Tuesday, 7 March 2017

அரசன்  உறங்கி  கொண்டிருந்தான் .  மனைவி   காலடியில்   உட்கார்ந்து   கொண்டிருந்தாள் . முத்தநாதன்   அங்கு   இருந்த   ஆசனத்தில்   அமர்ந்தான் .  ராணி   அரசனை     சிவனடியார்   வந்திருக்கும்   சேதிசொல்லி   அரசரை   எழுப்புகிறாள் .  அரசன்   திடுக்கிட்டு   எழுந்து   சிவனடியார்   காலில்   விழுந்து வணங்கி   தங்கள்   வரவு   மிக்க   மகிழ்ச்சி   அளிப்பதாக   கூறி   அன்புடன்   வரவேற்றார் .  முத்தநாதன்   ஈசன்   தன்   திருவாயால்   மலர்ந்தருளிய   ஆகம   நூலை   கொண்டு   வந்திருப்பதாக   கூறுகிறான் .  இதை   உபதேசிக்கும்போது   ஸ்த்ரீகள்   இருப்பது   உசிதமல்ல   என்று   சொல்லி   ராணியை   அங்கிருந்து   தந்திரமாக   வெளியே அனுப்புகிறான்,.
ராணி யை   பார்த்தும்   தத்தனுக்கு   சந்தேகம்   வலுக்கிறது.  அவன்   ஓடி   வருவதற்குள்   அசம்பாவிதம்   நடந்து   முடிந்து   விடுகிறது .  முத்தநாதன்   துணியில்   சுற்றி   கொண்டுவந்த   குறுவாளை   அரசனின்   நெஞ்சில்   பாய்ச்சிவிட்டான் . தத்தன்    துரோகி    என்று   கத்திக்கொண்டே  ஓடி  வந்தான் .  அரசன்   தத்தா   நில் , அவனுக்கு   ஒரு   தீங்கும்   நேராமல்   நாட்டின்   எல்லை   வரை   அனுப்பி   விட்டு   வா  என்று   தடுமாறியவாறே   கட்டளை   இட்டு   பிறகு   சாய்ந்தான் .  அப்போது   பெரும்   ஒளி   தோன்றியது .  ஈசன்   அன்னையுடன்   காட்சி   தந்து ''மெய்ப்பொருள்  என்னிடம்     நீ   கொண்ட   பக்தியும்   என்   அடியார்களிடம்   நீ   காட்டிய   அன்பும்   மெச்ச   தக்கது .  வஞ்சகனாக   இருந்தாலும்   என்   சொரூபத்தை   கொண்டதால்   அவனை   மன்னித்த   உன்   உள்ளத்தை   கண்டு   நான்    பெரிதும்   மகிழ்ந்தேன் .  இனி   நீ   எப்போதும்   என்னுடனே   இருப்பாயாக   என்று   கூறி   மறைந்தார் .  சிவனடி   சேர்ந்த   மெய்ப்பொருள்   மெய்ப்பொருள்   நாயனாராகிறார் 

 

No comments:

Post a Comment