திண்ணனுக்கு ஐயன் மீது அன்பு அளவு கடந்து பெருக்கெடுத்து ஓடியது .அந்தணர் செய்த்து ஈசனுக்கு பிடித்தமானதாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து தானும் அவ்வாறு செய்ய முடிவு செய்தான் . அப்போது அவனுக்கு ஐயன் பசியோடு இருப்பான் என்ற நினைவு வாட்டி எடுத்தது . உடனே காடன் தனக்காக சமைத்து வைத்திருக்கும் பன்றி மாமிசம் நினைவுக்கு வந்தது .. உடனே ஒரே ஓட்டமாக காடன் இருக்குமிடம் வந்தான் . நாணன் அதற்குள் திண்ணன் நிலையை சொல்கிறான் . திண்ணன் வேகவைத்த மாமிச துண்டங்களை ருசித்து எலும்பை நீக்கி துண்டங்களை ஒரு இலையில் பத்திரப்படுத்துகிறான் . மற்ற இருவரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் ..
Wednesday 12 July 2017
Monday 10 July 2017
மலையை நெருங்க நெருங்க திண்ணனின் உள்ளத்தில் இன்ப உணர்வு அதிகரித்து கொண்டே போனது . மலை உச்சியை அடைந்து அங்கு ஒரு மரத்தடியில் லிங்க வடிவில் குடடுமித்தேவரை கண்டு அவன் உடல் சிலிர்த்தது . கட்டி அனைத்து கண்ணீர் சொரிந்தான் . சுற்றிலும் காடாக இருப்பதை கண்டு உள்ளம் பதறினான் . இங்கேயா தனியாக எப்படி இருக்கிறாய் ? என மனம் மிக நொந்து வினவினான் . லிங்கத்தின் சிரசில் பூவும் வில்வமும் இருக்க கண்டு நாணனை அதை பற்றி வினவினான் . நாணன் முன்பு திண்ணனின் தந்தையுடன் தான் வந்த போது ஒரு பெரியவர் லிங்கத்தை நீரால் அபிஷேகம் செய்து மலர்களை வைத்ததாக கூறினான் . திண்ணன் ஒரு வேளை அதுதான் சரியான முறையாக இருக்க வேண்டும் என்று எண்ணி தானும் அவ்வாறே செய்ய எண்ணினான்
Thursday 6 July 2017
திண்ணன் ஓய்வெடுக்க விரும்பி நண்பர்களை அழைத்து தான் பன்றியை சமைத்து உணவு தயாரித்து உண்பதற்க்கு ஏற்ற நீர் வசதி உள்ள இடம் எங்கு இருக்குமென வினவினான் . நாணன் பக்கத்தில் பொன்முகலி நதி ஓ டுவதாகவும் அங்கு செல்லலாம் என்று கூறினான். மூவரும் பன்றியை சுமந்து கொண்டு ஆற்றங்கரையை நெருங்கினர் . திண்ணன் ஆற்றின் மறுபக்கம் இருந்த குன்றை கண்டு விவரிக்க முடியாத உணர்ச்சிக்கு ஆளானான் . அவன் நாணனை கூப்பிட்டு குன்றை காட்டி அதை பற்றி கேட்டான் . நாணன் அது காளத்தி மலை என்றும் அக்குன்றின் மேல் குடுமித்தேவர் வாசம் செய்வதாகவும் கூறினான் . அக்குன்றை கண்ட திண்ணன் மேனி சிலிர்க்க கண்டான் . தான் புது மனிதனாக மாறி விட்டது போல் உணர்ந்தான் . நாணனை கூப்பிட்டு தன்னை அங்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டான் . கா டனை பன்றியை சமைக்க சொல்லி விட்டு நாணனும் திண்ணனும் ஆற்றை கடந்து அம்மலையை நோக்கி சென்றனர் .
Monday 3 July 2017
அந்த பன்றி வெகு தூரம் ஓடி அலைக்கழித்தது . திண்ணனும் அதை துரத்தியபடி தன் கூட்டத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்டான் . சிறிது நேரத்தில் பன்றி களைத்துப்போய் நின்று விட்டது . திண்ணன் அதை அம்பை எய்து கொல்ல விரும்பாமல் தன் குத்துவாளால் அதை எதிர்த்து போராடி கொன்றான் . அவனுடன் வந்த இரு நண்பர்களும் அவனை வெகுவாக பாராட்டினார்கள் . களைத்து போன மூவரும் ஓய்வெடுக்க விரும்பினார் .
Subscribe to:
Posts (Atom)