Sunday, 26 March 2017

ஈசன்   அமர் நீதியாரை   பார்த்து   நீங்கள்   சிவனடியார்களுக்கு   செய்யும்   சிறந்த   தொண்டினை   பற்றி   அதிகம்   கேள்விப்பட்டிருக்கிறேன் .  மிக்க    மகிழ்ச்சி   என்று கூறினார் .  அதற்கு   அமர் நீதியார்   இச்செல்வமும்   ஈசன்   கொடுத்தது   அதை   இவ்வாறு   அடியார்களுக்கு   அளிக்க   செய்வதும்   அவனே   ஆகவே   இச்செல்வம்   எல்லாம்   அவனடியாக்களை   சேரவேண்டியதே   என்று   பதிலுரைத்தார் .  அந்த   சமயம்   மேகம்   கறுத்து   கொண்டு   வந்தது .  உடனே   ஈசன்   ஒன்றும் இல்லை   மழை   வரும்   போல்   இருக்கிறது .  துணிகள்   நனைந்து  விட்டால்   மாற்று   ஆடை   இல்லை .  என்னுடைய   இந்த   கோவணத்தை   பத்திரமாக   வைத்திருந்து   நான்   திரும்ப  வந்து   கேட்கும்போது   கொடுத்தால்   போதும் .  அது   சாதாரண   துணி   என்று   எண்ணிவிடாதே .  என்று   சொல்லி   அவர்   தண்டத்தில்   கட்டி   வைத்திருந்த   ஒரு   கௌபீனத்தை   கொடுத்தார் ..  அவரும்   சரி   ஸ்வாமி   என்று   மரியாதையுடன்   பெற்று   கொண்டார் .

No comments:

Post a Comment