மக்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு மூர்த்தியாரின் மேல் மலர் தூவி ஆரவாரித்தனர் . அமைச்சர் ஓடிவந்து மூர்த்தியாரை பணிந்து தன் சந்தோஷத்தை தெரிவித்தார் . அவரை மேளதாளத்துடன் அரண்மனை முடிசூட்டு விழா மண்டபத்திற்கு அழைத்து சென்றனர் . மங்கல நீராடலுக்கு பின்பு அவரை அலங்காரம் செய்து சிங்காதனுக்கு அழைத்து செல்ல அமைச்சர்கள் வந்தனர் . மூர்த்தியார் அவர்களை வரவேற்று அமர செய்து 'உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . ஆனால் ஒரு வேண்டுகோள் நான் சைவத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவன் . நாட்டில் பெரும்பாலோர் சைவத்தை கடைபிடிப்பதையே நான் விரும்புகிறேன் . திருநீறு அபிஷேகமாகவும் , ருத்திராக்ஷமே அணிகலனாகவும் , ஜடைமுடியே கிரீடமாகவும் இருப்பதையே நான் விரும்புகிறேன் . என்று தம் நிபந்தனையை உரைத்தார் . எல்லோரும் மனதார ஆமோதித்தனர் . அவரும் சுந்தரேச பெருமானை மனதார துதித்துவிட்டு விபூதி பூசி ருத்திராக்ஷம் அணிந்து சடாமுடியுடன் அரண்மனை சென்று முடிசூடி கொண்டு ஆட்சியை ஏற்றார் . பாண்டிய நாட்டில் வெகுகாலம் நல்லாட்சி புரிந்தார் . சிவனடியார்கள் பயமின்றி தங்கள் இறைப்பணிகளை செவ்வனே செய்தனர் . மூர்த்தியாரும் தாம் செய்து வந்த திருப்பணியை தொடர்ந்து செய்து செய்து கொண்டு பலகாலம் வாழ்ந்து சிவனடி சேர்ந்து மூர்த்திநாயனார் ஆனார் .
No comments:
Post a Comment