அம்மையே என ஈசனால் அழைக்கப்பட மெய்சிலிர்த்து காரைக்கால் அம்மையார் அப்பா! என்று அவர் காலடியில் வீழ்ந்தாள் . மகிழ்ந்த ஈசன் வேண்டிய வரத்தை கேட்க பணிக்கிறார். அம்மையார் பிறவாமை வேண்டுகிறார் , அப்படி பிறந்து விட்டால் உன்னை என்றும் மறவாமை வேண்டும் .இன்னும் வேண்டும் அரவா! நான் பாடி நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க ' என வேண்டுகிறாள் . மனமுவந்த ஈசன் அவரை ஆலன்காட்டிற்கு செல்லுமாறு அங்கு தம் ஆனந்த நடனத்தை காணலாம் என்று உரைக்கிறார் . மனமகிழ்ந்த அம்மையார் தலையாலேயே நடந்து ஆலங்காட்டை அடைகிறார் .அங்கு ஈசன் அவளுக்கு காட்சி அளிக்கிறார் 'கொங்கை திரங்கி நரம்பெழுந்து ' எனும் மூத்த திருபதிகம் பாட ஐயன் நடனமாடுகிறார் . அம்மை ஆனந்தத்திற்கு எல்லை ஏது ? அம்மையார் திருஞான சம்பந்தருக்கு முன்பு இருந்தவர் . அவரே முதலில் பதிகம் பாடியவர் . ஆதலால் இது மூத்த பதிகம் ஆகிறது .அவர் பாடிய மற்றவை "அற்புத திருவந்தாதி , திரு இரட்டை மணிமாலை ஆகும் .
Friday 17 June 2016
Tuesday 14 June 2016
கணவன் வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்த புனிதவதி கணவனுக்கு மகிழ்ச்சி அளிக்காத தன் அழகை அவள் வெறுத்தாள் . ஈசனை துதித்து தன் அழகை அழித்து தன்னை எலும்பு கூடாக மாற்ற வேண்டுகிறாள் . ஈசனும் அவ்வாறே அவளை மாற்றுகிறார் . எல்லோரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றனர் . புனிதவதி அவர்களை தேற்றிவிட்டு அந்த ஆடவல்லான் கோயில்களை தரிசித்து அவன் புகழை பாட விழைகிறாள் . பல இடங்களுக்கு சென்று தரிசித்த பின் அவள் கைலாயம் செல்ல ஆவல் கொண்டு ஐயன் வாழும் இடத்தை காலால் மிதிக்க மனம் ஒப்பாமல் தலையாலேயே நடந்து செல்கிறாள் . இத்தகைய பக்தியும் மன உறுதியும் ஈசனையும் தேவியையும் அதிசயிக்க வைக்கிறது .அம்மையே ! என்று வரவேற்கிறார்கள் . இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும் .
Saturday 11 June 2016
ஆனந்தம் அடைந்த புனிதவதியின் பெற்றோர் அவளை அலங்கரித்து பல்லக்கில் உட்கார வைத்து சீர்வரிசைகளுடன் பரமதத்தன் வாழும் இடத்திற்கு அழைத்து செல்ல முற்பட்டனர் . விஷயம் அறிந்த பரமதத்தன் தெய்வத்திற்கு இணையாக தான் கருதும் புனுதவதி தன்னை தேடி வருதல் பாவமாக கருதி தன் மனைவியையும் குழந்தையையும் கூட்டி சென்று மூவரும் அவள் காலடியில் வீழ்ந்தனர் . எல்லோரும் திகைத்து மனைவிவை வணங்குவதன் காரணம் கேட்டனர் . பரமதத்தன் அவள் சாதாரண பெண்ணல்ல தெய்வத்திற்கு சமமானவள் எல்லோரும் வணங்க வேண்டியவள் என்று கூறுகிறான் . தன் பெண்ணிற்கு அவள் பெயர் சூடி இருப்பதையும் கூறுகிறான் .எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர் .
Wednesday 8 June 2016
Thursday 2 June 2016
paramathaththan
பரமதத்தன் இத்தகைய மனநிலையுடன் வாழ முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறான் . யோசித்து பிறகு நாட்டைவிட்டெ வெளியேறி வியாபாரம் தொடங்க முற்பட்டான் . அதில் அமோக வெற்றி அடைந்து தனவந்தன் ஆனான் . பிறகு பிறந்த நாட்டை காண ஆவல் கொண்டான் ஆனால் காரைக்கால் செல்ல மனமில்லாமல் பாண்டிய நாட்டில் ஒரு துறைமுகத்தில் குடியேறினான் . அங்கு வேறொரு பெண்ணை மணந்து கொண்டான் . அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு புனிதவதி என்று பெயர் சூட்டினான் . காரைக்காலில் புனிதவதி கணவனை காணாமல் மிக வேதனை கொணடவளாக ஈசனே கதி என்று வாழ்ந்து வந்தாள் .
Subscribe to:
Posts (Atom)