இப்போது ஈசன் தன் அன்பனின் பக்தியை சோதிக்க எண்ணம் கொண்டார் . தன் பக்தனின் பெருமை உலகு அறிய வேண்டாமா ? சைவ சமயத்தில் ஒரு சாரார் சிவபெருமானை எலும்பு மாலை தரித்த மூர்த்தியாக த்யானிப்பர் . அவர்கள் நெற்றியில் திருநீறும் தலையில் கேசத்தை முடித்து அதில் எலும்பு செருகிக்கொண்டும் மார்பில் மயிரினால் ஆன பூணுலும் அணிந்திருப்பர் . சிவபெருமான் அக்கோலத்தில் திருமண மண்டபத்தை அடைந்தார் . சிவனடியார் வந்திருப்பது கண்டு மானக்கஞ்சாறர் ஓடோடி வந்து பக்தியோடு அவரை வணங்கி வரவேற்றார் . ஈசன் ஒன்றும் அறியாதவர்போல் இங்கு என்ன விசேஷம் ? என வினவினார் . மானக்கஞ்சாறர் தன் மகள் விவாகம் நடக்கப்போவதாக சொல்லி அவளுக்கு ஆசி வழங்குமாறு கூறி அவளை அழைத்து அடியாரை வணங்க கூறினார் . அவளும் அவர் காலில் வீழ்ந்து வணங்கினாள் . நீண்ட அவள் கூந்தலை கண்டு ஈசன் ஆஹா இந்த கூந்தல் பூணுலுக்கு ஏற்றதாக இ ருக்கும் என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் மானக்கஞ்சாறர் தன் வாளை உருவி பெண்ணின் கேசத்தை வெட்டி எடுத்து அடியார் கையில் கொடுத்தார் . அவர் பெண்ணும் முகத்தில் புன்னகை மாறாமல் தன் தந்தை செயலுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் முகமலர்ச்சியுடன் அவர் செயலை ஏற்றுக்கொண்டாள் .
No comments:
Post a Comment