மறுநாள் அந்தணர் ஈசன் கட்டளையை உளமாற ஏற்று கோவிலில் ஓரிடத்தில் மறைந்து நின்று கொண்டார் . வழக்கப்படி திண்ணன் பூஜா திரவியங்களுடன் மலை ஏறி வேகமாக வந்தான் . அவனுக்கு . வரும்போதே சில அபசகுனங்கள் தென்பட்டதால் ஐயனுக்கு ஏதாகிலும் துன்பம் நேரிட்டதோ என்ற அச்சத்துடன் ஓடி வந்தான் . வந்து ஐயனை கண்டவன் துடிதுடித்து போனான் . அவரது வலது கண்ணில் ரத்தம் வழிவதை கண்டு மனம் பதறிப்போனான் . கையில் கொண்டு அத்தனையும் கிழே நழுவி விழுந்தன . இவ்வாறு யார் செய்தது என பதறி போய் சுற்றும் முற்றும் பார்த்தான் . அவனுக்கு ஒன்றும் புரியவில்லை . ஓடி சென்று சில பச்சிலைகளை பறித்து வந்து அதை பிழிந்து அதன் சாற்றை கொண்டு ரத்தத்தை நிறுத்த முயன்றான் . ரத்தம் நிற்கவில்லை . அலறினான் அரற்றினான் . செய்வதறியாது திகைத்தான் .அப்போதுதான் ஊனுக்கு ஊன் தான் சரிவரும் என்று முடிவு செய்து சந்தோஷம் பொங்க அம்பை எடுத்து தனது வலது கண்ணை பெயர்த்து அவரது வலது கண்ணில் பொருத்தினான் . ரத்தம் நின்றது .. திண்ணன் சந்தோசம் தாங்காமல் கூத்தாடினான் . ஈசனை கட்டிக்கொண்டு அனந்தக்கண்ணீர் சொரிந்தான் .
No comments:
Post a Comment