Tuesday, 31 October 2017

மறுநாள்   அந்தணர்   ஈசன்   கட்டளையை   உளமாற   ஏற்று   கோவிலில்   ஓரிடத்தில்   மறைந்து   நின்று   கொண்டார் .  வழக்கப்படி   திண்ணன்    பூஜா   திரவியங்களுடன்   மலை  ஏறி   வேகமாக   வந்தான் .  அவனுக்கு  . வரும்போதே   சில   அபசகுனங்கள்   தென்பட்டதால்   ஐயனுக்கு   ஏதாகிலும்   துன்பம்   நேரிட்டதோ   என்ற   அச்சத்துடன்   ஓடி   வந்தான் .  வந்து   ஐயனை   கண்டவன்   துடிதுடித்து   போனான் .  அவரது   வலது   கண்ணில்   ரத்தம்   வழிவதை   கண்டு   மனம்   பதறிப்போனான் .  கையில்   கொண்டு   அத்தனையும்   கிழே   நழுவி   விழுந்தன .  இவ்வாறு   யார்   செய்தது   என   பதறி   போய்   சுற்றும்   முற்றும்   பார்த்தான் .  அவனுக்கு   ஒன்றும்   புரியவில்லை .  ஓடி   சென்று   சில   பச்சிலைகளை   பறித்து   வந்து   அதை   பிழிந்து   அதன்   சாற்றை   கொண்டு   ரத்தத்தை   நிறுத்த   முயன்றான் .  ரத்தம்   நிற்கவில்லை .  அலறினான்   அரற்றினான் .  செய்வதறியாது   திகைத்தான் .அப்போதுதான்   ஊனுக்கு   ஊன்   தான்   சரிவரும்   என்று  முடிவு   செய்து   சந்தோஷம்   பொங்க  அம்பை   எடுத்து   தனது   வலது   கண்ணை   பெயர்த்து   அவரது  வலது   கண்ணில்   பொருத்தினான் .  ரத்தம்   நின்றது ..  திண்ணன்    சந்தோசம்   தாங்காமல்    கூத்தாடினான் .  ஈசனை   கட்டிக்கொண்டு    அனந்தக்கண்ணீர்   சொரிந்தான் .

No comments:

Post a Comment