Monday, 10 July 2017

மலையை   நெருங்க   நெருங்க   திண்ணனின்   உள்ளத்தில்   இன்ப   உணர்வு   அதிகரித்து   கொண்டே   போனது .  மலை  உச்சியை   அடைந்து   அங்கு   ஒரு   மரத்தடியில்   லிங்க   வடிவில்   குடடுமித்தேவரை   கண்டு   அவன்   உடல்   சிலிர்த்தது .  கட்டி   அனைத்து   கண்ணீர்   சொரிந்தான் .  சுற்றிலும்   காடாக   இருப்பதை   கண்டு   உள்ளம்   பதறினான் .  இங்கேயா   தனியாக   எப்படி   இருக்கிறாய் ? என   மனம்  மிக   நொந்து   வினவினான் .  லிங்கத்தின்   சிரசில்   பூவும்   வில்வமும்  இருக்க   கண்டு   நாணனை   அதை   பற்றி   வினவினான் . நாணன்   முன்பு   திண்ணனின்   தந்தையுடன்   தான்   வந்த   போது   ஒரு   பெரியவர்   லிங்கத்தை   நீரால்   அபிஷேகம்   செய்து   மலர்களை   வைத்ததாக   கூறினான் .  திண்ணன்   ஒரு    வேளை   அதுதான்   சரியான   முறையாக   இருக்க   வேண்டும்   என்று   எண்ணி   தானும்   அவ்வாறே   செய்ய   எண்ணினான் 

No comments:

Post a Comment