மன்னன் சமண மதத்தை தழுவியவன் ஆதலால் மக்களை சமண மதத்தை தழுவ கட்டாயப்படுத்தினான் . மறுப்பவர்களை கடுமையாக தண்டிக்கலானான் . சிவனடியார்கள் தங்கள் தொண்டினை செய்ய முடியாதவாறு பலவித தடைகளை செய்தான் . பூஜை செய்ய எவ்வித வசதியும் இல்லாமல் செய்தான் . மூர்த்தியாரையும் பாதிக்கும் வகையில் சந்தனம் விற்பதை தடை செய்தான் . அவர் பக்கத்து ஊர் சென்று சந்தனம் வாங்கி வந்து தன் கடமையை தொடர்ந்தார் . ஆனால் அதற்கும் முடியாதவாறு அந்த ஊர் வியாபாரிகளை பயமுறுத்தி அவருக்கு சந்தனம் விற்க விடாமல் தடுத்து விட்டான் .
No comments:
Post a Comment