Monday, 4 December 2017

வெகு நாட்களாய்   உணவு   அருந்தாத   நிலையில்   தாயனார்  உடல்   மிக   தளர்ந்து   போயிருந்தார் .  அவருடைய    மனைவி  பூஜைக்கு   தண்ணீர்   மற்ற   சிறிய   பொருள்களை   ஏந்தி   கொண்டு   பின்தொடர்ந்து   சென்று   கொண்டிருந்தார் .  அவர்கள்   சாலையை   தாண்டி   புல்வெளியில்  இறங்கி   நடக்க   தொடங்கினர் . புல் வெளியில்   தரை   சமனாக   இல்லாததாலும்   தாயனாரும்   சோர்ந்து   போயிருந்தாலும்   அவர்   கால்   தடுக்கி   விழ   பின்னே   வந்த   அவர்  மனைவி   அவர்   கீழே   விழாமல்   தாங்கி   கொண்டார் .  ஆனால்   துரதிஷ்டவசமாக   கூடை   மண்ணில்   வீழ்ந்து   அன்னம்   கீரை   மாவடு   யாவும்   மண்ணில்   வீழ்ந்தன .  மனமுடைந்த   தாயானார்   தான்   தினமும்   செய்து   வந்த  திருப்பணி   இன்று   செய்ய   முடியாமல்   போனது   கண்டு   நிலைகுலைந்து   போனார் . கதறினார்   தான்   பட்டினி   கிடந்தும்   தவறாமல்   செய்து   வந்த   இத்திருப்பணி   தவற   என்ன   காரணம்   என்ன   தவறு   செய்தேன் ?  என்று   ஈசனிடம்   புலம்பினார் .

No comments:

Post a Comment