இவ்வாறு க லயர் அமைதியாக வாழ்ந்து வந்த வேளையில் அவர் ஒரு செய்தி கேட்டார் . அதாவது திருக்குடந்தை அருகில் திருப்பனந்தாள் எனும் ஊரில் நடந்த ஒரு சம்பவம் அவரை அவ்வூருக்கு சென்று அந்த ஐயனை சேவிக்க ஆவலை தூண்டி யது . அவ்வூரில் தாடகை என்னும் அம்மையார் வாழ்ந்து வந்தார் . சிறந்த சிவபக்தை . தினமும் காலையில் நீராடி குளத்திலிருந்து நீர் கொண்டுவந்து அவ்வூர் ஈசனுக்கு அபிஷேகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தாள் . ஒரு நாள் அவள் குடத்தை இடுப்பிலிருந்து எடுத்து அபிஷேகம் செய்ய கை தூக்க எத்தனிக்கையில் அவள் சேலை நழுவியது . அதை பிடித்துக்கொண்டு குடத்தை தூக்க முடியாமல் தவித்தார் . தன் பக்தை தவிப்பதை காண சகியாத ஈசன் தானே குனிந்து நீரை ஏற்றுக்கொண்டார் . தன் முடியை தன் பக்தைக்காக சாய்த்த அத்திரு கோலத்தை உலகம் காண அப்படியே இருந்து விட்டார் . சோழ அரசன் ஈசனின் அந்த கோலத்தை அவ்வாறே இருப்பதை விரும்பாமல் தன் ஆள்பலத்தால் அவரை நிமிர்த்த யத்தனித்தான் . இம்மிகூட அசையவில்லை . யானைகளை கொண்டு கட்டி இழுத்து நிமிர்த்த யத்தனித்தான் . ஒன்றும் பலனில்லை . அரசன் நொந்து போனான் .
No comments:
Post a Comment