Monday, 11 December 2017

நேரம்   செல்ல   செல்ல   எல்லா   உயிரினங்களும்   இசையில்   மயங்கி   ஆனாயரை   சூழ்ந்து   கொண்டு      அனுபவிக்க   தொடங்கின .  எல்லா  சிறிய   பெரிய   ஜீவராசிகளும்   பகையை   மறந்து   ஒரே   மனதோடு   இசையை   தங்களை   மறந்து   ரசித்துக்கொண்டிருந்தன .  அவர்   இசை   இப்போது  விண்ணவர்களையும்    கவர்ந்தது.  தேவர்கள் ,  கந்தர்வர்கள் ,  கின்னரர்கள்   எல்லோரும்   கூடினர் .  மண்ணும்   விண்ணும்  எங்கும்   ஆனந்த   வெள்ளம் .  உமை   அன்னையும்   இசையில்   மயங்கி   ஈசனோடு   அங்கு  வந்தார் .  ரிஷபாரூடராக   அவர்கள்   காட்சி   தந்தனர் .  ஆனாயரின்   ஆனந்தத்திற்கு   அளவே   இல்லை .  அப்போது   ஈசன்   'அன்பனே   உன்   இந்த   குழலோசையை   என்   அடியார்கள்   கேட்க   வேண்டாமா?   இப்படியே   வா   என்று   அழைத்து   தன்னுடன்   சேர்த்துக்கொண்டார் 

No comments:

Post a Comment