Wednesday, 12 July 2017

திண்ணனுக்கு   ஐயன்   மீது   அன்பு   அளவு   கடந்து   பெருக்கெடுத்து   ஓடியது .அந்தணர்   செய்த்து   ஈசனுக்கு   பிடித்தமானதாகத்தான்   இருக்க   வேண்டும்  என்று   முடிவெடுத்து   தானும்   அவ்வாறு   செய்ய   முடிவு   செய்தான் . அப்போது   அவனுக்கு   ஐயன்   பசியோடு   இருப்பான்   என்ற   நினைவு   வாட்டி   எடுத்தது .  உடனே   காடன்   தனக்காக   சமைத்து   வைத்திருக்கும்   பன்றி   மாமிசம்   நினைவுக்கு   வந்தது .. உடனே   ஒரே   ஓட்டமாக   காடன்   இருக்குமிடம்   வந்தான் .   நாணன்   அதற்குள்   திண்ணன்   நிலையை   சொல்கிறான் .  திண்ணன்   வேகவைத்த   மாமிச   துண்டங்களை   ருசித்து   எலும்பை   நீக்கி   துண்டங்களை   ஒரு   இலையில்   பத்திரப்படுத்துகிறான் .  மற்ற   இருவரும்   ஆச்சர்யமாக   பார்க்கிறார்கள் ..

No comments:

Post a Comment