நேரம் செல்ல செல்ல எல்லா உயிரினங்களும் இசையில் மயங்கி ஆனாயரை சூழ்ந்து கொண்டு அனுபவிக்க தொடங்கின . எல்லா சிறிய பெரிய ஜீவராசிகளும் பகையை மறந்து ஒரே மனதோடு இசையை தங்களை மறந்து ரசித்துக்கொண்டிருந்தன . அவர் இசை இப்போது விண்ணவர்களையும் கவர்ந்தது. தேவர்கள் , கந்தர்வர்கள் , கின்னரர்கள் எல்லோரும் கூடினர் . மண்ணும் விண்ணும் எங்கும் ஆனந்த வெள்ளம் . உமை அன்னையும் இசையில் மயங்கி ஈசனோடு அங்கு வந்தார் . ரிஷபாரூடராக அவர்கள் காட்சி தந்தனர் . ஆனாயரின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை . அப்போது ஈசன் 'அன்பனே உன் இந்த குழலோசையை என் அடியார்கள் கேட்க வேண்டாமா? இப்படியே வா என்று அழைத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார்
No comments:
Post a Comment