Wednesday, 12 April 2017

மறுநாள்   நவமி   உத்சவம் .  ஊரே  திரண்டு   உத்சவத்தை   சிறப்பாக   கொண்டாட   ஆயத்தம்   செய்த   வண்ணம்   இருந்தது .  சிவகாமியாண்டார் அதிகாலையே   எழுந்து   நீராடி   உடலெல்லாம்   விபூதி   பூசி   ஈசன்  பஞ்சாக்ஷரத்தை   ஓதியவாறு   மலர்களை   கொய்து   மாலையாக   கட்டி    அம்மாலைகளை   ஒரு   கூடையில்   வைத்து   தோளில்   மாட்டிக்கொண்டு   இறைவனுக்கு   சாற்ற   கோவிலை   நோக்கி   புறப்பட்டார் .  மறுநாள்   உத்சவத்தில்   பங்கேற்க   மன்னனின்   பட்டத்து   யானையை  காவலர்கள்   ஆற்றில்   குளிப்பாட்டி   அழைத்து   வந்து   கொண்டிருந்தனர் .  யானை   மதத்தில்   இருந்தது .  இதை   உணராத   காவலர்கள்   அதை   வீதி   வழியே   ஒட்டினர் .   சிவகாமியாண்டார்  தோளில்    மலர்க்கூடையுடன்   சிவநாமத்தை   ஜபித்தவாறு   சென்று   கொண்டிருந்த   தெருவில்   நுழைந்த   யானை   அவரை   ஒரு   தள்ளு   தள்ளி விட்டு   பூக்கூடையையும்   தூக்கி   எறிந்து   நாசம்   செய்து   விட்டு   போய்விட்டது .  யானை   பாகனும்   அதை   கண்டு   கொள்ள வில்லை . 

No comments:

Post a Comment