அப்பரும் ,சம்பந்தரும் பெரும் ஆனந்தம் அடைந்து ஈசனை பலவாறு துதித்தனர் . பிறகு அப்பர் மக்கள் தடையின்றி ஆலயம் வந்து போக ஆலைய கதவு மூடுவதற்கும் வழி செய்தல் அவசியம் என்று அதற்கு பாடுமாறு சம்பந்தரை வேண்ட அவரும் ''சதுரம்மறை '' எனும் பதிகம் பாடி கதவம் தாளிட செய்கிறார் .
Monday 8 December 2014
Thursday 4 December 2014
maraikadu
வருத்த மடை ந்த சம்பந்தர் அப்பரை வணங்கி இவ்வூர் பக்தர்கள் தடையின்றி கோபுர வாயில் வழி வந்து ஐயனை தரிசிக்க தாங்கள் தான் ஈசனை துதித்து பாடி இக்கதவை திறக்க செய்ய வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார் . அப்பரும் தங்கள் சித்தம் என்று கூறி இப்பதிகத்தை பாடுகிறார் .
பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலம் செய் மறை காடரோ
கண்ணினால் உமை காண கதவினை
திண்ணமாக திறந்தருள் செய்மினே .
ஈசன் அவர் கானத்தில் மயங்கி இருந்ததால் ஒன்பது பதிகம் பாடியபின்னும் திறக்க படாமை யால் மனம் நொந்த அப்பர் பாடுகிறார் .
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ
சரக்க இக்கதவம் திறப்பின்மினே /
இப்பாடல் முடிந்ததும் கதவுகள் திறந்து மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது . அப்பரும் கண்ணீர் மல்க ஐயனை வணங்கினர் .
பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலம் செய் மறை காடரோ
கண்ணினால் உமை காண கதவினை
திண்ணமாக திறந்தருள் செய்மினே .
ஈசன் அவர் கானத்தில் மயங்கி இருந்ததால் ஒன்பது பதிகம் பாடியபின்னும் திறக்க படாமை யால் மனம் நொந்த அப்பர் பாடுகிறார் .
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ
சரக்க இக்கதவம் திறப்பின்மினே /
இப்பாடல் முடிந்ததும் கதவுகள் திறந்து மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது . அப்பரும் கண்ணீர் மல்க ஐயனை வணங்கினர் .
Tuesday 2 December 2014
pannin
அப்பரடிகள் தன் பக்தி பயணத்தை தொடர்கிறார் . அவர் ஞானசம்பந்தரை சந்திக்க பேராவல் கொண்டு அவரை சந்தித்து இருவரும் சேர்ந்து தங்கள் பக்தி யாத்திரையை தொடர்கின்றனர் . அவர்கள் இப்போது வேதாரண்யம் என்று அழைக்கப்படும் திருமறைக்காடை வந்தடைகின்றனர் . கோவிலை அடைந்து உள்ளே சென்ற அவர்கள் சன்னதிக்கு நுழை வாயிற் கதவு பூட்டப்பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் . மக்களை வினவினார்கள் . வேதங்கள் சிவபிரானை வழிப்பட்டபின் பூட்டிய கதவு திறக்க வேதம் ஓதும் அந்தணர்கள் முயன்றும் முடியவில்லை என்று கூறினர் .''அருமறைகள் திருகாப்பு செய்து வைத்த அக்கதவம் திறந்திட " கூடவில்லை என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார் .
Subscribe to:
Posts (Atom)