கோட்டீஸ்வர ஐய்யர் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களிடமும் பட்டணம் சுப்ரமணிய ஐய்யர் அவர்களிடமும் சங்கீதம் பயின்றார் . அவர் 200 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார் . 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாட்டு அமைத்து தனி சாதனை படைத்துள்ளார் . அவர் பாட்டனார் மீதுள்ள பெரும் மரியாதை காரணமாக ''கவிகுஞ்சர தாசன் '' எனும் முத்திரை யை தன் பாடல்களில் கையாண்டார் . தோடி ராகத்தில் தனி திறமை வெளி படுத்தி தோடி கோட்டி''' என்று புகழ் பெற்றார் . இவர் த்யாகராஜர் மீது பாடல் இயற்றி உள்ளார் .
Thursday 20 February 2014
Wednesday 19 February 2014
koteesvara iyer
அடுத்து நாம் காண போவது பிரபல தமிழிசை கவிஞர் கோடீஸ்வர அய்யர் . இவர் இந்த தொடரில் முன்பே அறிமுகமான கவிகுஞ்சர பாரதியின் பேரனாவார் . பரம்பரை சங்கீத குடும்பமாகும் .இவர் 1870ல் பிறந்தார் . மானாமதுரை , திருச்சி , சென்னை முதலிய இடங்களில் கல்வி பயின்றார் . பிறகு சென்னை உயர் நீதி மன்றத்தில் வேலை பார்த்தார் . வயிற்று பாட்டிற்கு வேலை செய்தாலும் ஆத்மா தாகம் பாட்டிற்கு முன்னுரிமை தந்தது .
Tuesday 11 February 2014
''பாஞ்சாலி சபதம் '' பெண்மைக்கு இழைக\ப்பட்ட அநீதியை சாடி பாடுகிறார் .பராசக்தியை பல ரூபங்களில் வணங்குகிறார் .கண்ணனை கண்ணம்மா வாக பெண்ணுருவம் கொடுத்து காதல் உருக பாடுகிறார் .''தீர்த்த கரையினிலே , காக்கை சிறகினிலே , கண்ணன் மனநிலை '' என அநேக பாடல்கள் . தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுது என்கிறார் . இவரின் எந்த ஒரு பாடலிலும் தீவிர துடிப்பும் எதையும் உடனே சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகமும் தெரியும் .
Friday 7 February 2014
Thursday 6 February 2014
agam
சுதந்திர போராட்டத்தில் அவர் பங்கு குறிப்பிட தக்கது .அவர் தேசிய பாடல்கள் பெரும் எழச்சியை உண்டாக்கி ஆங்கிலேயரை கலங்க அடித்தது .''என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் . என்றெமதன்னை கை விலங்குகள் போகும் , என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும் '' என்று நெஞ்சுருக பாடுகிறார் . கேட்போர் கண்கள் குளமாகும்
Wednesday 5 February 2014
''நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் '' என்று மக்களின் மூட நம்பிக்கையையும் அறியாமையையும் எண்ணி மனம் நொந்து கொள்கிறார் .'இவர் துயர்களை தீர்க்க ஓர் வழியுமில்லை அந்தோ '' என வருந்து கிறார் .
பெண் விடுதலை அவரது மூச்சு .''ஏட்டையும் பெண்கள் தொடுவது
தீமை என்று எண்ணி மிகுந்தவர் மாய்ந்து விட்டார் . வீட்டுக்குள்ளே
பெண்ணை பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.''
என்று கொக்கரிக்கிறார் .
பெண் விடுதலை அவரது மூச்சு .''ஏட்டையும் பெண்கள் தொடுவது
தீமை என்று எண்ணி மிகுந்தவர் மாய்ந்து விட்டார் . வீட்டுக்குள்ளே
பெண்ணை பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.''
என்று கொக்கரிக்கிறார் .
Tuesday 4 February 2014
தேசீய ஒருமை பாட்டிற்கு அவரைப்போல் குரல் கொடுத்தவர் யார் உளர் ?
''ஜாதிகள் இல்லையடி பாப்பா , குல தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் ''
என்று குழந்தைகளுக்கு அறிவுறித்தி பிஞ்சு மனதில் பதிய வைக்கி.
றார். பாரத அன்னையை ''முப்பது கோடி முகமுடையாள் எனில் மெய்ப்புறம் ஒன்றுடையாள் . அவள் செப்பு மொழி பதினெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள் . எங்கள் தாய் '' என்று மார் தட்டி கொள்கிறார் .
''ஜாதிகள் இல்லையடி பாப்பா , குல தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் ''
என்று குழந்தைகளுக்கு அறிவுறித்தி பிஞ்சு மனதில் பதிய வைக்கி.
றார். பாரத அன்னையை ''முப்பது கோடி முகமுடையாள் எனில் மெய்ப்புறம் ஒன்றுடையாள் . அவள் செப்பு மொழி பதினெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள் . எங்கள் தாய் '' என்று மார் தட்டி கொள்கிறார் .
Monday 3 February 2014
Subscribe to:
Posts (Atom)