இரண்டாவது கனியை உண்ட பரமதத்தன் மிக அதிசயமடைந்தான் . அந்த கனி அவன் இதுவரை உண்டிராத அலாதி சுவையுடன் இருக்க கண்டான் . அதிசயித்து புனிதவதியிடம் காரணம் வினவினான் . அவளும் மிகுந்த தயக்கத்துடன் நடந்ததை கூரினாள் . நடந்ததை கேட்டு அதிசயித்து அவளை கண்டான் . அவளை மறுபடி வரவழைக்க கூறுகிறான் அவளால் எடுக்கமுடிந்த அக்கனி அவனால் தொடக்கூட முடியவில்லை . அதிர்ச்சி அடைந்த அவனுக்கு புனிதா சதாரண மானிட பெண்ணாக காண முடி யவில்லை , அவள் அன்னையாக தோன்றினாள் . மனைவியாக அவளை நினைக்கவே கூசினான் . அவளை அன்னையாக வணங்க முற்பட்டான் .
Thursday 26 May 2016
Wednesday 18 May 2016
punitha
புனிதவதியும் பரமதத்தனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தனர் . ஒரு நாள் பரம தத்தன் இரு மாங்கனிகளை புனிதவதியிடம் கொடுத்து தான் வந்து உண்பதாக சொல்லி சென்றான் . அவளும் அவைகளை பெற்றுக்கொண்டு உள்ளே வைத்தாள் . அப்போது ஒரு சிவனடியார் வந்து வாசலில் நின்று பசிக்கு உணவளிக்க கூறினார் . புனிதவதி தன் கணவர் கொடுத்தா கனிகளில் ஒன்றை சிவனடியார்க்கு மிக்க மகிழ்க்ச்சியுடன் ஈந்தாள் . சிறிது நேரத்தில் அவள் கணவன் வந்து அக்கனியை கொண்டு வருமாறு கூறினான் . அவளும் இருந்த ஒரு கனியை கொண்டவந்து கொடுத்தாள் . அதை உண்ட கணவன் அதன் ருசியில் மயங்கி மற்ற ஒன்றையும் கொண்டு வருமாறு கூறுகிறான் . திடுக்கிட்ட புனிதவதி ஈசனிடம் மன்றாடுகிறாள் . ஈசன் மற்றொரு கனி தந்து மறைகிறார் . மகிழ்ச்சியுடன் அதை கணவனுக்கு தருகிறாள் .
Thursday 12 May 2016
11 திருமுறையில் அடுத்த பாடல்களை பாடியவர் காரைக்கால் அம்மையார் . காரைக்கால் கிழக்கு தமிழகத்தில் கடற்கரையில் உள்ள வாணிப துறைமுகம் .அத்துறைமுகம் வெளிநாடுகளுடனும் வியாபாரம் நடைபெற்று வந்த வளம் மிகுந்த இடம் . அங்கு தனதத்தர் என்பவர் மிக செல்வாக்கு உடைய வணிகர் அவர் தவம் இருந்து பெற்ற ஒரே மகள் புனிதவதி . அக்குழந்தை சிறு வயது முதல் அந்த ஆடவல்லான் இடத்தில் மிக பக்தி கொண்டவளாக இருந்தாள் .அவர் ஆடலில் மிககவரப்பட்டவளாக இருந்தாள் . அவரை பற்றி பேசுவதே அவளுக்கு மிக ஆனந்தம் அளித்தது
. அவளும் வளர்ந்து அழகு பண்பு , பக்தி எதிலும் சிறந்து திகழ்ந்தாள் . அவள் பெற்றோர் அவளை நாகபட்டினத்தை சேர்ந்த பரமதத்தன் என்னும் வணிக வாலிபனுக்கு மணமுடித்து வைத்தனர் .
. அவளும் வளர்ந்து அழகு பண்பு , பக்தி எதிலும் சிறந்து திகழ்ந்தாள் . அவள் பெற்றோர் அவளை நாகபட்டினத்தை சேர்ந்த பரமதத்தன் என்னும் வணிக வாலிபனுக்கு மணமுடித்து வைத்தனர் .
Saturday 7 May 2016
திருஆலவாய் அடிகள் என்கிற சிவபெருமான் எழுதிய ஓலையுடன் துவங்கும் இத்திருமுறை இன்னும் பதினொன்று ஆசிரியர்களை கொண்டது . அவர்கள் ஈசனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் , ஐயடிகள் காடவர்கோன் , சேரமான் பெருமானார் ,நக்கீரர் ,கல்லாடர் , கபிலர் , பரணர் , இளம்பெருகான் அடிகள் , அதிராவடிகள் , பட்டினத்தடிகள் மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆவர் .
Wednesday 4 May 2016
இப்போது நாம் பதினோராம் திருமுறையை காண்போம் .இதில் ஒரு அற்புதம் என்ன என்றால் இதன் முதல் முதல் பாடல் ஈசனே எழுதியது . அது ஒரு கடித வடிவில் உள்ளது . அன்பே வடிவான ஈசன் திரு ஆலவாய் உடையார் என்ற நாமத்துடன் தன் பக்தன் அரசன் சேரமான் பெருமானார்க்கு எழுதிய ஓலை . கடிதம் எழுதும் பாங்கோடு அவர் எழுதும் தம்மை முதலில் அறிமுகம் செய்து கொண்டு பின்பு யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவரை அறிமுகம் செய்துவி ட்டு பின்பு விஷயத்தை தெரிவிக்கிறார் . அதாவது அவருடைய பரம பக்தனான பாணபத்தருக்கு பொருள் உதவி செய்ய அரசன் சேரமானை வேண்டுகிறார் . அதுவே கடிதத்தின் சாரம் .+
Subscribe to:
Posts (Atom)