திண்ணன் இரவு முழுவதும் கண் இமைக்காமல் குடுமித்தேவருக்கு காவல் இருந்தான் . பொழுது விடிந்ததும் இன்றைய உணவிற்கு ஐயனுக்கு தரவேண்டுமே என்ற கவலை வாட்ட வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டையாட கிளம்பினான் . வேட்டையாடிய மிருகத்தை பதமாக வேகவைத்து அதில் அங்கிருக்கும் தேன் கூட்டிலிருந்து தேனை எடுத்து அதில் சேர்த்து பக்குவமாக இலையில் சுற்றி எடுத்துக்கொண்டான் . முன் தினத்தை போலவே வில்வமும் பூக்களும் தலையில் செருகிக்கொண்டு வாயில் நீர் நிரப்பி கொண்டு அவசரமாக மலையை நோக்கி ஓடினான் . அதற்குள் அங்கு அந்தணர் சிவகோசரியார் அங்கிருந்த கோலத்தை கண்டு திகைத்து ஈசனை இவ்வாறு அசிங்கப்படுத்தியது யார் என்று கலங்கியவாறு நன்றாக கழுவி சுத்தம் செய்து தான் கொண்டுவந்த திரவியங்களால் ஈசனை வழக்கம் போல் கிரமமாக பூஜை செய்து விட்டு சென்றார் .
No comments:
Post a Comment