Thursday, 18 May 2017

குறிப்பிட்டபடி   குறிப்பிட்ட   இடத்தில்   ஏனாதியரும்   அதிசூரனும்   கத்தி   கேடயத்துடன்   சண்டைக்கு   தயாரானார்கள்   அதிசூரன்   தன்   முகத்தை   கேடயத்தால்   மறைத்து   கொண்டிருந்தான் .      இருவரும்   கத்தியை   சுழற்றிக்கொண்டு   சண்டை   இட்டனர்   அதிசூரன்   முகத்தை   மறைத்தபடியே   சண்டை   இட்டான் .   ஏனாதியார்   வெற்றி   பெரும்   நிலையில்   கத்தியை   ஓங்க   எத்தனிக்கையில்   திடீரென்று   அதிசூரன்   தந்திரமாக   கேடயத்தை   விலக்கினான் .   ஏனாதியார்   திடுக்கிட்டார் .  அவன்   முகத்தில்   பட்டையாக   திருநீறு   பூசி  இருந்தான்   அவனுக்கு   ஏனாதியரை   நன்றாக   தெரியுமாதலால்   சிவனடியார்களை   அவர்   நிச்சயமாக   பெரிதும்   மதிப்பார்   என்றும்   அவர்களுக்கு   தீங்கு   ஏதும்   செய்யமாட்டார்  என்றும்   உணர்ந்திருந்தான் .  ஏனாதியார்   அவன்   சிவனடியாராக   மாறி   விட்டான்   என்று   தீர்மானித்து   கத்தியை   கீழே   போட நினைத்தவர்   ஆயுதமற்றவனை   கொன்றான்   என்ற   பழி சொல்   சிவனடியாராக   மாறியவனுக்கு   வந்துவிட   கூடாதென்று    கத்தியை   கையில்   பிடித்து   கொண்டு   நின்றார் .  அதுவே   நல்ல   தருணம்   என்று   அதிசூரன்   கத்தியால்   குத்தி  அவரை   மாய்த்தான் .  உயிர்   துறக்கும்   தருவாயில்   ஈசன்   ஏனாதியருக்கு   காட்சி   கொடுத்து   தன்னுடன்   சேர்த்துக்கொண்டார் .

No comments:

Post a Comment