திண்ணன் ஓய்வெடுக்க விரும்பி நண்பர்களை அழைத்து தான் பன்றியை சமைத்து உணவு தயாரித்து உண்பதற்க்கு ஏற்ற நீர் வசதி உள்ள இடம் எங்கு இருக்குமென வினவினான் . நாணன் பக்கத்தில் பொன்முகலி நதி ஓ டுவதாகவும் அங்கு செல்லலாம் என்று கூறினான். மூவரும் பன்றியை சுமந்து கொண்டு ஆற்றங்கரையை நெருங்கினர் . திண்ணன் ஆற்றின் மறுபக்கம் இருந்த குன்றை கண்டு விவரிக்க முடியாத உணர்ச்சிக்கு ஆளானான் . அவன் நாணனை கூப்பிட்டு குன்றை காட்டி அதை பற்றி கேட்டான் . நாணன் அது காளத்தி மலை என்றும் அக்குன்றின் மேல் குடுமித்தேவர் வாசம் செய்வதாகவும் கூறினான் . அக்குன்றை கண்ட திண்ணன் மேனி சிலிர்க்க கண்டான் . தான் புது மனிதனாக மாறி விட்டது போல் உணர்ந்தான் . நாணனை கூப்பிட்டு தன்னை அங்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டான் . கா டனை பன்றியை சமைக்க சொல்லி விட்டு நாணனும் திண்ணனும் ஆற்றை கடந்து அம்மலையை நோக்கி சென்றனர் .
No comments:
Post a Comment