இதனிடையில் நாணனும் காடனும் திண்ணனின் மாற்றத்தை அவன் தந்தை நாகனிடம் விவரமாக கூறினர் . பதறிப்போன நாகன் விரைந்து தேவராட்டி மற்றும் மனைவியுடன் காளத்தி மலையை நோக்கி ஓடினான். என்ன முயற்சி செய்தும் திண்ணன் திரும்பி கூட பார்க்கவில்லை . நாகன் ஏமாற்றமும் வருத்தமும் வாட்ட ஊர் திரும்பினான் . தேவராட்டியின் மந்திரதந்திரம் எதுவும் அவனிடம் பலிக்கவில்லை . திண்ணன் ஐயனிடம் மனமுருக சம்பாஷித்து கொண்டிருந்தான் . அவரிடம் தான் இரவெல்லாம் கண்விழித்து அவருக்கு காவல் இருக்கப்போவதாகவும் அவர் கவலை இன்றி நித்திரை செய்யலாம் என்று கூறிக்கொண்டிருந்தான் . அண்டங்களையெல்லாம் தன்னுள் வைத்து காத்து ரட்ஷிக்கும் எம்பெருமானுக்கு திண்ணன் துணை தேவைப்பட்டது . இதுவும் ஈசன் திருவிளையாடல் .
No comments:
Post a Comment