அன்பே உருவான இச்சிவனடியார் இக்காரியத்தை எதற்காக செய்தார்? தகுந்த காரணம் இல்லாமல் இருக்க முடியாது என்று உறுதியாக நம்பி ஸ்வாமி தாங்கள் இக்காரியத்தை செய்ததற்கு தகுந்த காரணம் இருக்க வேண்டும் . தாங்கள் வேறு யாரையாது தண்டிக்க வேண்டுமா? என்று பணிவுடன் வினவினார் . எறிபத்தர் நடந்தவற்றை விரிவாக விளக்கினார் . அதை கேட்ட மன்னர் மிக வருந்தி தாங்கள் கொடுத்த தண்டனை போதாது . தானும் தண்டிக்க பட வேண்டியவன் தான் என்று கூறி . தன் உடைவாளை உருவி. அடியார் கையில் கொடுத்து தன்னையும் வாளால் தண்டிக்குமாறு அவர் காலடியில் மண்டியிட்டார் மன்னன் . எறிபத்தர் கலங்கி போய் செய்வது அறியாது திகைத்தார் . உடனே அவ்வாளால் தன்னையே மாய்த்துக்கொள்ள யத்தனித்தார் . அதை கண்ட மன்னன் உடனே எழுந்து அவரை தடுக்க நினைத்தார் . அப்போது ஈசன் அங்கு தோன்றி அடியார்களிடம் தாங்கள் காட்டும் அபரிமிதமான அன்பை உலகிற்கு உணர்த்தவே இவ்விளையாடல் புரிந்ததாக கூறி யானையையும் சேவகர்களையும் பிழைக்க செய்தார் . எறிபத்தர் மன்னன் பட்டத்து யானைமேல் ஆரோகணித்து செல்வதை கண்டு மகிழ்ந்தார் .
Monday 24 April 2017
Saturday 22 April 2017
மற்றும் கூட வந்த காவலாளிகள் ஓடி சென்று மன்னனிடம் பட்டத்து யானை கொலையுண்ட செய்தியை கூறினர் . புகழ் சோழ ன்னன் செய்தியை கேட்டு அதிர்ந்து போனான் . பகைவர் படையுடன் வந்து விட்டனரோ என அச்சமுற்று படையுடன் செல்ல தயாரானான் . தானும் வாள் மற்ற ஆயுதங்கள் ஏந்தி படைகள் பின்னே வர குதிரை ஏறி புறப்பட்டார் . அவர் ராஜவீதியை அடைந்தார் . அங்கு பட்டத்து யானை மலைபோல் வீழ்ந்து கிடந்ததை கண்டு மலைத்து நின்றார் . அங்கு மழுவுடன் எறிபத்தரை கண்டு இப்பெரும் சிவனடியார் அங்கு என்ன செய்கிறார் என்று அதிசயித்து நின்றார் . அரசனின் பின் நின்ற காவலாளிகள் யானையை கொன்றவர் அவரே என்று சிவனடியாரை காண்பித்தனர் . அரசன் அதிர்ந்து போனார் . அன்பே உருவான சிவனடியார் இக்காரியம் செய்தாரென்றால் தகுந்த காரணம் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார் .
Tuesday 18 April 2017
முதியவரான சிவகாமியாண்டார் கோபத்துடன் யானையின் பின் ஓட யத்தனித்தார் . வயதின் காரணமாக கால் தடுக்கி கீழே விழுந்தார் . ஆண்டவனே இது நீதியா ? இப்படி செய்த யானையை தட்டி ஒட்டிக்கொண்டு போய்விட்டானே அந்த பாகன் . இன்று என்னால் இப்பூமாலைகளை உனக்கு சூட்டி அழகு செய்ய முடியாதே என்று பலவாறாக புலம்பினார் . அப்போது அங்கு மழுவுடன் வந்த எறிபத்தனார் இவர் புலம்பலை கேட்க நேர்ந்தது . ஓடி வந்து விழுந்து கிடந்த சிவகாமியாண்டாரை அணுகி விசாரித்தார் . ஒரு சிவனடியாருக்கு இவ்வநீதி நடந்ததை கண்டு வெகுண்டு எழுந்தார் . அந்த யானை எந்த பக்கம் சென்றது என்று கேட்டறிந்து அவர் அந்த பக்கம் சென்று தம் மழுவால் யானையையும் பாகனையும் வீழ்த்தி கொன்றார் . கூட இருந்த காவலர்களையும் வீழ்த்தினார் .
Wednesday 12 April 2017
மறுநாள் நவமி உத்சவம் . ஊரே திரண்டு உத்சவத்தை சிறப்பாக கொண்டாட ஆயத்தம் செய்த வண்ணம் இருந்தது . சிவகாமியாண்டார் அதிகாலையே எழுந்து நீராடி உடலெல்லாம் விபூதி பூசி ஈசன் பஞ்சாக்ஷரத்தை ஓதியவாறு மலர்களை கொய்து மாலையாக கட்டி அம்மாலைகளை ஒரு கூடையில் வைத்து தோளில் மாட்டிக்கொண்டு இறைவனுக்கு சாற்ற கோவிலை நோக்கி புறப்பட்டார் . மறுநாள் உத்சவத்தில் பங்கேற்க மன்னனின் பட்டத்து யானையை காவலர்கள் ஆற்றில் குளிப்பாட்டி அழைத்து வந்து கொண்டிருந்தனர் . யானை மதத்தில் இருந்தது . இதை உணராத காவலர்கள் அதை வீதி வழியே ஒட்டினர் . சிவகாமியாண்டார் தோளில் மலர்க்கூடையுடன் சிவநாமத்தை ஜபித்தவாறு சென்று கொண்டிருந்த தெருவில் நுழைந்த யானை அவரை ஒரு தள்ளு தள்ளி விட்டு பூக்கூடையையும் தூக்கி எறிந்து நாசம் செய்து விட்டு போய்விட்டது . யானை பாகனும் அதை கண்டு கொள்ள வில்லை .
Tuesday 11 April 2017
அவ்வூரில் சிவகாமியாண்டார் என்றொரு பக்தர் வாழ்ந்து வந்தார் . அவர் நந்தவனங்கள் தோறும் சென்று மலர்களை சேகரித்து மாலையாக தொடுத்து ஈசனுக்கு அவைகளை சாற்றி அழகு பார்த்து மகிழ்வார் .. தினந்தோறும் அதிகாலை எழுந்து ஆற்றில் நீராடி வாயில் ஒரு துணியை சுற்றிக்கொண்டு மலர்களை கொய்து மாலையாக தொடுப்பார் . ஒரு கூடையில் அடுக்கி எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று மாலைகளை ஐயனுக்கு சாற்றி அழகு பார்த்து மகிழ்வார் . அவர் முதுமை அடைந்துவிட்ட போதிலும் விடாது இச்சேவையை செய்து வந்தார் .
Friday 7 April 2017
இலைமலிந்த வேல்நம்பி எரிபக்தர்க்கு அடியேன் !
சோழ நாட்டை கருவூர் தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான் புகழ் சோழ மன்னன் . அவ்வூரில் கோயில்கொண்டிருக்கும் பசுபதீஸ்வரர் மீது எல்லை இல்லா பக்தி கொண்ட அடியார் ஒருவர் இருந்தார் . அவர் ஈசன் மீது கொண்ட அன்பிற்கு ஒரு படி மேலேயே சிவனடியார்கள் மீது பக்தி வைத்திருந்தார் . அவர்களுக்கு யாரேனும் தீங்கு இழைத்தார் என்று அறிந்தால் தான் எப்போதும் வைத்திருக்கும் மழுவை எறிந்து தண்டனை அளித்தே தீருவார் ,, அதன் காரணமாக அவர் எறி பக்தர் என்றே அழைக்கப்பட்டார் .
சோழ நாட்டை கருவூர் தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான் புகழ் சோழ மன்னன் . அவ்வூரில் கோயில்கொண்டிருக்கும் பசுபதீஸ்வரர் மீது எல்லை இல்லா பக்தி கொண்ட அடியார் ஒருவர் இருந்தார் . அவர் ஈசன் மீது கொண்ட அன்பிற்கு ஒரு படி மேலேயே சிவனடியார்கள் மீது பக்தி வைத்திருந்தார் . அவர்களுக்கு யாரேனும் தீங்கு இழைத்தார் என்று அறிந்தால் தான் எப்போதும் வைத்திருக்கும் மழுவை எறிந்து தண்டனை அளித்தே தீருவார் ,, அதன் காரணமாக அவர் எறி பக்தர் என்றே அழைக்கப்பட்டார் .
Subscribe to:
Posts (Atom)