அந்த சமயத்தில் ஒரு நாள் ஆனிலை எனும் சிவாலயத்தில் குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு சாற்ற பூக்குடலையில் பூமாலை தொடுத்து எடுத்துக்கொண்டு சிவகாமியாண்டார் எனும் சிவனடியார் வந்து கொண்டிருந்தார் . அப்போது பட்டத்து யானை அவரை தள்ளி பூக்குடலையை தள்ளி மாலையை மிதித்து நாசப்படுத்தியது . கீழே விழுந்த சிவனடியார் ஓலமிட்டார் . அப்போது அந்த பக்கமாக வந்த எறிபத்தர் எனும் சிவத்தொண்டர் மிக்க சினமடைந்து வெறியுடன் தன் மழுவால் யானையையும் அதன் பாகனையும் வெட்டி சாய்த்தார் .
Tuesday 25 June 2019
Monday 24 June 2019
பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழருக்கு அடியேன் |
சோழநாட்டில் உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தார் புகழ்ச்சோழர் என்ற மன்னர் . அவர் சிவபெருமானிடம் அளவிலா பக்தி கொண்டிருந்தார் . சிவனடியார்களிடத்தும் மிகுந்த பக்தியுடன் அவர்களுக்கு சேவை செய்து வந்தார் . ஒரு சமயம் அவருக்கு திரை செலுத்த கொங்கு தேசத்திலிருந்தும் குடகு தேசத்திலிருந்தும் அரச பிரதிநிதிகள் வந்திருந்தனர் . மன்னன் அவர்களை வரவேற்று உபசரிக்க மேற்கு ராஜதானியான கருவூரிற்கு வந்தார் . அங்கு அவர்களை உபசரித்து கெளரவித்தார் .
பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழருக்கு அடியேன் |
சோழநாட்டில் உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தார் புகழ்ச்சோழர் என்ற மன்னர் . அவர் சிவபெருமானிடம் அளவிலா பக்தி கொண்டிருந்தார் . சிவனடியார்களிடத்தும் மிகுந்த பக்தியுடன் அவர்களுக்கு சேவை செய்து வந்தார் . ஒரு சமயம் அவருக்கு திரை செலுத்த கொங்கு தேசத்திலிருந்தும் குடகு தேசத்திலிருந்தும் அரச பிரதிநிதிகள் வந்திருந்தனர் . மன்னன் அவர்களை வரவேற்று உபசரிக்க மேற்கு ராஜதானியான கருவூரிற்கு வந்தார் . அங்கு அவர்களை உபசரித்து கெளரவித்தார் .
Wednesday 19 June 2019
அவர் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ந்து அவரை போற்றி கொண்டாடினர் . அவர் முடிசூடா மன்னராக திகழ்ந்தார் . அவருக்கு தில்லை கூத்தனை சேவிக்க பேரவா எழுந்தது . உடனே அவர் கிளம்பி தில்லை சென்றார் . அவருக்கு அங்கு சென்று ஆடவல்லானை சேவித்து கொண்ட பிறகு பொன்னம்பலத்திலுள்ள முடியை தன் தலையில் சூடிக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் எழுந்தது . தில்லை மூவாயிரத்தவர்களிடம் அவர்களிடம் தம் ஆவலை தெரிவித்தார் . அவர்கள் திட்டமாக மறுத்து சோழ மன்னர் ஒருவருக்கே அந்த உரிமை என்று கூறினர் . கூ ற்றனார் மனமுடைந்து போனார் . ஈசனை வருத்தத்துடன் வணங்கி தம் குறையை முறையிட்டார் . தில்லைவாழ் அந்தணர்கள் தாம் மறுத்ததால் என்ன நேருமோ என்று பயந்து தலை மறைவாகி விட்டனர் . கூற்றனார் எம்பெருமானிடம் சரணடைந்தார் . ஈசன் மனமிரங்கி அன்றிரவு அவர் கனவில் தோன்றி அவர் தலையில் தன் திருவடிகளை பதித்து சென்றார் . அடியாருக்கு தேகம் புல்லரித்து . சந்தோஷம் தாளவில்லை . அவர் பக்தி மேலும் பெருகிற்று . அவ்வாறே சிலகாலம் வாழ்ந்து சிவபதம் அடைந்தார் .
Monday 17 June 2019
ஆர்கொண்ட வேர்க்கூ ற்றன் களந்தைக்கோன் அடியேன் |
திருக்களந்தை எனும் ஊரில் கூ ற்றனார் எனும் பெயர்கொண்ட ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் . சதா பஞ்சாக்ஷ்ராம் ஓதியபடியே இருப்பார் . சிவனடியார்களிடம் அதிக அன்பு செலுத்துபவர் .அவருக்கு இறைவன் அருளால் மிக்க செல்வம் சேர்ந்தது . சதுரங்க சேனை குவிந்தது . அதைக்கொண்டு அக்கம்பக்க நாடுகளை வென்று நல்லாட்சி புரிந்து வந்தார் . மக்களும் மனதிருப்தியுடன் வாழ்ந்து வந்தனர் .
Friday 7 June 2019
கடற்காழி கணநாதன் அடியார்க்கு அடியேன் |
சீர்காழியில் அந்தணர் குலத்தில் பிறந்த ஒரு சிறந்த சிவபக்தர் வாழ்ந்து வந்தார் . பெயர் கணநாதர் . சிவத்தொண்டே வாழ்வு லட்சியமாக கொண்டு வாழ்ந்து வந்தார் . தம்மை நாடி வருபவர்களையும் அன்புடன் வரவேற்று அவர்களையும் அத்தொண்டில் ஈடுபடுத்துவார் . எல்லோரும் சேர்ந்து நந்தவனம் அமைத்து பூச்செடிகள் வளர்த்து தினம் பூமாலைகள் ஐயனுக்கு சமர்ப்பித்து இன்பம் எய்தினார் . திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு வருவது . தோட்டம் சுத்தம் செய்வது கோயில் , பிரகாரம் மெழுகி கோலம் ,போடுவது விளக்கு ஏற்றுவது ஈசனுக்கு மனம் குளிர பக்தி பாடல்கள் பாடுவது போன்று பல நற்பணிகளை செய்து வந்தனர் . அவரவர்களுக்கு பிடித்தமான பணிகளில் எல்லோருக்கும் பயிற்சி அளிப்பார் . அவருக்கு சம்பந்த பெருமானிடம் அளவற்ற பக்தி . அவரை தினமும் சந்தித்து வணங்கி வந்தார் .அவருடைய அருந்தொண்டுகளால் மகிழ்ந்த எம்பிரான் அவருக்கு முக்தி கொடுத்து அவரை கணங்களுக்கு அதிபர் ஆக்கினார் .
சீர்காழியில் அந்தணர் குலத்தில் பிறந்த ஒரு சிறந்த சிவபக்தர் வாழ்ந்து வந்தார் . பெயர் கணநாதர் . சிவத்தொண்டே வாழ்வு லட்சியமாக கொண்டு வாழ்ந்து வந்தார் . தம்மை நாடி வருபவர்களையும் அன்புடன் வரவேற்று அவர்களையும் அத்தொண்டில் ஈடுபடுத்துவார் . எல்லோரும் சேர்ந்து நந்தவனம் அமைத்து பூச்செடிகள் வளர்த்து தினம் பூமாலைகள் ஐயனுக்கு சமர்ப்பித்து இன்பம் எய்தினார் . திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு வருவது . தோட்டம் சுத்தம் செய்வது கோயில் , பிரகாரம் மெழுகி கோலம் ,போடுவது விளக்கு ஏற்றுவது ஈசனுக்கு மனம் குளிர பக்தி பாடல்கள் பாடுவது போன்று பல நற்பணிகளை செய்து வந்தனர் . அவரவர்களுக்கு பிடித்தமான பணிகளில் எல்லோருக்கும் பயிற்சி அளிப்பார் . அவருக்கு சம்பந்த பெருமானிடம் அளவற்ற பக்தி . அவரை தினமும் சந்தித்து வணங்கி வந்தார் .அவருடைய அருந்தொண்டுகளால் மகிழ்ந்த எம்பிரான் அவருக்கு முக்தி கொடுத்து அவரை கணங்களுக்கு அதிபர் ஆக்கினார் .
Tuesday 4 June 2019
சேரமான் வருவதை அறிந்த சுந்தரர் அவரை பெரும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு சென்று வரவேற்றார் . தம்பிரான் தோழனை கண்ட சேரமான் அளவிலா ஆனந்தம் அடைந்தார் . அவன் அவர் வீட்டிலே சில காலம் தங்கி அவருடன் பல ஆலயங்களுக்கு சென்று எம்பெருமானை மனதார தொழுது மகிழ்ந்தார் . பாண்டிய நாட்டு தலங்களை சேவித்துக்கொண்டு சுந்தரரை தம் இல்லத்திற்கு அழைத்து சென்றார் . சுந்தரர் கொடுங்கோளுரில் சேரமான் அரசமாளிகையில் சில நாட்கள் தங்கி இருந்தார் . பிறகு ஆரூர் திரும்பினார் . சுந்தரருக்கு கை லாயம் நினைவு வந்து மனம் அலைபாய்ந்தது . ஈசனுடன் சேரும் ஆவல் மனதை வாட்டியது . அவர் மனமுருகி ஐயனை வேண்ட அவரும் மனமிரங்கி தேவர்களை அவரை அழைத்து வர அனுப்பினார் . அவர் ஐராவதத்தில் ஏறி கைலாயம் செல்வதை கண்ட சேரமான் தன் குதிரை காதில் பஞ்சாக்ஷரத்தை ஓத அவர் மின்னல் வேகத்தில் சென்று சுந்தரரை அணுகி அவருடன் சேர்ந்து கைலாயம் அடைந்தார் .
Subscribe to:
Posts (Atom)