Monday, 24 April 2017

அன்பே   உருவான   இச்சிவனடியார்   இக்காரியத்தை   எதற்காக   செய்தார்? தகுந்த  காரணம்   இல்லாமல்   இருக்க   முடியாது   என்று   உறுதியாக   நம்பி   ஸ்வாமி   தாங்கள்   இக்காரியத்தை   செய்ததற்கு   தகுந்த   காரணம்   இருக்க   வேண்டும் .  தாங்கள்   வேறு   யாரையாது   தண்டிக்க  வேண்டுமா?  என்று   பணிவுடன்   வினவினார் .  எறிபத்தர்   நடந்தவற்றை   விரிவாக   விளக்கினார் . அதை   கேட்ட   மன்னர்   மிக   வருந்தி   தாங்கள்   கொடுத்த   தண்டனை  போதாது .  தானும்   தண்டிக்க   பட   வேண்டியவன் தான்   என்று   கூறி .  தன்    உடைவாளை   உருவி.   அடியார்   கையில்   கொடுத்து   தன்னையும்   வாளால்   தண்டிக்குமாறு   அவர்   காலடியில்   மண்டியிட்டார்   மன்னன் .  எறிபத்தர்   கலங்கி   போய்   செய்வது   அறியாது   திகைத்தார் .   உடனே   அவ்வாளால்   தன்னையே   மாய்த்துக்கொள்ள   யத்தனித்தார் . அதை   கண்ட   மன்னன்   உடனே   எழுந்து   அவரை   தடுக்க   நினைத்தார் .  அப்போது   ஈசன்   அங்கு   தோன்றி   அடியார்களிடம்   தாங்கள்   காட்டும்   அபரிமிதமான   அன்பை   உலகிற்கு   உணர்த்தவே   இவ்விளையாடல்   புரிந்ததாக   கூறி   யானையையும்   சேவகர்களையும்   பிழைக்க   செய்தார் .  எறிபத்தர்   மன்னன்   பட்டத்து   யானைமேல்   ஆரோகணித்து   செல்வதை   கண்டு   மகிழ்ந்தார் .

No comments:

Post a Comment