சேரமானார் 11 திருமுறையில் 169 முதல் 301 வரை உள்ள பாடல்களை பாடியுள்ளார் . பொன்வண்ணத்தந்தாதி , திருவாரூர் மும்மணிக்கோவை மேலும் கைலாய ஞான உலா ஆகும். சுந்தரரை காண திருவாருவர் சென்ற போது ஈசன் சன்னதியில் பாடியது மும்மணிக்கோவை . சுந்தரர் ஐராவதம் யானையில் கைலை செல்கையில் அவரை தொடர்ந்து தன் குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி தொடர்ந்து கைலாயம் சென்றது அறிவோம் . அப்போது நொடியில் கைலைநாதரை துதித்து அவர் இயற்றி பாடியது கைலாய ஞான உலா . இவ்வாறு நொடியில் பாடல் இயற்றி பாடுபவரை ஆசு கவி என்பர் . இவ்வாறு பெருமைகள் பெற்ற இவரை எவ்வாறு போற்றுவது ? வார்த்தைகளே இல்லை அவரது குரு பூஜை ஆடி மாதத்து ஸ்வாதி நக்ஷத்திரமாகும் .
Sunday 31 July 2016
Tuesday 26 July 2016
இந்த திருமுறையின் முதல் பாடல் ஈசனால் எழுதப்பட்ட கடிதம் என்றும் அது ஆலவாய் ஈசன் சேரமான் பெருமானுக்கு எழுதியது என்பதையும் முன்பே குறிப்பிட்டிருந்தோம் . அக்கடிதத்தை கண்ட சேரமான் எத்தனை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாயிருப்பார் என்று சொல்லத்தேவை இல்லை . அவர் இன்பத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார் . தனக்கு சொந்தம் என்று உள்ள அத்தனை வஸ்த்துக்களையும் மிக்க மகிழ்ச்சியோடு கொண்டு நிரப்பி விட்டார் . ஏழை பரம சிவ பக்தனான பாண பத்தர் வாயடைத்து நின்று விட்டார் . அவர் தனக்கு தேவையான ஒருசில பொருட்களை எடுத்துக்கொண்டு நன்றி சொல்லி புறப்பட்டார் . ஆனால் சேரமான் அவரை தம் யானையில். ஏற்றி வழி அனுப்பி வைத்தார்
Sunday 24 July 2016
Saturday 23 July 2016
சிறந்த ஆடலரசன் பக்தரான சேரமானுக்கு பூஜை முடித்ததும் அவரின் சலங்கை ஒலி கேட்கும் . அவர் பரவசமடைவார் . ஒரு நாள் அதை கேட்காததால் அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து தன்னை தானே மாய்த்துக்கொள்ள முனைந்தார் . கருணைக்கடலான ஈசன் அவரை தடுத்து தான் சுந்தரருடைய பாடல் கேட்டதால் அதில் மயங்கி காலதாமதம் செய்துவிட்டதாக கூறுகிறார் . ஈசன் உள்ளத்தில் அவர்கள் இருவரையும் சந்திக்க வைக்கும் ஆவல் உண்டாயிற்று .
Tuesday 19 July 2016
ஒருநாள் சேரமான் பட்டத்து யானை மேல் சென்று கொண்டிருந்த போது ஒரு சலவை தொழிலாளி வந்து கொண்டிருந்தான் . அவன் உடலெல்லாம் சுண்ணாம்பு நீரால் வெளுத்து காணப்பட்டது . சேரமான் அதை திருநீறு என்று எண்ணிக்கொண்டு யானையை விட்டு இறங்கி அவன் காலடியில் விழுந்தான் . திகைப்படைந்த தொழிலாளி தான் சாதாரண சலவை தொழிலாளி என்று வற்புறுத்தியும் அரசன் காதில் அது விழவே இல்லை .அவனுடைய பக்தியின் ஆழம் வியக்கத்தக்கது .
Monday 11 July 2016
நாம் முன்பே சுந்தரர் வாழ்க்கை வாழலாற்றில் இவரை சந்தித்திருக்கிறோம் . இவருடைய பெருமையும் அறிந்திருக்கிறோம் .சுந்தரர் 'சேரமான் தோழன் ' என அழைக்கப்பெற்றிருப்பதை கண்டோம் . இவருக்கு பூஜை முடித்ததும் ஈசனின் நடனத்தின் சிலம்பொலி தினமும் இவர் காதில் கேட்க்கும் என்றும் அறிவோம் . எல்லாவற்றிர்க்கும் மேலாக இந்த திருமுறையின் முதல் பதிகத்தில் ஈசனே தன் கைப்பட இவர்க்கு ஓலை எழுதி இருப்பதையும் கண்டோம் . இவர் சுந்தரருடன் சேர்ந்து கைலாயம் சென்றதையும் கண்டோம் . இத்தகைய பெருமை வாய்ந்த இவரை பற்றி அறிந்து கொள்வது நமக்கு பெரும் பாக்கியமே .
Saturday 9 July 2016
அடுத்து 169 முதல் 301 உள்ள பாடல்களை பாடியவர் சேரமான் பெருமானார் ஆவர் . சேரநாட்டில் திருவஞ்சைக்களம் என்னும் ஊரை தலைநகராக கொண்ட ராஜ்ஜியத்தை ஆண்டவர் .அவர் தந்தையும் சிறந்த சிவபக்தர் . சிவத்தொண்டு செய்ய விரும்பிய அவர் ராஜ்ஜிய பொறுப்பை மகனிடம் ஒப்படைத்து விட்டு யாத்திரை செல்ல விரும்பினார் . ஆனால் சேரமான் பெருமானார் அதை தன் சிவ தொண்டிற்கு இடையூறாக கருதினார் . ஈசனை துதித்து தன் மன கவலையை கூறினார் . ஈசன் அவருக்கு ஆசி கூறி அவருக்கு எல்லோருடைய மனதையும் அறியும் ஆற்றலையும் வழங்கினார் , செவ்வனே ஆட்சி புரிய ஆசி கூறினார் . இதன் காரணமாக இவர்க்கு கழற்றறிவார் எனும் பெயரும் உண்டாயிற்று . அவர் அரச பொறுப்பையும் ஏற்றார் .
Wednesday 6 July 2016
11 திருமுறையின் அடுத்த 24 வெண்பாக்களை பாடியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆவார் . அவர் பல்லவ மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் காஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர் . சிறந்த சிவபக்தர் . வேத சாஸ்த்திரங்களை நன்கு கற்றுணர்ந் தவர் . பல்லவ சாம்ராஜ்யத்தை பெருக்கி சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தவர் .அவர் ஆட்சியில் மக்கள் மட்டுமின்றி எல்லா ஜீவன்களும் மிக ஆனந்தமாக வாழ்ந்தனர் . ஆனால் அவர் மனம் மட்டும் எப்போதும் அந்த அம்பல கூத்தனை நாடியவாறே இருந்தது . ஆவலை அடக்க முடியாதவராய் ராஜ்ஜிய பாரத்தை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு சிவாலயங்களை தரிசிக்க பயணமானார் . தில்லை கூத்தனிடம் மனம் பறிகொடுத்தவராய் அவர் மீது பாடல்கள் புனைந்தார் . மேலும் பல ஆலயங்களில் ஐயனை தரிசித்து பாடல்கள் பாடி மனம் மகிழ்ந்தார் . இவ்வாறு சிவாலயங்களை தரிசித்து ஒரு ஐப்பசி மூலம் நாளில் இறைவன் அடி சேர்ந்தார் . 63 நாயன்மார்களில் இவரும் ஒருவர் ஆவார் .
Subscribe to:
Posts (Atom)