மறுநாள் காலை அவர் நீராடிவிட்டு வரும்போது அந்த கொடுங்கோல் மன்னன் இரவு இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்டார் . அவரால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை . இரவில் கனவில் ஈசன் உரைத்தது நினைவு வந்து புல்லரித்து போனார் . மேலும் ஈசன் ஆட்சி பொறுப்பை இவரை அல்லவா ஏற்றுக்கொள்ள ஆணை இட்டார் . எல்லாம் அவன் பொறுப்பு . அவன் பார்த்துக்கொள்வான் என்று மௌனமாக கோவிலுக்கு கிளம்பினார் . இறந்து அரசனுக்கு பிள்ளை இல்லாத காரணத்தால் அடுத்த பட்டத்திற்கு வருவது யார் என்ற கேள்வி கிளம்பியது .
No comments:
Post a Comment