Friday, 15 December 2017

மும்மையால்   உலகாண்ட   மூர்த்திக்கும்   அடியேன் |

மதுரை   மாநகரில்   மூர்த்தி   என   பெயர்   கொண்ட   ஒரு   சிறந்த   சிவபக்தர்   வாழ்ந்து   வந்தார் .  வணிகர்   குலத்தில்   பிறந்த   அவர்   சுந்தரேச  பெருமானிடம்   அளவு   கடந்த   பக்தி   கொண்டிருந்தார் .   பகவானுக்கு   சந்தனகாப்பு   சாற்றுவது   பெரும்   புண்ணிய   காரியமாக   சாஸ்த்திரங்கள்   சொல்வதை   உணர்ந்து   அத்தொண்டை   மிக   விரும்பி   மேற்கொண்டார் .  தினந்தோறும்   பகவானுக்கு   சாற்ற   சந்தனம்   அரைத்து   கொடுக்கும்   பணியை   தவறாமல்   செய்து   வந்தார் .இவ்வாறு   நடந்து   கொண்டிருந்த   காலத்தில்   கர்நாடக   மன்னன்   பாண்டிய   நாட்டை   கவர   எண்ணி   பெரும்   படையுடன்   போருக்கு   வந்தான் .   பாண்டிய   மன்னன்    கர்நாடக   படையுடன்   போரிட   முடியாமல்   தோற்று   போனான் .  பாண்டிய   நாடு   கர்நாடக   மன்னன்   வசம்   ஆயிற்று .  கர்நாடக   மன்னன்  சமண   மதத்தை   ஏற்றுக்கொண்டவன் .  அவன்   சைவர்களை   கொடுமை   செய்ய   ஆரம்பித்தான் .

No comments:

Post a Comment