மதுரகவிஆழ்வார் மறைந்த சில காலம் பிறகு பிரபந்தங்கள் மறைந்து போயின .சில நூரற் றாண்டுகள் கடந்து பின் நாதமுனிகள் எனும் பெரும் வைணவர் தற்செயலாக நம்மாழ்வார் பாடல் ஒன்றை கேட்க நேர்ந்தது . பாட்டின் முடிவில் "இவை மாறன் சடகோபன் பாடிய ஆயிரத்தில் ஒரு பத்தாம் " என்று முடிந்தது கேட்டு ஆச்சர்யம் அடைந்தார் . மற்ற பாடல்களை பற்றீ யாரும் அறியவில்லை . நாதமுனிகள் பலவாறு தி ரி ந்து மதுரகவிகள் வாழ்ந்த இடத்தை அடைந்தார் . அங்கு மதுரகவிகள் பாடிய 11 பாக்களை கிடய்க்க பெற்றார் . அவைகளை 12000 முறை துதித்து பாடி னார் . அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது . நம்மாழ்வாரே தோன்றி 4000 பாக்களையும் அவருக்கு அளித்தார் . பெருமகிழ்ச்சி கொண்டு அவைகளை பெற்றுகொண்டு நாதமுநிகளார் தொகுத்து நமக்கு அளித்தார் .
Sunday 27 January 2013
Wednesday 23 January 2013
நம்மாழ்வார் பெருமாளின் அவதாரமாக கருதப்படுகிறார் . மதுரகவி ஆழ்வார் மற்றோர் பெரும் ஞாநி . அவர் உயரந்த ஒரு குருவை தேடி வடநாட்டில் அலைந்து கொண்டிருந்தார் . அப்போது வானில் ஒரு ஒளி தோ ன்றி யது . அதை பின் தொடரந்து வெகு வாக அலைந்து பின் ஆழ்வார்திருநகர் வந்து அடைந்தார் . மதுரகவிஆழ்வார் நம்மாழ்வார் குடியருக்கும் மரத்தை கண்டார் . அவரை பலவிதமாக துதித்து பாடி அவரிடமிருந்து எல்லா பிரபந்த பாக்களை பெற்றார் . அவருடைய ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை . அவர் நம்மாழ்வாரை துதித்து '" கண்ணிணுள் சிறுதாம்பு " என தொடங்கும் 11 பாக்களை பாடினார்
Subscribe to:
Posts (Atom)