்டு நிமிர்ந்தார் . சந்தோஷத்தில் அரசனும் அங்கிருந்த எல்லோரும் ஆரவாரத்துடன் அவர் காலில் விழுந்து வணங்க விரைந்தனர் .கலயர் நெஞ்சு தழுதழுக்க ஏழையின் அன்புக்கு கட்டுப்பட்டு நிமிர்ந்த உன்னை என் சொல்லி போற்றுவேன் என்று கண்ணீர் மல்க நின்றார் . ஈசன் தன் மெய்யன்பனின் பெருமையை உலகுக்கு உணர்த்த தன் திருவிளையாடலை ஆடி முடித்தார் .
Saturday, 11 November 2017
இவ்வாறு க லயர் அமைதியாக வாழ்ந்து வந்த வேளையில் அவர் ஒரு செய்தி கேட்டார் . அதாவது திருக்குடந்தை அருகில் திருப்பனந்தாள் எனும் ஊரில் நடந்த ஒரு சம்பவம் அவரை அவ்வூருக்கு சென்று அந்த ஐயனை சேவிக்க ஆவலை தூண்டி யது . அவ்வூரில் தாடகை என்னும் அம்மையார் வாழ்ந்து வந்தார் . சிறந்த சிவபக்தை . தினமும் காலையில் நீராடி குளத்திலிருந்து நீர் கொண்டுவந்து அவ்வூர் ஈசனுக்கு அபிஷேகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தாள் . ஒரு நாள் அவள் குடத்தை இடுப்பிலிருந்து எடுத்து அபிஷேகம் செய்ய கை தூக்க எத்தனிக்கையில் அவள் சேலை நழுவியது . அதை பிடித்துக்கொண்டு குடத்தை தூக்க முடியாமல் தவித்தார் . தன் பக்தை தவிப்பதை காண சகியாத ஈசன் தானே குனிந்து நீரை ஏற்றுக்கொண்டார் . தன் முடியை தன் பக்தைக்காக சாய்த்த அத்திரு கோலத்தை உலகம் காண அப்படியே இருந்து விட்டார் . சோழ அரசன் ஈசனின் அந்த கோலத்தை அவ்வாறே இருப்பதை விரும்பாமல் தன் ஆள்பலத்தால் அவரை நிமிர்த்த யத்தனித்தான் . இம்மிகூட அசையவில்லை . யானைகளை கொண்டு கட்டி இழுத்து நிமிர்த்த யத்தனித்தான் . ஒன்றும் பலனில்லை . அரசன் நொந்து போனான் .
Thursday, 9 November 2017
'வீடு செல் , மனைவி உனக்காக காத்திருப்பாள் ' என்று ஐயன் கனவில் சொன்னதும் கலயன் திடுக்கிட்டு விழித்தான் . வீடு செல்லவும் மனமில்லாமல் ஈசன் ஆணையை மீறவும் முடியாமல் மெள்ள உள்ளத்தை திடப்படுத்திக்கொண்டு வீடு சென்றான் . வாயிக்கதவு திறந்து இருப்பதை கண்டு திடுக்கிட்டு உள்ளே நுழைந்தான் . அவன் மனைவி அவன் காலில் விழுந்து நீங்கள் தினம் வணங்கும் அமுதகடேஸ்வரர் இன்று அருள் புரிந்து விட்டார் . உள்ளே அமுது உண்ண வாருங்கள் என்று அழைத்தாள் . உள்ளே நுழைந்த அவர் நன்றி பெருக்கால் கண்ணில் நீர் பெருக ஐயனை தொழுதார் . காலை சிவத்தொண்டர்களை எல்லாம் வர செய்து எல்லோருக்கும் அமுது படைத்து தன் நன்றியை வெளி படுத்தினார் . மறுபடியும் ஐயனுக்கு தன் தொண்டை குறைவர செய்ய தொடங்கினார் . அமுதகடேஸ்வரர் தன் அருமை தொண்டரின் பெருமையை உலகறிய செய்ய வேண்டாமா ? தன் திருவிளையாடலை துவங்கினார் .
Wednesday, 8 November 2017
கனமான இதயத்துடன் கலையர் அந்த பொன் மாங்கல்யத்தை எடுத்துக்கொண்டு பசியாற்ற ஏதாவது வாங்கி வர புறப்பட்டார் . ஈசன் விளையாட்டை யார் அறிவார் ? அவர் சென்ற பாதையில் எதிரே ஒருவன் வண்டியில் குங்கிலியம் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். அதை கண்டவுடன் அவர் மனம் பேதலித்தது . தான் வந்த காரியம் மறந்தது . தான் வாடிக்கையாக செய்வதே மனதில் நினைவு வந்தது . ஒன்றும் யோசியாமல் பொன்னை கொடுத்து வேண்டிய குங்கிலியம் வாங்கிக்கொண்டு மன மகிழ்ச்சியுடன் ஆலயத்தில் அதை சேர்ப்பித்து அந்த திருப்பணி நன்றாக முடிந்ததில் மெய்மறந்து கோவிலை வலம் வந்தார் . எல்லாம் முடிந்த பின்புதான் அவருக்கு வீடு நினைவு வந்தது . குழந்தைகளின் பசியால் வாடிய முகம் ஞாபகம் வந்தது . துடிதுடித்து போனார் . வீடு செல்ல மனம் வரவில்லை . துவண்டு போனார் . ஈசன் சும்மா இருப்பாரா ? பக்தனை அவ்வாறு துடிக்க செய்வாரா ? அவருடைய வீட்டில் சகல விதமான செல்வங்களும் குவிய ஆரம்பித்தன . அவர் மனைவி குழந்தைகளுக்கு சநதோஷம் தாங்கவில்லை . ஆலயத்தில் கலயன் கனவில் ஈசன் தோன்றி பசியுடன் இருப்பாய் வீடு செல் என்றார் .
Tuesday, 7 November 2017
குங்கிலிய தீபம் ஈசனுக்கு இடும் பணியில் அவர் மிக்க தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார் . ஒரு நாளும் தவறாமல் செய்து வந்தார் . சிவபெருமான் அவருடைய தீவிர பக்தியை சோதிக்க எண்ணம் கொண்டார் . செல்வத்தோடு வாழ்ந்த அவர் குடும்பம் ஏழ்மை நிலையை நோக்கி செல்ல ஆரம்பித்தது . நாள் செல்ல செல்ல ஏழ்மை அதிகரித்தது . அன்றாடம் வயிற்று பிழைப்பிற்கே சங்கடம் நேரலாயிற்று . ஒரு நாள் சாப்பாட்டிற்கே ஒன்றும் இல்லாமல் குழந்தைகள் மிக துன்பம் அடையும் நிலை வந்தது . கலையரின் மனைவி குழந்தைகளின் வேதனையை காண சகிக்காமல் . தன் திருமாங்கல்ய கயிற்றில் இருந்த தங்க மாங்கல்யத்தை கழற்றிக் கொடுத்து பெரியவர்கள் எப்படியாவது பசியை தாங்கலாம் . குழந்தைகள் என்ன செய்யும் , இதை விற்று ஏதாவது வழி செய்யுங்கள் என்று சொல்லி அவரிடம் கொடுத்தாள் . திடுக்கிட்டு போன கல யன் என்ன காரியம் செய்துவிட்டாய் என்று பதறி போனான் . அதற்கு அவள் அவன் கட்டிய மஞ்சள் கயிறு இருப்பதே போதும் இன்று குழந்தைகள் உண்ண ஏதாவது வழி செய்தால் போதும் , என்று சமாதானம் கூறினாள் .
Saturday, 4 November 2017
கடவூரில் கலையன் தன் அடியார்க்கு அடியேன் |
சோழநாட்டில் திருக்கடவூரில் ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார் . அவருக்கு அவர் பெற்றோர் கலயன் என்ற அவ்வூர் பெருமானின் திருநாமத்தையே வைத்திருந்தனர் . அவர் சிவபெருமானிடம் அலாதி பக்தி வைத்திருந்தார். அவர் தினமும் குங்கிலிய தீபம் ஈசனுக்கு இடும் பணியை வாடிக்கையாக கொண்டிருந்தார் .
Wednesday, 1 November 2017
தன் கண் பொருத்தி ஐயன் கண் சரி ஆனது அவனுக்கு அளவிலா ஆனந்தத்தை அளித்தது . தன் கண்ணை கொடுத்ததால் அவனுக்கு சிறிதும் மன வருத்தம் இல்லை . மனம் எல்லை இல்லா மகிழ்ச்சியை அடைந்தது . ஆனால் அந்தோ ! அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை . அவரது இடது கண்ணிலிருந்து ரத்தம் பெருக ஆரம்பித்தது . திண்ணன் சிறிதும் தயங்காமல் தனது இடது கண்ணை எடுக்க அம்பை எடுத்தான் . திடீரென்று அவனுக்கு நினைவு வந்தது . அந்த கண்ணையும் எடுத்து விட்டால் தன்னால் ஐயன் கண் இருக்குமிடத்தை அறிய முடியாதே என்பது மனதில் உதித்தது . உடனே தன் காலை இடது கண் இருக்குமிடத்தில் அடையாளமாக வைத்துக்கொண்டு அம்பினால் தன் இடது கண்ணை தோண்டி எடுக்க யத்தனித்தான் . அந்தக்கணமே ஈசன் தோன்றி 'நில் கண்ணப்ப ' என்று அவன் கையை பிடித்தார் தனது வலது பக்கத்தில் அவனை இருத்திக்கொண்டார் . .'திண்ணா உன் கண்ணை எனக்கு ஈந்து நீ கண்ணப்பன் ஆகிவிட்டாய் . நீ என்றும் எனது வலது பக்கத்தில் இருப்பாய் உன்னுடைய அளவிலா பக்தியை உலகம் உணர செய்யவே இவ்வாறு கண்ணில் உதிரம் கொட்ட செய்தோம் '. என்று கூறி தன்னில் செர்த்துக்கொண்டார். மறைந்து நின்று இக்காட்சியை கண்ட அந்தணர் மெய்சிலிர்த்துப்போனார் . ஒன்றும் அறியா வேடன் திண்ணன் கண்ணப்ப நாயனாராகி சிவாலயங்களில் சிலையாக இருக்கிறார் .
Tuesday, 31 October 2017
மறுநாள் அந்தணர் ஈசன் கட்டளையை உளமாற ஏற்று கோவிலில் ஓரிடத்தில் மறைந்து நின்று கொண்டார் . வழக்கப்படி திண்ணன் பூஜா திரவியங்களுடன் மலை ஏறி வேகமாக வந்தான் . அவனுக்கு . வரும்போதே சில அபசகுனங்கள் தென்பட்டதால் ஐயனுக்கு ஏதாகிலும் துன்பம் நேரிட்டதோ என்ற அச்சத்துடன் ஓடி வந்தான் . வந்து ஐயனை கண்டவன் துடிதுடித்து போனான் . அவரது வலது கண்ணில் ரத்தம் வழிவதை கண்டு மனம் பதறிப்போனான் . கையில் கொண்டு அத்தனையும் கிழே நழுவி விழுந்தன . இவ்வாறு யார் செய்தது என பதறி போய் சுற்றும் முற்றும் பார்த்தான் . அவனுக்கு ஒன்றும் புரியவில்லை . ஓடி சென்று சில பச்சிலைகளை பறித்து வந்து அதை பிழிந்து அதன் சாற்றை கொண்டு ரத்தத்தை நிறுத்த முயன்றான் . ரத்தம் நிற்கவில்லை . அலறினான் அரற்றினான் . செய்வதறியாது திகைத்தான் .அப்போதுதான் ஊனுக்கு ஊன் தான் சரிவரும் என்று முடிவு செய்து சந்தோஷம் பொங்க அம்பை எடுத்து தனது வலது கண்ணை பெயர்த்து அவரது வலது கண்ணில் பொருத்தினான் . ரத்தம் நின்றது .. திண்ணன் சந்தோசம் தாங்காமல் கூத்தாடினான் . ஈசனை கட்டிக்கொண்டு அனந்தக்கண்ணீர் சொரிந்தான் .
Monday, 30 October 2017
மறுநாள் சிவகோசரியார் பூஜைக்கு வந்தவர் மறுபடி வழக்கம் போல் மாமிச துண்டங்களும் அருவெறுப்பான காட்சியை கண்டு மிக மனவருத்தம் கொண்டு எத்தனை நாட்கள் இந்த மாதிரியான வெறுக்கத்தக்க காட்சிகளை காண வேண்டுமோ என்று மனம் நொந்து ஈசனிடம் புலம்புகிறார் . ஈசனை கண்டுகொள்ளாமல் சகித்து கொண்டு இவ்வாறு தம்மை சோதிப்பது தகுமோ என்று தன் மன வருத்தத்தை சொல்லி அழுதார் . பின் தன் கடமையை மனசோர்வுடன் முடித்துவிட்டு சென்றார் . அன்று இரவு அவர் கனவில் தோன்றிய ஈசன் அந்த வேடனின் செய்கைகளை கண்டு அவனுடைய பக்தியை சாதாரணமாக எடை போடாதீர்கள் என்று சொல்லி நாளை தம் சன்னதிக்கு வந்து மறைந்து நின்று கவனிக்குமாறு அந்தணருக்கு ஆணை இடுகிறார்.
Saturday, 28 October 2017
திண்ணன் காலையில் எழுந்து வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டையாடி கொன்ற விலங்கை கழுவி பக்குவமாக சமைத்து அங்கு மரத்தில் இருந்த தேன் கூட்டிலிருந்து தேனை எடுத்து அத்துடன் சேர்த்து தன் வா டிக்கைபடி தன் வாயில் நீரை எடுத்துக்கொண்டு வில்வம் மற்றும் மலர்களை பறித்து தன் தலையில் செருகிக்கொண்டு ஆனந்தமாக ஓடி வந்து தன் செருப்பு காலால் லிங்கத்தின் மீதிருந்த பூக்களை தள்ளி விட்டு தன் வாயில் கொண்டுவந்த நீரால் ஐயனுக்கு அபிஷேகம் செய்து தான் கொண்டுவந்த விலை மதிக்கமுடியாத தன் ஆத்மார்த்த அன்பை சேர்த்து செய்த அந்த உணவை எல்லை இல்லா ஆனந்தத்துடன் படைத்தான் . ஈசன் அதை சொல்லொணா அன்புடன் ஏற்று கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை .
Wednesday, 25 October 2017
இதனிடையில் நாணனும் காடனும் திண்ணனின் மாற்றத்தை அவன் தந்தை நாகனிடம் விவரமாக கூறினர் . பதறிப்போன நாகன் விரைந்து தேவராட்டி மற்றும் மனைவியுடன் காளத்தி மலையை நோக்கி ஓடினான். என்ன முயற்சி செய்தும் திண்ணன் திரும்பி கூட பார்க்கவில்லை . நாகன் ஏமாற்றமும் வருத்தமும் வாட்ட ஊர் திரும்பினான் . தேவராட்டியின் மந்திரதந்திரம் எதுவும் அவனிடம் பலிக்கவில்லை . திண்ணன் ஐயனிடம் மனமுருக சம்பாஷித்து கொண்டிருந்தான் . அவரிடம் தான் இரவெல்லாம் கண்விழித்து அவருக்கு காவல் இருக்கப்போவதாகவும் அவர் கவலை இன்றி நித்திரை செய்யலாம் என்று கூறிக்கொண்டிருந்தான் . அண்டங்களையெல்லாம் தன்னுள் வைத்து காத்து ரட்ஷிக்கும் எம்பெருமானுக்கு திண்ணன் துணை தேவைப்பட்டது . இதுவும் ஈசன் திருவிளையாடல் .
Tuesday, 24 October 2017
திண்ணன் இரவு முழுவதும் கண் இமைக்காமல் குடுமித்தேவருக்கு காவல் இருந்தான் . பொழுது விடிந்ததும் இன்றைய உணவிற்கு ஐயனுக்கு தரவேண்டுமே என்ற கவலை வாட்ட வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டையாட கிளம்பினான் . வேட்டையாடிய மிருகத்தை பதமாக வேகவைத்து அதில் அங்கிருக்கும் தேன் கூட்டிலிருந்து தேனை எடுத்து அதில் சேர்த்து பக்குவமாக இலையில் சுற்றி எடுத்துக்கொண்டான் . முன் தினத்தை போலவே வில்வமும் பூக்களும் தலையில் செருகிக்கொண்டு வாயில் நீர் நிரப்பி கொண்டு அவசரமாக மலையை நோக்கி ஓடினான் . அதற்குள் அங்கு அந்தணர் சிவகோசரியார் அங்கிருந்த கோலத்தை கண்டு திகைத்து ஈசனை இவ்வாறு அசிங்கப்படுத்தியது யார் என்று கலங்கியவாறு நன்றாக கழுவி சுத்தம் செய்து தான் கொண்டுவந்த திரவியங்களால் ஈசனை வழக்கம் போல் கிரமமாக பூஜை செய்து விட்டு சென்றார் .
Saturday, 21 October 2017
திண்ணன் வேகமாக சென்று ஆ ற்றங்கரையை அடைந்த போது சட்டென்று கோவிலில் குடுமித்தேவர்க்கு அந்தணர் செய்த பூஜை செயல்கள் நினைவு வந்தது . நீரால் அபிஷேகம் செய்து பூக்கள் சாற்றி பூஜித்திருந்தது நினைவு வந்தது . கையில் இறைவன் பசியாற வெந்த மாமிசம் இருந்தது .மறறொரு கையில் வில் இருந்தது மற்ற வில்வஇலை புஷ்பம் இவைகளை எப்படி எடுத்து செல்வது . ஒரு நொடியில் முடிவு செய்தான் . பூக்களையும் வில்வ இலைகளையும் பறித்து தன் தலை முடியில் செருகி கொண்டான் . ஆற்று நீரை தன் வாயில் உறிஞ்சி கொண்டான் . எல்லாம் தயார் என்று மகிழ்ச்சியுடன் மலையை நோக்கி தாவித்தாவி பரபரப்புட ன் ஓடினான் . ஐயன் தனியாக இருப்பாரே என்ற ஆதங்கம் அவனை வாட்டியது . வேகமாக மலையை அடைந்து குடுமித்தேவரை கண்ட ஆனந்தபரவசம் அடைந்தான் .கூடவே அளவு கடந்த துக்கம் இத்தனை நேரம் இந்த காட்டு மிருகங்கள் ஏகமாக நடமாடும் இந்த பயங்கர வனத்தில் தனியாக எப்படி இருந்தாய் என்று துக்கத்தோடு வெகுவாக அரற்றினான் . தன் செருப்பு காலால் ஐயன் மேலிருந்த புஷ்பங்களை தள்ளிவிட்டு தான் வாயில் கொண்டுவந்திருந்த நீரால் ஈசனுக்கு அபிஷேகம் செய்து விட்டு பூக்களை சாற்றிவிட்டு கொண்டுவந்திருந்த மாமிசத்தையும் படைத்து விட்டு ஐயனுக்கு இரவு தான் தூங்காமல் காவல் இருக்க போவதால் பயமின்றி பசியாறிவிட்டு இருக்கும்படி கூறினான் . அவனுக்குத்தான் அவரை பற்றி எத்தனை கவலை .
Thursday, 19 October 2017
திண்ணன் ஈசன் பசியோடு இருப்பார் என்கின்ற அளவிடமுடியாத பரபரப்பில் செயல்பட்டு கொண்டிருந்தது மற்ற இருவருக்கும் ஆச்சர்யம் அளித்தது . நாணன் கூறியது போல் திண்ணன் மாறித்தான் போயிருந்தான் . ஐயன் இருட்டில் தனிமையில் வாடிக்கொண்டிருப்பார் என்ற நினைவே அவனை வெகுவாக வாட்டியது . வேகமாக வேகவைத்த பன்றி மாமிச துண்டுகளை இலையில் சுற்றி எடுத்துக்கொண்டு கிளம்ப யத்தனித்தான் . மற்ற இருவரும் தம் கூட வந்த வேடுவர்கள் காத்திருப்பார்கள். ஊர் திரும்ப வேண்டும் என்று நினைவு படுத்தினார்கள் . திண்ணன் காதில் வாங்கி கொள்ளவே இல்லை . மலையை நோக்கி வேகமாக ஓட துவங்கினான் .
Wednesday, 12 July 2017
திண்ணனுக்கு ஐயன் மீது அன்பு அளவு கடந்து பெருக்கெடுத்து ஓடியது .அந்தணர் செய்த்து ஈசனுக்கு பிடித்தமானதாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து தானும் அவ்வாறு செய்ய முடிவு செய்தான் . அப்போது அவனுக்கு ஐயன் பசியோடு இருப்பான் என்ற நினைவு வாட்டி எடுத்தது . உடனே காடன் தனக்காக சமைத்து வைத்திருக்கும் பன்றி மாமிசம் நினைவுக்கு வந்தது .. உடனே ஒரே ஓட்டமாக காடன் இருக்குமிடம் வந்தான் . நாணன் அதற்குள் திண்ணன் நிலையை சொல்கிறான் . திண்ணன் வேகவைத்த மாமிச துண்டங்களை ருசித்து எலும்பை நீக்கி துண்டங்களை ஒரு இலையில் பத்திரப்படுத்துகிறான் . மற்ற இருவரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் ..
Monday, 10 July 2017
மலையை நெருங்க நெருங்க திண்ணனின் உள்ளத்தில் இன்ப உணர்வு அதிகரித்து கொண்டே போனது . மலை உச்சியை அடைந்து அங்கு ஒரு மரத்தடியில் லிங்க வடிவில் குடடுமித்தேவரை கண்டு அவன் உடல் சிலிர்த்தது . கட்டி அனைத்து கண்ணீர் சொரிந்தான் . சுற்றிலும் காடாக இருப்பதை கண்டு உள்ளம் பதறினான் . இங்கேயா தனியாக எப்படி இருக்கிறாய் ? என மனம் மிக நொந்து வினவினான் . லிங்கத்தின் சிரசில் பூவும் வில்வமும் இருக்க கண்டு நாணனை அதை பற்றி வினவினான் . நாணன் முன்பு திண்ணனின் தந்தையுடன் தான் வந்த போது ஒரு பெரியவர் லிங்கத்தை நீரால் அபிஷேகம் செய்து மலர்களை வைத்ததாக கூறினான் . திண்ணன் ஒரு வேளை அதுதான் சரியான முறையாக இருக்க வேண்டும் என்று எண்ணி தானும் அவ்வாறே செய்ய எண்ணினான்
Thursday, 6 July 2017
திண்ணன் ஓய்வெடுக்க விரும்பி நண்பர்களை அழைத்து தான் பன்றியை சமைத்து உணவு தயாரித்து உண்பதற்க்கு ஏற்ற நீர் வசதி உள்ள இடம் எங்கு இருக்குமென வினவினான் . நாணன் பக்கத்தில் பொன்முகலி நதி ஓ டுவதாகவும் அங்கு செல்லலாம் என்று கூறினான். மூவரும் பன்றியை சுமந்து கொண்டு ஆற்றங்கரையை நெருங்கினர் . திண்ணன் ஆற்றின் மறுபக்கம் இருந்த குன்றை கண்டு விவரிக்க முடியாத உணர்ச்சிக்கு ஆளானான் . அவன் நாணனை கூப்பிட்டு குன்றை காட்டி அதை பற்றி கேட்டான் . நாணன் அது காளத்தி மலை என்றும் அக்குன்றின் மேல் குடுமித்தேவர் வாசம் செய்வதாகவும் கூறினான் . அக்குன்றை கண்ட திண்ணன் மேனி சிலிர்க்க கண்டான் . தான் புது மனிதனாக மாறி விட்டது போல் உணர்ந்தான் . நாணனை கூப்பிட்டு தன்னை அங்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டான் . கா டனை பன்றியை சமைக்க சொல்லி விட்டு நாணனும் திண்ணனும் ஆற்றை கடந்து அம்மலையை நோக்கி சென்றனர் .
Monday, 3 July 2017
அந்த பன்றி வெகு தூரம் ஓடி அலைக்கழித்தது . திண்ணனும் அதை துரத்தியபடி தன் கூட்டத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்டான் . சிறிது நேரத்தில் பன்றி களைத்துப்போய் நின்று விட்டது . திண்ணன் அதை அம்பை எய்து கொல்ல விரும்பாமல் தன் குத்துவாளால் அதை எதிர்த்து போராடி கொன்றான் . அவனுடன் வந்த இரு நண்பர்களும் அவனை வெகுவாக பாராட்டினார்கள் . களைத்து போன மூவரும் ஓய்வெடுக்க விரும்பினார் .
Friday, 30 June 2017
திண்ணன் பெரியவர்களை வணங்கிவிட்டு தன்னை தயார் செய்து கொண்டு வேட்டைக்கு புறப்பட்டான் . அவனுடன் சிறந்த வில்லாளிகளான நாணன் காடன் இருவரும் உடன் செல்ல தயாரானார்கள் . தாரை தப்பட்டைகள் முழங்க வேட்டைக்கு புறப்பட்டனர். தாரை தப்பட்டை சப்தத்தை கேட்ட மிருகங்கள் வெளியே ஓடிவர தொடங்கின . இவர்களும் விருப்பப்படி மிருகங்களை வேட்டை ஆடினார் . திடீரென ஒரு பெரிய காட்டு பன்றி குறுக்கே ஓடி வந்தது . திண்ணன் அதை கண்டதும் அதை துரத்தி வேட்டை ஆட முற்பட்டான் .அதுவும் வெகு தூரம் ஓடி அலைக்கழித்தது .
Sunday, 25 June 2017
நாகன் தம் சாதி ஜனங்கள் துன்பத்தை கண்டு மிக வருத்தமுற்றான் . மகன் திண்ணன் குலத்தொழிலில் மிக தேர்ச்சி அடைந்து விட்டது நினைவில் வர அவனை குல தலைவனாக நியமிக்க முடிவு செய்தான். அதற்காக அதை முறைப்படி செய்ய . வேண்டியவர்களை வரவழைத்து விழாவாக கொண்டாடினான் . பிறகு அவனை சிறந்த வேடுவர் இருவர் துணையுடன் சாதி சனங்களின் துயர் துடைக்க அனுப்ப ஆவன செய்தான் .
Sunday, 18 June 2017
குழந்தைக்கு திண்ணன் என்று பெயரை சூட்டினான் . கண்ணும் கருத்துமாக குழந்தையை வளர்த்தனர் தம்பதியர் . அவனும் வளர்ந்து ஆளானான் அவன் தந்தை அவனுக்கு முறையாக தம் குல தொழிலுக்கு தேவையான பயிற்சிகளை கொடுக்க தொடங்கினார் . அவனும் அதில் தேர்ச்சி பெற தொடங்கினான் . அவர்கள் வேட்டை ஆடுவதிலும் சில நியதிகள் கடைபிடித்தனர். கர்ப்பமுற்ற அல்லது உடல் ஊனமுற்ற மிருகங்களை தாக்க கூடாது . வயது ஆகாத மிருகங்களையும் அடிக்க மாட்டார்கள் . இவ்வாறு குல தர்மங்களையும் சேர்த்தே பயிற்சி பெற்றான் . நாகன் வயது முதிர்ந்த காரணத்தால் வேட்டைக்கு செல்ல இயலாதவனாக இருந்தான் .அப்போது ஒரு நாள் அண்டை காடுகளை சேர்ந்தவர்கள் நாகன் தொழில் செய்யாத காரணத்தால் அவர்கள் இருப்பிடத்தில் காட்டு மிருகங்களின் அட்டகாசம் அதிகரித்து விட்டதாக மிக வருத்தத்துடன் ஓலமிட்டனர்
Thursday, 15 June 2017
Wednesday, 7 June 2017
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கு அடியேன் |
அடுத்து காணப்போவது இணை இல்லா பக்தன் கண்ணப்பன் ஆகும் .
உடுப்பூர் எனும் ஊரில் நாகன் என்பவன் வாழ்ந்து வந்தான் . வனபிரேதசமான அங்கு அவன் வேடர்களின் தலைவனாக இருந்தான் .அவன் வேட்டை ஆடுவதில் மிக கெட்டிக்காரன் . அப்பிரதேச வேடர்கள் அவன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள் . காட்டு மிருகங்களால் ஆபத்து நேரும்போதெல்லாம் நாகனையே நம்பினார்கள் . அவன் மனைவி தத்தை என்பவள் . தங்கள் குல தெய்வமான முருகனிடம் அபார பக்தி வைத்திருந்தார்கள் . அவர்களுக்கு ஒரே குறை மணமாகி வெகு நாட்கள் ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாததே
அடுத்து காணப்போவது இணை இல்லா பக்தன் கண்ணப்பன் ஆகும் .
உடுப்பூர் எனும் ஊரில் நாகன் என்பவன் வாழ்ந்து வந்தான் . வனபிரேதசமான அங்கு அவன் வேடர்களின் தலைவனாக இருந்தான் .அவன் வேட்டை ஆடுவதில் மிக கெட்டிக்காரன் . அப்பிரதேச வேடர்கள் அவன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள் . காட்டு மிருகங்களால் ஆபத்து நேரும்போதெல்லாம் நாகனையே நம்பினார்கள் . அவன் மனைவி தத்தை என்பவள் . தங்கள் குல தெய்வமான முருகனிடம் அபார பக்தி வைத்திருந்தார்கள் . அவர்களுக்கு ஒரே குறை மணமாகி வெகு நாட்கள் ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாததே
Thursday, 18 May 2017
குறிப்பிட்டபடி குறிப்பிட்ட இடத்தில் ஏனாதியரும் அதிசூரனும் கத்தி கேடயத்துடன் சண்டைக்கு தயாரானார்கள் அதிசூரன் தன் முகத்தை கேடயத்தால் மறைத்து கொண்டிருந்தான் . இருவரும் கத்தியை சுழற்றிக்கொண்டு சண்டை இட்டனர் அதிசூரன் முகத்தை மறைத்தபடியே சண்டை இட்டான் . ஏனாதியார் வெற்றி பெரும் நிலையில் கத்தியை ஓங்க எத்தனிக்கையில் திடீரென்று அதிசூரன் தந்திரமாக கேடயத்தை விலக்கினான் . ஏனாதியார் திடுக்கிட்டார் . அவன் முகத்தில் பட்டையாக திருநீறு பூசி இருந்தான் அவனுக்கு ஏனாதியரை நன்றாக தெரியுமாதலால் சிவனடியார்களை அவர் நிச்சயமாக பெரிதும் மதிப்பார் என்றும் அவர்களுக்கு தீங்கு ஏதும் செய்யமாட்டார் என்றும் உணர்ந்திருந்தான் . ஏனாதியார் அவன் சிவனடியாராக மாறி விட்டான் என்று தீர்மானித்து கத்தியை கீழே போட நினைத்தவர் ஆயுதமற்றவனை கொன்றான் என்ற பழி சொல் சிவனடியாராக மாறியவனுக்கு வந்துவிட கூடாதென்று கத்தியை கையில் பிடித்து கொண்டு நின்றார் . அதுவே நல்ல தருணம் என்று அதிசூரன் கத்தியால் குத்தி அவரை மாய்த்தான் . உயிர் துறக்கும் தருவாயில் ஈசன் ஏனாதியருக்கு காட்சி கொடுத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார் .
Friday, 12 May 2017
ஏனாதியார் சொன்னபடி ஒரு மைதானத்தில் இரு கட்சியினரும் மோதினர் . எதிர்பார்த்தபடி ஏனாதியின் கட்சி பெருத்த வெற்றி பெற்றது . அதிசூரன் கட்சி பெருத்த சேதத்துடன் தோல்வியுற்றது . அதிசூரன் ஏனாதியரை வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை அறிந்து கொண்டான் . அவரை சூழ்ச்சி செய்து வெற்றி அடைவது என்று தீர்மானித்தான் . அதை நிறைவேற்ற யோசனையில் ஆழ்ந்தான் . ஏனாதியர் சிவனடியார்கள் மீது கொண்ட அதீத பக்தியை உபயோகிக்க முடிவு செய்தான் . அவன் ஏனாதியரை அழைத்து இவ்வாறு பலர் பலியாவதை தவிர்க்க தாம் இருவரும் மட்டுமே போரிட்டு தீர்த்துக்கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தான் . அவரும் ஒப்புக்கொண்டார் .
Saturday, 6 May 2017
அதிசூரன் ஏனாதியாரின் மீது அவர் புகழ் காரணமாக மிக வெறுப்பு கொண்டான் . அவரை எப்படியாவது பழி வாங்கும்வெறியுடன் இருந்தான் . ஒரு நாள் அவன் கத்தியுடன் ஏனாதியாரை சந்திப்பதற்கு தன் சீடர்களுடன் அவர் வீட்டிற்கு சென்றான் . ஏனாதியருக்கு இவர்களை காண இவர்கள் எதற்காக வந்திருப்பார்கள் என்று புரியாமல் ஆச்சர்யத்துடன் பார்த்தார் . உடனே அதிசூரன் இவ்வாறு இருவரும் ஒரே தொழிலில் ஈடுபட்டிருப்பது இருவருக்கும் சங்கடம் . ஆகையால் நாம் இருவரும் சண்டையிட்டு யார் வெல்கிறார்களோ அவரே இத்தொழிலில் இருக்கலாம் என்று அவரை போட்டிக்கு அழைத்தான் . இதற்குள் ஏனாதியின் சீடர்களும் அங்கு குழுமி விட்டனர் . இதை கண்ட ஏனாதியார் இத்தனை பேர்கள் சேர்ந்து விட்டதால் இங்கு சண்டை இடுவது சரியல்ல வேறு மைதானத்தில் போட்டியை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார் .
Monday, 1 May 2017
எனாதிநாதன் தன் அடியார்க்கு அடியேன் |
சிவனடியார் சின்னம் தரித்த எதிரிக்கும் அருளிய பெருந்தகை ஏனாதிநாதர் ஆவர் . சோழ நாட்டில் எயினனுர் என்றொரு ஊர் . அங்கு வசிப்பவர் ஏனாதி எனும் சிறந்த சிவபக்தர் . அவர் வாள் வித்தையில் சிறந்தவர் . வீரர்களுக்கு வாள் பயிற்சி கொடுப்பது . அவர் தொழில் . அரசாங்கத்தில் ஒரு படை பிரிவிற்கு அவர் தலைவர் . வித்தை கற்றுக்கொடுத்து ஈட்டிய பொருளில் பெரும் பகுதி சிவனடியார்களுக்கே செலவு செய்தார் .. அவர்களுக்கு சௌகரியங்கள் செய்து கொடுத்தார் . அதனால் அவர் புகழ் பரவியது . அவரிடம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை கூடிற்று . அவரைப்போல் வாள் வித்தை பயிற்சி அளிப்பவன் அதிசூரன் என்பவன் . அவனுக்கு ஏனாதியார் புகழ் ஓங்குவது பெரும் பொறாமையை உண்டாக்கியது . அவருடைய புகழால் இவருக்கு மாணவர்கள் வருகை குறைந்து வருமானமும் குறைந்தது
சிவனடியார் சின்னம் தரித்த எதிரிக்கும் அருளிய பெருந்தகை ஏனாதிநாதர் ஆவர் . சோழ நாட்டில் எயினனுர் என்றொரு ஊர் . அங்கு வசிப்பவர் ஏனாதி எனும் சிறந்த சிவபக்தர் . அவர் வாள் வித்தையில் சிறந்தவர் . வீரர்களுக்கு வாள் பயிற்சி கொடுப்பது . அவர் தொழில் . அரசாங்கத்தில் ஒரு படை பிரிவிற்கு அவர் தலைவர் . வித்தை கற்றுக்கொடுத்து ஈட்டிய பொருளில் பெரும் பகுதி சிவனடியார்களுக்கே செலவு செய்தார் .. அவர்களுக்கு சௌகரியங்கள் செய்து கொடுத்தார் . அதனால் அவர் புகழ் பரவியது . அவரிடம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை கூடிற்று . அவரைப்போல் வாள் வித்தை பயிற்சி அளிப்பவன் அதிசூரன் என்பவன் . அவனுக்கு ஏனாதியார் புகழ் ஓங்குவது பெரும் பொறாமையை உண்டாக்கியது . அவருடைய புகழால் இவருக்கு மாணவர்கள் வருகை குறைந்து வருமானமும் குறைந்தது
Monday, 24 April 2017
அன்பே உருவான இச்சிவனடியார் இக்காரியத்தை எதற்காக செய்தார்? தகுந்த காரணம் இல்லாமல் இருக்க முடியாது என்று உறுதியாக நம்பி ஸ்வாமி தாங்கள் இக்காரியத்தை செய்ததற்கு தகுந்த காரணம் இருக்க வேண்டும் . தாங்கள் வேறு யாரையாது தண்டிக்க வேண்டுமா? என்று பணிவுடன் வினவினார் . எறிபத்தர் நடந்தவற்றை விரிவாக விளக்கினார் . அதை கேட்ட மன்னர் மிக வருந்தி தாங்கள் கொடுத்த தண்டனை போதாது . தானும் தண்டிக்க பட வேண்டியவன் தான் என்று கூறி . தன் உடைவாளை உருவி. அடியார் கையில் கொடுத்து தன்னையும் வாளால் தண்டிக்குமாறு அவர் காலடியில் மண்டியிட்டார் மன்னன் . எறிபத்தர் கலங்கி போய் செய்வது அறியாது திகைத்தார் . உடனே அவ்வாளால் தன்னையே மாய்த்துக்கொள்ள யத்தனித்தார் . அதை கண்ட மன்னன் உடனே எழுந்து அவரை தடுக்க நினைத்தார் . அப்போது ஈசன் அங்கு தோன்றி அடியார்களிடம் தாங்கள் காட்டும் அபரிமிதமான அன்பை உலகிற்கு உணர்த்தவே இவ்விளையாடல் புரிந்ததாக கூறி யானையையும் சேவகர்களையும் பிழைக்க செய்தார் . எறிபத்தர் மன்னன் பட்டத்து யானைமேல் ஆரோகணித்து செல்வதை கண்டு மகிழ்ந்தார் .
Saturday, 22 April 2017
மற்றும் கூட வந்த காவலாளிகள் ஓடி சென்று மன்னனிடம் பட்டத்து யானை கொலையுண்ட செய்தியை கூறினர் . புகழ் சோழ ன்னன் செய்தியை கேட்டு அதிர்ந்து போனான் . பகைவர் படையுடன் வந்து விட்டனரோ என அச்சமுற்று படையுடன் செல்ல தயாரானான் . தானும் வாள் மற்ற ஆயுதங்கள் ஏந்தி படைகள் பின்னே வர குதிரை ஏறி புறப்பட்டார் . அவர் ராஜவீதியை அடைந்தார் . அங்கு பட்டத்து யானை மலைபோல் வீழ்ந்து கிடந்ததை கண்டு மலைத்து நின்றார் . அங்கு மழுவுடன் எறிபத்தரை கண்டு இப்பெரும் சிவனடியார் அங்கு என்ன செய்கிறார் என்று அதிசயித்து நின்றார் . அரசனின் பின் நின்ற காவலாளிகள் யானையை கொன்றவர் அவரே என்று சிவனடியாரை காண்பித்தனர் . அரசன் அதிர்ந்து போனார் . அன்பே உருவான சிவனடியார் இக்காரியம் செய்தாரென்றால் தகுந்த காரணம் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார் .
Tuesday, 18 April 2017
முதியவரான சிவகாமியாண்டார் கோபத்துடன் யானையின் பின் ஓட யத்தனித்தார் . வயதின் காரணமாக கால் தடுக்கி கீழே விழுந்தார் . ஆண்டவனே இது நீதியா ? இப்படி செய்த யானையை தட்டி ஒட்டிக்கொண்டு போய்விட்டானே அந்த பாகன் . இன்று என்னால் இப்பூமாலைகளை உனக்கு சூட்டி அழகு செய்ய முடியாதே என்று பலவாறாக புலம்பினார் . அப்போது அங்கு மழுவுடன் வந்த எறிபத்தனார் இவர் புலம்பலை கேட்க நேர்ந்தது . ஓடி வந்து விழுந்து கிடந்த சிவகாமியாண்டாரை அணுகி விசாரித்தார் . ஒரு சிவனடியாருக்கு இவ்வநீதி நடந்ததை கண்டு வெகுண்டு எழுந்தார் . அந்த யானை எந்த பக்கம் சென்றது என்று கேட்டறிந்து அவர் அந்த பக்கம் சென்று தம் மழுவால் யானையையும் பாகனையும் வீழ்த்தி கொன்றார் . கூட இருந்த காவலர்களையும் வீழ்த்தினார் .
Wednesday, 12 April 2017
மறுநாள் நவமி உத்சவம் . ஊரே திரண்டு உத்சவத்தை சிறப்பாக கொண்டாட ஆயத்தம் செய்த வண்ணம் இருந்தது . சிவகாமியாண்டார் அதிகாலையே எழுந்து நீராடி உடலெல்லாம் விபூதி பூசி ஈசன் பஞ்சாக்ஷரத்தை ஓதியவாறு மலர்களை கொய்து மாலையாக கட்டி அம்மாலைகளை ஒரு கூடையில் வைத்து தோளில் மாட்டிக்கொண்டு இறைவனுக்கு சாற்ற கோவிலை நோக்கி புறப்பட்டார் . மறுநாள் உத்சவத்தில் பங்கேற்க மன்னனின் பட்டத்து யானையை காவலர்கள் ஆற்றில் குளிப்பாட்டி அழைத்து வந்து கொண்டிருந்தனர் . யானை மதத்தில் இருந்தது . இதை உணராத காவலர்கள் அதை வீதி வழியே ஒட்டினர் . சிவகாமியாண்டார் தோளில் மலர்க்கூடையுடன் சிவநாமத்தை ஜபித்தவாறு சென்று கொண்டிருந்த தெருவில் நுழைந்த யானை அவரை ஒரு தள்ளு தள்ளி விட்டு பூக்கூடையையும் தூக்கி எறிந்து நாசம் செய்து விட்டு போய்விட்டது . யானை பாகனும் அதை கண்டு கொள்ள வில்லை .
Tuesday, 11 April 2017
அவ்வூரில் சிவகாமியாண்டார் என்றொரு பக்தர் வாழ்ந்து வந்தார் . அவர் நந்தவனங்கள் தோறும் சென்று மலர்களை சேகரித்து மாலையாக தொடுத்து ஈசனுக்கு அவைகளை சாற்றி அழகு பார்த்து மகிழ்வார் .. தினந்தோறும் அதிகாலை எழுந்து ஆற்றில் நீராடி வாயில் ஒரு துணியை சுற்றிக்கொண்டு மலர்களை கொய்து மாலையாக தொடுப்பார் . ஒரு கூடையில் அடுக்கி எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று மாலைகளை ஐயனுக்கு சாற்றி அழகு பார்த்து மகிழ்வார் . அவர் முதுமை அடைந்துவிட்ட போதிலும் விடாது இச்சேவையை செய்து வந்தார் .
Friday, 7 April 2017
இலைமலிந்த வேல்நம்பி எரிபக்தர்க்கு அடியேன் !
சோழ நாட்டை கருவூர் தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான் புகழ் சோழ மன்னன் . அவ்வூரில் கோயில்கொண்டிருக்கும் பசுபதீஸ்வரர் மீது எல்லை இல்லா பக்தி கொண்ட அடியார் ஒருவர் இருந்தார் . அவர் ஈசன் மீது கொண்ட அன்பிற்கு ஒரு படி மேலேயே சிவனடியார்கள் மீது பக்தி வைத்திருந்தார் . அவர்களுக்கு யாரேனும் தீங்கு இழைத்தார் என்று அறிந்தால் தான் எப்போதும் வைத்திருக்கும் மழுவை எறிந்து தண்டனை அளித்தே தீருவார் ,, அதன் காரணமாக அவர் எறி பக்தர் என்றே அழைக்கப்பட்டார் .
சோழ நாட்டை கருவூர் தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான் புகழ் சோழ மன்னன் . அவ்வூரில் கோயில்கொண்டிருக்கும் பசுபதீஸ்வரர் மீது எல்லை இல்லா பக்தி கொண்ட அடியார் ஒருவர் இருந்தார் . அவர் ஈசன் மீது கொண்ட அன்பிற்கு ஒரு படி மேலேயே சிவனடியார்கள் மீது பக்தி வைத்திருந்தார் . அவர்களுக்கு யாரேனும் தீங்கு இழைத்தார் என்று அறிந்தால் தான் எப்போதும் வைத்திருக்கும் மழுவை எறிந்து தண்டனை அளித்தே தீருவார் ,, அதன் காரணமாக அவர் எறி பக்தர் என்றே அழைக்கப்பட்டார் .
Friday, 31 March 2017
ஈசன் கோபத்துடன் சிறிது நேரம் முன்புதானே கொடுத்து சென்றேன் . அதற்குள் யார் இதை எடுப்பார்கள் நன்றாக தேடி பாரும் என்று கடுமையாக உரைத்தார் . இடிந்து போன அமர் நீதியார் நன்றாக தேடிவிட்டேன் ஸ்வாமி தயவு செய்து இதை பெற்று கொள்ளவும் என்று சொல்லி பட்டு கோவணத்தை காட்டினார் . நன்றாக இருக்கிறதே எனக்கு நான் கொடுத்து சென்ற துணிதான் தேவை . நான் முன்பே அது சாதாரணமானது அல்ல என்று சொன்னேன் அதை மறைத்து வைத்துக்கொண்டு நாடகமாடுகிறாயா ? உன்னை நம்பி அதை ஒப்படைத்தேன் . என்று கோபமாக கத்தினார் . அமர் நீதியார் மிகுந்த வருத்தமடைந்தார் . இப்பெரும் அபவாதத்தை கேட்டு மனமுடைந்து போனார் . ஐயா பிறர் பொருளுக்கு நான் என்றுமே ஆசைப்பட்டதில்லை . என் மீது இந்த அபவாதத்தை என்னால் தாங்க முடியவில்லை . இதற்கு ஈடாக நான் என்னிடமுள்ள எதையும் தர சித்தமாக இருக்கிறேன் . தயை செய்து தாங்கள் ஏதாவது வழி சொல்லுங்கள் என்று மன்றாடினார் . ஈசனும் ஒரு துலாக்கோலை எடுத்து வர செய்து ஒரு தட்டில் தண்டத்தில் கட்டி இருந்த மற்ற கௌபீனத்தை வைத்து அதற்கு எடையாக பொருள் ஏதேனும் கொடுக்க சொல்கிறார் . அவரும் மகிழ்ச்சியுடன் வீட்டிலுள்ள துணிகள் எல்லாவற்றையும் கொண்டுவர மற்ற தட்டில் வைக்கிறார் . ஆனால் ஈசன் வைத்த துணி இருந்த தட்டு துளிக்கூட எழும்ப வில்லை . வீட்டிலுள்ள மற்ற பொருள்களை வைக்க சம்மதம் கேட்டு அவைகளையும் வைக்கிறார் .ஆனாலும் அந்த தட்டு துளி கூட எழும்பவில்லை .. தான் தினம் வணங்கும் நல்லூர் ஈசனை மனதார த்யானித்தபடி இனி வீட்டில் இருப்பது தாம் தம் மனைவி தம் குழந்தை மட்டுமே என்று பெரிய துலாக்கோலாக வரவழைத்து அதை வல ம் வந்து அவருடைய துணிக்கு ஈடாக தாங்கள் மூவரும் துலா தட்டில் அமர்கின்றனர் . உடனே மேகத்திலிருந்து மலர்மாரி பொழிகிறது . சிவனடியார் மறைந்து ஈசன் காட்சி கொடுத்து அம்மூவரையும் தன்னிடம் சேர்த்துக்கொள்கிறார் .
Wednesday, 29 March 2017
ஈசன் சிரித்து கொண்டே சென்றார் . அமர் நீதியார் அதை பயபக்தியுடன் பத்திரமாக ஓர் இடத்தில் வைத்தார் . சிறிது நேரத்தில் நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது . சிறிது நேரத்திற்கு பிறகு அடியார் வந்தார் . தெப்பலாக நனைந்திருந்த அவர் தன்னை நன்றாக துடைத்துக்கொண்டு பிறகு அமர் நீதியாரை பார்த்து நான் கொடுத்து சென்ற கோவணத்தை கொண்டுவர சொல்கிறார் . அவரும் இதோ எடுத்து வருகிறேன் என்று சொல்லி உள்ளே செல்கிறார் . ஆனால் என்ன அதிர்ச்சி ! அவர் வைத்த இடத்தில் அதை காணவில்லை . எங்கு தேடியும் கிடைக்கவில்லை . ஈசன் வெளியிலிருந்து எத்தனை நேரம் இவ்வாறு ஈரத்துடன் நிற்பது என்று கோபத்துடன் வினவினார் . அமர்நிதியார் உடல் பதறியது . அவரை வெகு நேரம் காக்க வைக்கவும் முடியாது . அவசரமாக ஒரு புதிய பட்டு கோவணத்தை எடுத்து வந்து கொடுத்தார் . பயபக்தியுடன் மன்னிக்க வேண்டும் நான் வைத்த இடத்தில் அதை காணவில்லை . எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று பதற்றத்துடன் கூறினார்
Sunday, 26 March 2017
ஈசன் அமர் நீதியாரை பார்த்து நீங்கள் சிவனடியார்களுக்கு செய்யும் சிறந்த தொண்டினை பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன் . மிக்க மகிழ்ச்சி என்று கூறினார் . அதற்கு அமர் நீதியார் இச்செல்வமும் ஈசன் கொடுத்தது அதை இவ்வாறு அடியார்களுக்கு அளிக்க செய்வதும் அவனே ஆகவே இச்செல்வம் எல்லாம் அவனடியாக்களை சேரவேண்டியதே என்று பதிலுரைத்தார் . அந்த சமயம் மேகம் கறுத்து கொண்டு வந்தது . உடனே ஈசன் ஒன்றும் இல்லை மழை வரும் போல் இருக்கிறது . துணிகள் நனைந்து விட்டால் மாற்று ஆடை இல்லை . என்னுடைய இந்த கோவணத்தை பத்திரமாக வைத்திருந்து நான் திரும்ப வந்து கேட்கும்போது கொடுத்தால் போதும் . அது சாதாரண துணி என்று எண்ணிவிடாதே . என்று சொல்லி அவர் தண்டத்தில் கட்டி வைத்திருந்த ஒரு கௌபீனத்தை கொடுத்தார் .. அவரும் சரி ஸ்வாமி என்று மரியாதையுடன் பெற்று கொண்டார் .
Saturday, 25 March 2017
அமரநீதியார் நல்லூரில் அடியார்களை சேவையில் குறை நேரக்கூடாது என்ற எண்ணத்தில் அதை தானே நேரில் கவனித்து செய்ய எண்ணி தானே குடிபெயர்ந்தார் . இவருடைய இவ்வறிய சேவை உலகறிய செய்ய வேண்டும் என்று ஈசனுக்கு இச்சை உண்டாயிற்று . அன்று நல்லூரில் கோவிலில் எதோ உத்சவம் . ஐயன் பிரம்மச்சாரி சிவனடியாராக மாறி நல்லூர் வருகிறார் . பிரம்மச்சாரி கோலத்துடன் கையில் ஒரு தண்டம் அதில் இரண்டு காவி கௌபீனங்கள் கட்டி தொங்கின . அவரை கண்ட அமர் நீதியார் மகிழ்ச்சியுடன் வரவேண்டம் வரவேண்டும் என்று வரவேற்றார் . அவரும் உங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் . எனக்கு ஒரு உதவி தேவை என்று கூறினார் .
Friday, 24 March 2017
அவர் வாழ்ந்த ஊருக்கருகில் நல்லூர் என்னும் சிவக்ஷேத்திரம் இருந்தது . அமர் நீதியார் அங்கு அடிக்கடி சென்று ஈசனை வழிபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் . அங்கு வரும் பக்தர்களுக்கு அமுது படைப்பதை மிக மகிழ்ச்சியுடன் செய்து வந்தார் . மேலும் அங்கு வரும் அடியார்களுக்கு ஆடையும் கௌபீனமும் அளிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார் . அதற்காக அங்கு ஒரு மடத்தையும் கட்டி வைத்தார் . இவருக்கும் அங்கு அடிக்கடி போய்வர நேர்ந்ததால் அவரும் அங்கேயே தங்கி விட்டார் .
Thursday, 23 March 2017
அல்லி மென் முல்லையந்தார் அமர் நீதிக்கு அடியேன் !
காவேரி தீரத்தில் குடந்தைக்கு அருகே பழையாறை என்னும் ஊரில் பெரும் சிவபக்தர்களான வணிக குளத்தில் பிறந்தவர் அமர் நீதியார். சிவபெருமானிடத்தில் அளவற்ற பக்தி கொண்ட இவர் தரும நெறி தவறாமல் வாழ்ந்து வந்தார் . மக்களுக்கு தேவையான பொருள்களை மொத்தமாக வாங்கிவந்து அவைகளை மிகுந்த குறைந்த லாபத்திற்கு விற்று வந்தார் . அதனால் அவர் பெருமை அக்கம் பக்கத்து ஊர்களிலும் பரவி அவர் வியாபாரம் வெகுவாக பரவியது . அமர் நீதியாருக்கு சிவனடியார்கள் பால் மிகுந்த பக்தி . அவர்களுக்கு அமுதளிப்பதை பெரும் பாக்கியமாக கருதினார் .
காவேரி தீரத்தில் குடந்தைக்கு அருகே பழையாறை என்னும் ஊரில் பெரும் சிவபக்தர்களான வணிக குளத்தில் பிறந்தவர் அமர் நீதியார். சிவபெருமானிடத்தில் அளவற்ற பக்தி கொண்ட இவர் தரும நெறி தவறாமல் வாழ்ந்து வந்தார் . மக்களுக்கு தேவையான பொருள்களை மொத்தமாக வாங்கிவந்து அவைகளை மிகுந்த குறைந்த லாபத்திற்கு விற்று வந்தார் . அதனால் அவர் பெருமை அக்கம் பக்கத்து ஊர்களிலும் பரவி அவர் வியாபாரம் வெகுவாக பரவியது . அமர் நீதியாருக்கு சிவனடியார்கள் பால் மிகுந்த பக்தி . அவர்களுக்கு அமுதளிப்பதை பெரும் பாக்கியமாக கருதினார் .
Thursday, 16 March 2017
அந்த சிவபெருமானே தனக்கு தேவை இல்லை என்று விறன்மிண்டர் முழங்கியதும் சுந்தரரை வெகுவாக பாதித்தது . அதிர்ந்து போய் ஈசனிடம் சரணடைந்தார் . தடுத்தாட்கொண்ட ஈசனே ! என் மனமெல்லாம் அடியார்களிடம் உள்ளபோது நான் புற வணக்கம் செய்யாததால் என்னை இவ்வாறு பழி சுமக்க ஆளாக்கி விட்டாயே ?என்று புலம்பினார் . ஈசன் சுந்தரா கலங்காதே என்னை பாடுவதை போல் என் அடியார்களையும் பாடு அவர்கள் தொண்டும் உலகம் அறியட்டும் . என்று கூறினார் . சுந்தரர் அவர்களை பற்றி தனக்கு எதுவும் தெரியாதே என்று வருந்த இறைவன் ''தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கு அடியேன் " என்று முதலடி தொடங்கி கொடுத்து பாட சொல்கிறார் . சுந்தரரும் அவ்வாறே தேவாசிரிய மண்டபத்திற்கு சென்று ஒவ்வொரு தொண்டரையும் பெருமை படுத்தி சொல்லி அவர்க்கு தான் அடியார்க்கு அடியேன் என்று பாடுகிறார் . "விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன் " என்று சுந்தரர் பாடியதும் நெகிழ்ந்து போன விறன்மிண்டர் அவர் காலடியில் விழுகிறார் . ஈசனும் மகிழ்ந்து விறன்மிண்டரை தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார் . இறைவன் தன்னை வேண்டாம் என்று ஒதிக்கியவரையும் தன் தொண்டர்களை உளமாற நேசித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது . சுந்தரரை சொல்லும்போது இந்த சம்பவம் நாம் கண்டிருக்கிறோம் . இந்த பாடலின் பெருமையையும் அறிந்தோம் .
Monday, 13 March 2017
விறன்மிண்டர் சுந்தரர் அவ்வாறு அந்த மண்டபத்திலுள்ள அத்தனை அடியார்களையும் வணங்காமல் தாண்டி சென்றது அவருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது . கோபம் தாளாமல் இத்தகைய அடியார்கள் கூட்டத்தை மதியாமல் தாண்டி சென்ற வன்தொண்டர் சுந்தரர் நமக்கு தேவை இல்லை என்று சுந்தரர் காதில் விழுமாறு உரக்க சொன்னார் . அதை செவிமடுத்த சுந்தரர் அதிர்ந்து போனார் . மனத்தால் தான் அவர்களிடம் இத்தனை மரியாதை வைத்தும் புற வணக்கத்தையே மதித்து அவர் சொன்ன சொற்கள் அவரை முள்ளாக தைத்தன . விறன்மிண்டர் அதோடு நிறுத்தாமல் இவ்வாறு செய்த சுந்தரரை ஆட்கொண்ட சிவபெருமானும் தேவை இல்லை என்று உரக்க சொன்னார் .
Sunday, 12 March 2017
இவ்வாறு இவர் ஈசன் மீதும் ஈசனடியார்கள் மீதும் கொண்ட பக்தி வளர்ந்தது . அவருக்கு ஈசனை பல திவ்ய க்ஷேத்திரங்களுக்கு சென்று அங்கெல்லாம் வழிபட ஆவல் எழுந்தது . காவியும் ருத்திராக்ஷமும் தரித்து தல யாத்திரை கிளம்பி ஈசனையும் அடியார்களையும் வணங்கியவாறே சென்றார் . பல இடங்களில் ஈசனை தரிசித்து விட்டு திருவாரூர் வந்து சேர்ந்தார் . ஒருநாள் அவர் தேவாசிரிய மண்டபத்தில் அடியார்களுடன் இருந்தபோது சுந்தரர் கோவிலுக்கு வருகை தந்தார் . அவர் மனமெல்லாம் அங்கிருந்த அடியார்களையெல்லாம் கண்டு மிக்க பக்தி மேலிட்டு இவர்களைப்போல் தானும் ஆவது எப்போது என்ற எண்ணம் மேலிட்டவாறு கருவறையை நோக்கி நடந்தார் . அங்குள்ள அனைவரும் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்தினர் . விறன்மிண்டர் எல்லோராலும் வணங்கப்பட்ட அவர் யார் என்று வினவ அவர்கள் திருமணத்தன்று எம்பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டவரும் அவரால் வன்தொண்டர் என்று அழைக்கப்பட்டவருமான சுந்தரர் என்று பதிலுரைத்தனர்
Friday, 10 March 2017
விரிபொழில்சூழ் குன்றையார் விறண்மிண்டற்கு அடியேன் !
பரசுராம க்ஷேத்திரமான மலை நாட்டில் திருச்செங்குன்று எனும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் விறன்மிண்டர் . சிறு வயது முதலே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார் . தினமும் சிவாலயம் செல்வதையும் அவர் நாமங்களை சதா உச்சரிப்பதையும் தவறாமல் செய்து வந்தார் . வயது ஏற ஏற அவர் பக்தியும் வளர்ந்தது . சிவனடியார்கள் மீது மிகுந்த பக்தி கொண்டு அவர்களுக்கு தொண்டு செய்வதை தன் கடமையாக கொண்டார் . சிவபெருமானுக்கு தன்னை தொழுபவர்களை விட தன் அடியார்களை தொழுபவர்கள் மீது கருணை அதிகம் என்பதை அவர் உணர்ந்திருந்தார் . அடியார்களை கண்டு விட்டால் அவர்களை தொழுத பின்பே ஈசனை தொழுவார் .
பரசுராம க்ஷேத்திரமான மலை நாட்டில் திருச்செங்குன்று எனும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் விறன்மிண்டர் . சிறு வயது முதலே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார் . தினமும் சிவாலயம் செல்வதையும் அவர் நாமங்களை சதா உச்சரிப்பதையும் தவறாமல் செய்து வந்தார் . வயது ஏற ஏற அவர் பக்தியும் வளர்ந்தது . சிவனடியார்கள் மீது மிகுந்த பக்தி கொண்டு அவர்களுக்கு தொண்டு செய்வதை தன் கடமையாக கொண்டார் . சிவபெருமானுக்கு தன்னை தொழுபவர்களை விட தன் அடியார்களை தொழுபவர்கள் மீது கருணை அதிகம் என்பதை அவர் உணர்ந்திருந்தார் . அடியார்களை கண்டு விட்டால் அவர்களை தொழுத பின்பே ஈசனை தொழுவார் .
Tuesday, 7 March 2017
அரசன் உறங்கி கொண்டிருந்தான் . மனைவி காலடியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் . முத்தநாதன் அங்கு இருந்த ஆசனத்தில் அமர்ந்தான் . ராணி அரசனை சிவனடியார் வந்திருக்கும் சேதிசொல்லி அரசரை எழுப்புகிறாள் . அரசன் திடுக்கிட்டு எழுந்து சிவனடியார் காலில் விழுந்து வணங்கி தங்கள் வரவு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக கூறி அன்புடன் வரவேற்றார் . முத்தநாதன் ஈசன் தன் திருவாயால் மலர்ந்தருளிய ஆகம நூலை கொண்டு வந்திருப்பதாக கூறுகிறான் . இதை உபதேசிக்கும்போது ஸ்த்ரீகள் இருப்பது உசிதமல்ல என்று சொல்லி ராணியை அங்கிருந்து தந்திரமாக வெளியே அனுப்புகிறான்,.
ராணி யை பார்த்தும் தத்தனுக்கு சந்தேகம் வலுக்கிறது. அவன் ஓடி வருவதற்குள் அசம்பாவிதம் நடந்து முடிந்து விடுகிறது . முத்தநாதன் துணியில் சுற்றி கொண்டுவந்த குறுவாளை அரசனின் நெஞ்சில் பாய்ச்சிவிட்டான் . தத்தன் துரோகி என்று கத்திக்கொண்டே ஓடி வந்தான் . அரசன் தத்தா நில் , அவனுக்கு ஒரு தீங்கும் நேராமல் நாட்டின் எல்லை வரை அனுப்பி விட்டு வா என்று தடுமாறியவாறே கட்டளை இட்டு பிறகு சாய்ந்தான் . அப்போது பெரும் ஒளி தோன்றியது . ஈசன் அன்னையுடன் காட்சி தந்து ''மெய்ப்பொருள் என்னிடம் நீ கொண்ட பக்தியும் என் அடியார்களிடம் நீ காட்டிய அன்பும் மெச்ச தக்கது . வஞ்சகனாக இருந்தாலும் என் சொரூபத்தை கொண்டதால் அவனை மன்னித்த உன் உள்ளத்தை கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன் . இனி நீ எப்போதும் என்னுடனே இருப்பாயாக என்று கூறி மறைந்தார் . சிவனடி சேர்ந்த மெய்ப்பொருள் மெய்ப்பொருள் நாயனாராகிறார்
Friday, 3 March 2017
முத்தநாதன் யோசித்து யோசித்து சேதி அரசனை வீழ்த்த வழி தேடினான் . அரசனின் சிவபக்தியும் அவன் சிவனடியார் மீது கொண்டிருந்த அளவிலா மதிப்பும் அவனுக்கு நினைவு வந்தது . அதுவே அவனுக்கு ஒரு மார்க்கம் காட்டிற்று . உடனே அதை செயல் படுத்தினான் . உடலெல்லாம் திருநீறு பூசி காவியணிந்து சிவனடியாராகவே மாறினான் . குறு வாளை ஒரு பட்டு வஸ்திரத்தில் புத்தகம் போல சுற்றி எடுத்துக்கொண்டு அரண்மனையை நோக்கி வேகமாக நடந்தான் . அரசனின் மெய்காப்பாளன் தத்தன் என்பவன் முத்தநாதனை கண்டதும் சந்தேகம் எழ அவனை நிறுத்த முற்பட்டான் . ஆனால் முத்தநாதனோ என்னை தடுக்காதே , நான் முக்கியமாக யாரும் இதுவரை கண்டிராத புதிய ஆகம நூலை அரசனுக்கு போதிக்க வந்திருக்கின்றேன் என்று வேகமாக அரசன் மனைவியுடன் இருக்கும் அறைக்குள் நுழைந்து விட்டான் .
Thursday, 2 March 2017
முத்தநாதன் படையெடுத்து சேதி நாட்டை வெல்ல முயற்சித்தான் . தில்லை கூத்தனை முழுமையாக நம்பும் மெய்ப்பொருள் மன்னனின் படையை வெல்வது அவனுக்கு சாத்தியமாக இல்லை . அவன் எத்தனை முறை முயற்சித்தும் தோல்வியே கண்டான் . அவன் படைபலத்தால் அவரை வெல்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தான் . மெய்ப்பொருள் சிவனடியார்களிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான் . அவர்கள் எதை விரும்பினாலும் கொடுக்க தயங்கியதே கிடையாது . முத்தநாதன் இதை நன்கு அறிவான் . ஆகையால் ஏதாவது சூழ்ச்சி செய்து தான் அவனை வெல்ல முடியும் என்பதை உணர்ந்தான் .
Subscribe to:
Posts (Atom)