Tuesday, 18 April 2017

முதியவரான   சிவகாமியாண்டார்   கோபத்துடன்   யானையின்   பின்  ஓட   யத்தனித்தார் .  வயதின்   காரணமாக   கால்   தடுக்கி   கீழே   விழுந்தார் .  ஆண்டவனே   இது   நீதியா ?  இப்படி   செய்த   யானையை   தட்டி   ஒட்டிக்கொண்டு  போய்விட்டானே   அந்த   பாகன் .  இன்று   என்னால்   இப்பூமாலைகளை   உனக்கு   சூட்டி   அழகு   செய்ய    முடியாதே   என்று  பலவாறாக   புலம்பினார் . அப்போது   அங்கு   மழுவுடன்   வந்த   எறிபத்தனார்   இவர்   புலம்பலை   கேட்க   நேர்ந்தது .  ஓடி வந்து   விழுந்து   கிடந்த   சிவகாமியாண்டாரை   அணுகி   விசாரித்தார் .  ஒரு   சிவனடியாருக்கு   இவ்வநீதி   நடந்ததை   கண்டு   வெகுண்டு   எழுந்தார் .  அந்த   யானை   எந்த   பக்கம்   சென்றது   என்று   கேட்டறிந்து   அவர்   அந்த   பக்கம்   சென்று   தம்   மழுவால்   யானையையும்   பாகனையும்   வீழ்த்தி   கொன்றார் . கூட   இருந்த   காவலர்களையும்   வீழ்த்தினார் .

No comments:

Post a Comment