Friday, 30 June 2017

திண்ணன்   பெரியவர்களை   வணங்கிவிட்டு   தன்னை   தயார்   செய்து   கொண்டு   வேட்டைக்கு   புறப்பட்டான் .  அவனுடன்   சிறந்த   வில்லாளிகளான   நாணன்   காடன்   இருவரும்   உடன்   செல்ல   தயாரானார்கள் .  தாரை   தப்பட்டைகள்   முழங்க   வேட்டைக்கு   புறப்பட்டனர்.  தாரை   தப்பட்டை   சப்தத்தை   கேட்ட   மிருகங்கள்   வெளியே   ஓடிவர   தொடங்கின .  இவர்களும்   விருப்பப்படி   மிருகங்களை   வேட்டை   ஆடினார் .  திடீரென   ஒரு   பெரிய   காட்டு   பன்றி   குறுக்கே   ஓடி   வந்தது .  திண்ணன்   அதை   கண்டதும்   அதை   துரத்தி   வேட்டை   ஆட   முற்பட்டான் .அதுவும்   வெகு   தூரம்   ஓடி   அலைக்கழித்தது .  

No comments:

Post a Comment