Thursday, 6 July 2017

திண்ணன்   ஓய்வெடுக்க   விரும்பி   நண்பர்களை   அழைத்து  தான்   பன்றியை   சமைத்து   உணவு   தயாரித்து   உண்பதற்க்கு   ஏற்ற   நீர்   வசதி   உள்ள   இடம்   எங்கு   இருக்குமென   வினவினான் . நாணன்   பக்கத்தில்   பொன்முகலி   நதி   ஓ டுவதாகவும்   அங்கு   செல்லலாம்   என்று கூறினான்.   மூவரும்   பன்றியை   சுமந்து   கொண்டு   ஆற்றங்கரையை   நெருங்கினர் .  திண்ணன்   ஆற்றின்   மறுபக்கம்   இருந்த   குன்றை   கண்டு   விவரிக்க   முடியாத   உணர்ச்சிக்கு   ஆளானான் .  அவன்   நாணனை   கூப்பிட்டு  குன்றை   காட்டி   அதை   பற்றி   கேட்டான் .  நாணன்   அது   காளத்தி   மலை   என்றும்   அக்குன்றின்   மேல்   குடுமித்தேவர்   வாசம்   செய்வதாகவும்   கூறினான் . அக்குன்றை   கண்ட   திண்ணன்   மேனி   சிலிர்க்க   கண்டான் .  தான்   புது   மனிதனாக   மாறி   விட்டது   போல்   உணர்ந்தான் . நாணனை   கூப்பிட்டு    தன்னை   அங்கு   அழைத்து   செல்லுமாறு   கேட்டுக்கொண்டான் .  கா டனை   பன்றியை   சமைக்க   சொல்லி விட்டு   நாணனும்    திண்ணனும்   ஆற்றை   கடந்து   அம்மலையை   நோக்கி   சென்றனர் .

No comments:

Post a Comment