Wednesday, 20 December 2017

அவருக்கு   சுய   நினைவே   இல்லை .  தன்   கைங்கரியம்   நின்று   போன   வேதனை   அவரை   பித்தனாக்கியது .   முழங்கை   தேய்ந்து   எலும்பு   வெளிப்பட்டது .  அவர்   நிறுத்துவதாக   இல்லை .  குருதி   பெருகியது .  ஈசன்   இனி   பொறுப்பாரா ?  'அன்பனே   என்   மேல்   கொண்ட   பக்தியால்   நீ   செய்ய   துணிந்த   இச்செய்கையை   நிறுத்து .  கொடுங்கோல்   மன்னன்   இன்று   இரவு   இறந்து   போவான் .  நீயே   உன்   மனம்   போல்   ஆட்சி    செய்வாய்,  உன்   இறை   பணியும்   இனி   இனிதே   தொடரும் '  என்று   கூறி   மறைந்தார் .  திடுக்கிட்டு   விழித்த  மூர்த்தியார்   தன்   முழங்கையை   பார்த்தார் .  எலும்பு   தேய்ந்து   உதிரம்   கொட்டிய   முழங்கை   எலும்பு   சதை    வளர்ந்து   முன்போல்   ஆகி   இருப்பதை   கண்டு   ஈசனின்   அன்பை   நினைந்து   உருகி  கண்ணீர்   பொங்க   ஐயனை   மனமாற   துதித்தார் .  எம்பெருமான்   மீது   அளவு   கடந்த  பக்தி   பெருக்கெடுத்தது.

No comments:

Post a Comment