Thursday, 9 November 2017

   'வீடு   செல் ,  மனைவி    உனக்காக   காத்திருப்பாள் '  என்று   ஐயன்   கனவில்   சொன்னதும்     கலயன்   திடுக்கிட்டு   விழித்தான் .  வீடு   செல்லவும்   மனமில்லாமல்    ஈசன்   ஆணையை   மீறவும்   முடியாமல்   மெள்ள   உள்ளத்தை   திடப்படுத்திக்கொண்டு   வீடு   சென்றான் .  வாயிக்கதவு   திறந்து   இருப்பதை   கண்டு   திடுக்கிட்டு   உள்ளே   நுழைந்தான் .  அவன்   மனைவி   அவன்   காலில்   விழுந்து   நீங்கள்   தினம்   வணங்கும்   அமுதகடேஸ்வரர்   இன்று   அருள்   புரிந்து   விட்டார் .  உள்ளே   அமுது   உண்ண   வாருங்கள்   என்று   அழைத்தாள் .  உள்ளே   நுழைந்த   அவர்   நன்றி   பெருக்கால்   கண்ணில்   நீர்   பெருக   ஐயனை   தொழுதார் .  காலை   சிவத்தொண்டர்களை   எல்லாம்   வர  செய்து   எல்லோருக்கும்   அமுது   படைத்து   தன்   நன்றியை   வெளி   படுத்தினார் .  மறுபடியும்    ஐயனுக்கு   தன்  தொண்டை   குறைவர   செய்ய   தொடங்கினார் .  அமுதகடேஸ்வரர்   தன்   அருமை   தொண்டரின்   பெருமையை   உலகறிய   செய்ய   வேண்டாமா ?  தன்   திருவிளையாடலை   துவங்கினார் .

No comments:

Post a Comment