அரசன் உறங்கி கொண்டிருந்தான் . மனைவி காலடியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் . முத்தநாதன் அங்கு இருந்த ஆசனத்தில் அமர்ந்தான் . ராணி அரசனை சிவனடியார் வந்திருக்கும் சேதிசொல்லி அரசரை எழுப்புகிறாள் . அரசன் திடுக்கிட்டு எழுந்து சிவனடியார் காலில் விழுந்து வணங்கி தங்கள் வரவு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக கூறி அன்புடன் வரவேற்றார் . முத்தநாதன் ஈசன் தன் திருவாயால் மலர்ந்தருளிய ஆகம நூலை கொண்டு வந்திருப்பதாக கூறுகிறான் . இதை உபதேசிக்கும்போது ஸ்த்ரீகள் இருப்பது உசிதமல்ல என்று சொல்லி ராணியை அங்கிருந்து தந்திரமாக வெளியே அனுப்புகிறான்,.
ராணி யை பார்த்தும் தத்தனுக்கு சந்தேகம் வலுக்கிறது. அவன் ஓடி வருவதற்குள் அசம்பாவிதம் நடந்து முடிந்து விடுகிறது . முத்தநாதன் துணியில் சுற்றி கொண்டுவந்த குறுவாளை அரசனின் நெஞ்சில் பாய்ச்சிவிட்டான் . தத்தன் துரோகி என்று கத்திக்கொண்டே ஓடி வந்தான் . அரசன் தத்தா நில் , அவனுக்கு ஒரு தீங்கும் நேராமல் நாட்டின் எல்லை வரை அனுப்பி விட்டு வா என்று தடுமாறியவாறே கட்டளை இட்டு பிறகு சாய்ந்தான் . அப்போது பெரும் ஒளி தோன்றியது . ஈசன் அன்னையுடன் காட்சி தந்து ''மெய்ப்பொருள் என்னிடம் நீ கொண்ட பக்தியும் என் அடியார்களிடம் நீ காட்டிய அன்பும் மெச்ச தக்கது . வஞ்சகனாக இருந்தாலும் என் சொரூபத்தை கொண்டதால் அவனை மன்னித்த உன் உள்ளத்தை கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன் . இனி நீ எப்போதும் என்னுடனே இருப்பாயாக என்று கூறி மறைந்தார் . சிவனடி சேர்ந்த மெய்ப்பொருள் மெய்ப்பொருள் நாயனாராகிறார்
No comments:
Post a Comment