'வீடு செல் , மனைவி உனக்காக காத்திருப்பாள் ' என்று ஐயன் கனவில் சொன்னதும் கலயன் திடுக்கிட்டு விழித்தான் . வீடு செல்லவும் மனமில்லாமல் ஈசன் ஆணையை மீறவும் முடியாமல் மெள்ள உள்ளத்தை திடப்படுத்திக்கொண்டு வீடு சென்றான் . வாயிக்கதவு திறந்து இருப்பதை கண்டு திடுக்கிட்டு உள்ளே நுழைந்தான் . அவன் மனைவி அவன் காலில் விழுந்து நீங்கள் தினம் வணங்கும் அமுதகடேஸ்வரர் இன்று அருள் புரிந்து விட்டார் . உள்ளே அமுது உண்ண வாருங்கள் என்று அழைத்தாள் . உள்ளே நுழைந்த அவர் நன்றி பெருக்கால் கண்ணில் நீர் பெருக ஐயனை தொழுதார் . காலை சிவத்தொண்டர்களை எல்லாம் வர செய்து எல்லோருக்கும் அமுது படைத்து தன் நன்றியை வெளி படுத்தினார் . மறுபடியும் ஐயனுக்கு தன் தொண்டை குறைவர செய்ய தொடங்கினார் . அமுதகடேஸ்வரர் தன் அருமை தொண்டரின் பெருமையை உலகறிய செய்ய வேண்டாமா ? தன் திருவிளையாடலை துவங்கினார் .
No comments:
Post a Comment