Wednesday, 1 November 2017

தன்   கண்   பொருத்தி   ஐயன்  கண்   சரி   ஆனது   அவனுக்கு   அளவிலா   ஆனந்தத்தை   அளித்தது .  தன்   கண்ணை   கொடுத்ததால்   அவனுக்கு   சிறிதும்   மன   வருத்தம்   இல்லை .  மனம்   எல்லை   இல்லா   மகிழ்ச்சியை   அடைந்தது .  ஆனால்   அந்தோ !  அந்த   மகிழ்ச்சி   சிறிது   நேரம்   கூட   நிலைக்கவில்லை .  அவரது   இடது   கண்ணிலிருந்து   ரத்தம்   பெருக   ஆரம்பித்தது .  திண்ணன்   சிறிதும்   தயங்காமல்   தனது   இடது   கண்ணை   எடுக்க   அம்பை   எடுத்தான் .  திடீரென்று   அவனுக்கு   நினைவு   வந்தது .  அந்த   கண்ணையும்   எடுத்து   விட்டால்   தன்னால்   ஐயன்   கண்   இருக்குமிடத்தை   அறிய   முடியாதே   என்பது   மனதில்   உதித்தது .   உடனே   தன்   காலை   இடது   கண்   இருக்குமிடத்தில்   அடையாளமாக   வைத்துக்கொண்டு   அம்பினால்   தன்   இடது   கண்ணை   தோண்டி   எடுக்க   யத்தனித்தான் .  அந்தக்கணமே   ஈசன்   தோன்றி   'நில்   கண்ணப்ப '  என்று   அவன்   கையை   பிடித்தார்  தனது   வலது   பக்கத்தில்   அவனை   இருத்திக்கொண்டார் .  .'திண்ணா   உன்      கண்ணை   எனக்கு   ஈந்து   நீ   கண்ணப்பன்     ஆகிவிட்டாய் .  நீ   என்றும்   எனது   வலது   பக்கத்தில்   இருப்பாய்   உன்னுடைய   அளவிலா   பக்தியை   உலகம்   உணர   செய்யவே   இவ்வாறு   கண்ணில்   உதிரம்   கொட்ட   செய்தோம் '.  என்று   கூறி   தன்னில்  செர்த்துக்கொண்டார்.  மறைந்து   நின்று   இக்காட்சியை   கண்ட   அந்தணர்    மெய்சிலிர்த்துப்போனார் .  ஒன்றும்   அறியா   வேடன்   திண்ணன்   கண்ணப்ப   நாயனாராகி   சிவாலயங்களில்   சிலையாக   இருக்கிறார் .

No comments:

Post a Comment