Friday, 10 March 2017

விரிபொழில்சூழ்   குன்றையார்   விறண்மிண்டற்கு   அடியேன் !
பரசுராம   க்ஷேத்திரமான   மலை   நாட்டில்  திருச்செங்குன்று  எனும்    ஊரில்   வேளாளர்   குலத்தில்  பிறந்தவர்   விறன்மிண்டர் .  சிறு   வயது   முதலே   சிவபெருமான்   மீது   மிகுந்த   பக்தி   கொண்டிருந்தார் .   தினமும்   சிவாலயம்   செல்வதையும்    அவர்   நாமங்களை   சதா   உச்சரிப்பதையும்  தவறாமல்   செய்து   வந்தார் .  வயது   ஏற   ஏற   அவர்   பக்தியும்   வளர்ந்தது .  சிவனடியார்கள்   மீது   மிகுந்த   பக்தி   கொண்டு   அவர்களுக்கு  தொண்டு   செய்வதை  தன்   கடமையாக   கொண்டார் .   சிவபெருமானுக்கு   தன்னை   தொழுபவர்களை   விட   தன்   அடியார்களை   தொழுபவர்கள்   மீது   கருணை   அதிகம்   என்பதை   அவர்   உணர்ந்திருந்தார் . அடியார்களை   கண்டு   விட்டால்   அவர்களை   தொழுத   பின்பே   ஈசனை   தொழுவார் .

No comments:

Post a Comment