Wednesday, 25 October 2017

இதனிடையில்   நாணனும்   காடனும்   திண்ணனின்   மாற்றத்தை   அவன்   தந்தை   நாகனிடம்   விவரமாக   கூறினர் .  பதறிப்போன   நாகன்   விரைந்து   தேவராட்டி   மற்றும்   மனைவியுடன்  காளத்தி   மலையை   நோக்கி   ஓடினான்.  என்ன   முயற்சி   செய்தும்   திண்ணன்   திரும்பி   கூட   பார்க்கவில்லை .    நாகன்   ஏமாற்றமும்   வருத்தமும்   வாட்ட   ஊர்   திரும்பினான் .     தேவராட்டியின்   மந்திரதந்திரம்   எதுவும்   அவனிடம்   பலிக்கவில்லை .  திண்ணன்   ஐயனிடம்   மனமுருக   சம்பாஷித்து   கொண்டிருந்தான் .  அவரிடம்   தான்   இரவெல்லாம்   கண்விழித்து   அவருக்கு   காவல்   இருக்கப்போவதாகவும்   அவர்   கவலை   இன்றி   நித்திரை  செய்யலாம்   என்று   கூறிக்கொண்டிருந்தான் .  அண்டங்களையெல்லாம்   தன்னுள்   வைத்து   காத்து   ரட்ஷிக்கும்   எம்பெருமானுக்கு   திண்ணன்   துணை   தேவைப்பட்டது .  இதுவும்   ஈசன்   திருவிளையாடல் .

No comments:

Post a Comment