Wednesday, 29 March 2017

ஈசன் சிரித்து   கொண்டே   சென்றார் .  அமர் நீதியார் அதை   பயபக்தியுடன்   பத்திரமாக   ஓர்   இடத்தில்   வைத்தார் .  சிறிது   நேரத்தில்   நல்ல   மழை   பெய்ய   ஆரம்பித்தது .  சிறிது   நேரத்திற்கு   பிறகு   அடியார்   வந்தார் .  தெப்பலாக   நனைந்திருந்த   அவர்   தன்னை   நன்றாக   துடைத்துக்கொண்டு   பிறகு  அமர் நீதியாரை  பார்த்து   நான்   கொடுத்து   சென்ற   கோவணத்தை   கொண்டுவர   சொல்கிறார் .  அவரும்   இதோ எடுத்து   வருகிறேன்   என்று   சொல்லி   உள்ளே   செல்கிறார் .  ஆனால்   என்ன  அதிர்ச்சி !  அவர்   வைத்த   இடத்தில்   அதை   காணவில்லை .  எங்கு   தேடியும்   கிடைக்கவில்லை .  ஈசன்    வெளியிலிருந்து   எத்தனை   நேரம்   இவ்வாறு   ஈரத்துடன்   நிற்பது   என்று   கோபத்துடன்   வினவினார் .  அமர்நிதியார்    உடல்   பதறியது .  அவரை   வெகு  நேரம்    காக்க   வைக்கவும்   முடியாது .  அவசரமாக   ஒரு  புதிய   பட்டு   கோவணத்தை   எடுத்து    வந்து   கொடுத்தார் .  பயபக்தியுடன்   மன்னிக்க   வேண்டும்    நான்   வைத்த   இடத்தில்   அதை   காணவில்லை .  எங்கு   தேடியும்   கிடைக்கவில்லை   என்று   பதற்றத்துடன்   கூறினார் 

No comments:

Post a Comment