மாணிக்கவாசகருக்காக ஈசன் நரியை பரியாக்கி , பின் பரியை நரியாக்கி , இன்னும் பல நாடகங்களை ஆடி தானே அவருக்கு குருவாக இருந்து அவரை பாட வைக்கிறார் . அவரும் நெஞ்சு உருகி பாடிய திருவாசகம் எவர் உள்ளத்தையும் கரைக்க வல்லது . இதை முன்பே குறிப்பிட்டுள்ளேன் . இன்றும் பெரிய சிவன் கோயில்களில் ஈசன் தீபாராதனை முடிந்ததும் பஞ்ச புராணம் பாடப்படும் . அதில் மூவர் தேவாரம் , திருவாசகம் ,திருவிசைப்பா ,திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணம் இவை ஈசன் மனம் குளிர பாடப்படும் . ஆக தமிழ் இசைக்காக ஆடவல்லான் ஆடிய நாடகங்கள் கணக்கில் அடங்கா .
தமிழிசை என்றாலே எல்லோருக்கும் இனிப்பது அருணகிரியாரின் திருப்புகழ் .தமிழ் கடவுளாம் ஆறுமுகன் பாட திறனற்ற அருணகிரியாரை 'முத்தைத்தரு ' என்று அடி எடுத்து கொடுத்து பாட வைக்கிறான் . அவரும் ஆயிரக்கணக்கில் பாடல் தந்து மகிழ்கிறார் .திருப்புகழ் கேட்க விரும்பாத தமிழர்களை காண்பது அரிது . ராமலிங்கரின் திருஅருட்பா மற்றும் ஓர் அரிய நூல்
தமிழிசை என்றாலே எல்லோருக்கும் இனிப்பது அருணகிரியாரின் திருப்புகழ் .தமிழ் கடவுளாம் ஆறுமுகன் பாட திறனற்ற அருணகிரியாரை 'முத்தைத்தரு ' என்று அடி எடுத்து கொடுத்து பாட வைக்கிறான் . அவரும் ஆயிரக்கணக்கில் பாடல் தந்து மகிழ்கிறார் .திருப்புகழ் கேட்க விரும்பாத தமிழர்களை காண்பது அரிது . ராமலிங்கரின் திருஅருட்பா மற்றும் ஓர் அரிய நூல்