Tuesday, 24 October 2017

திண்ணன்   இரவு   முழுவதும்   கண்   இமைக்காமல்   குடுமித்தேவருக்கு   காவல்   இருந்தான் . பொழுது   விடிந்ததும்  இன்றைய   உணவிற்கு  ஐயனுக்கு     தரவேண்டுமே   என்ற   கவலை   வாட்ட   வில்லையும்   அம்பையும்   எடுத்துக்கொண்டு   வேட்டையாட   கிளம்பினான் .  வேட்டையாடிய   மிருகத்தை   பதமாக   வேகவைத்து   அதில்   அங்கிருக்கும்   தேன்  கூட்டிலிருந்து   தேனை   எடுத்து   அதில் சேர்த்து   பக்குவமாக   இலையில்   சுற்றி   எடுத்துக்கொண்டான் .  முன்   தினத்தை   போலவே   வில்வமும்   பூக்களும்   தலையில்   செருகிக்கொண்டு   வாயில்   நீர்   நிரப்பி   கொண்டு   அவசரமாக   மலையை  நோக்கி   ஓடினான் .   அதற்குள்  அங்கு   அந்தணர்   சிவகோசரியார்   அங்கிருந்த   கோலத்தை   கண்டு  திகைத்து   ஈசனை   இவ்வாறு   அசிங்கப்படுத்தியது   யார்   என்று  கலங்கியவாறு   நன்றாக   கழுவி   சுத்தம்   செய்து   தான்  கொண்டுவந்த   திரவியங்களால்   ஈசனை   வழக்கம்   போல்   கிரமமாக   பூஜை   செய்து   விட்டு   சென்றார் .             

No comments:

Post a Comment