Thursday, 16 March 2017

அந்த   சிவபெருமானே   தனக்கு   தேவை   இல்லை   என்று   விறன்மிண்டர்   முழங்கியதும்   சுந்தரரை   வெகுவாக   பாதித்தது .  அதிர்ந்து   போய்   ஈசனிடம்   சரணடைந்தார் .  தடுத்தாட்கொண்ட   ஈசனே !  என்   மனமெல்லாம்   அடியார்களிடம்   உள்ளபோது   நான்   புற   வணக்கம்   செய்யாததால்   என்னை   இவ்வாறு   பழி   சுமக்க   ஆளாக்கி   விட்டாயே ?என்று   புலம்பினார் .   ஈசன்   சுந்தரா   கலங்காதே   என்னை   பாடுவதை   போல்   என்   அடியார்களையும்   பாடு   அவர்கள்   தொண்டும்   உலகம்   அறியட்டும் .  என்று   கூறினார் .  சுந்தரர்   அவர்களை   பற்றி   தனக்கு   எதுவும்   தெரியாதே   என்று   வருந்த   இறைவன்   ''தில்லை   வாழ்   அந்தணர்   தம்   அடியார்க்கு   அடியேன் "  என்று   முதலடி   தொடங்கி   கொடுத்து   பாட   சொல்கிறார் .  சுந்தரரும்   அவ்வாறே   தேவாசிரிய   மண்டபத்திற்கு   சென்று  ஒவ்வொரு   தொண்டரையும்   பெருமை   படுத்தி   சொல்லி   அவர்க்கு   தான்   அடியார்க்கு  அடியேன்   என்று   பாடுகிறார் . "விரிபொழில்சூழ்   குன்றையார்   விறன்மிண்டர்க்கு   அடியேன் "  என்று   சுந்தரர்  பாடியதும்   நெகிழ்ந்து    போன   விறன்மிண்டர்   அவர்   காலடியில்   விழுகிறார் .  ஈசனும்   மகிழ்ந்து   விறன்மிண்டரை   தன்னுடன்   சேர்த்துக்கொள்கிறார் .  இறைவன்   தன்னை   வேண்டாம்   என்று   ஒதிக்கியவரையும்   தன்   தொண்டர்களை   உளமாற    நேசித்தால்   அவர்களை   ஏற்றுக்கொள்ளும்   தன்மை   நம்மை   மெய் சிலிர்க்க   வைக்கிறது .  சுந்தரரை   சொல்லும்போது   இந்த   சம்பவம்   நாம்  கண்டிருக்கிறோம் .  இந்த   பாடலின்   பெருமையையும்   அறிந்தோம் .

No comments:

Post a Comment