Monday, 1 May 2017

எனாதிநாதன்  தன்   அடியார்க்கு   அடியேன் |

சிவனடியார்   சின்னம்   தரித்த   எதிரிக்கும்   அருளிய   பெருந்தகை   ஏனாதிநாதர்   ஆவர் . சோழ   நாட்டில்  எயினனுர்    என்றொரு   ஊர் .  அங்கு   வசிப்பவர்   ஏனாதி   எனும்   சிறந்த   சிவபக்தர் .  அவர்  வாள்   வித்தையில்   சிறந்தவர் .  வீரர்களுக்கு   வாள்   பயிற்சி   கொடுப்பது .  அவர்   தொழில் . அரசாங்கத்தில்   ஒரு   படை   பிரிவிற்கு   அவர்   தலைவர் .   வித்தை   கற்றுக்கொடுத்து   ஈட்டிய   பொருளில்   பெரும்   பகுதி   சிவனடியார்களுக்கே   செலவு   செய்தார் .. அவர்களுக்கு   சௌகரியங்கள்   செய்து   கொடுத்தார் .  அதனால்   அவர்   புகழ்   பரவியது .  அவரிடம்   பயிலும்   மாணவர்கள்    எண்ணிக்கை   கூடிற்று .  அவரைப்போல்   வாள்   வித்தை   பயிற்சி   அளிப்பவன்   அதிசூரன்   என்பவன் .  அவனுக்கு   ஏனாதியார்   புகழ்   ஓங்குவது   பெரும்   பொறாமையை   உண்டாக்கியது .   அவருடைய   புகழால்   இவருக்கு   மாணவர்கள்   வருகை   குறைந்து   வருமானமும்   குறைந்தது   

No comments:

Post a Comment