Saturday, 6 May 2017

அதிசூரன்   ஏனாதியாரின்  மீது   அவர்   புகழ்   காரணமாக   மிக வெறுப்பு   கொண்டான் .  அவரை   எப்படியாவது   பழி    வாங்கும்வெறியுடன்    இருந்தான் .  ஒரு   நாள்  அவன்   கத்தியுடன்   ஏனாதியாரை  சந்திப்பதற்கு   தன்   சீடர்களுடன்   அவர்   வீட்டிற்கு    சென்றான் .  ஏனாதியருக்கு   இவர்களை   காண   இவர்கள்   எதற்காக   வந்திருப்பார்கள்   என்று   புரியாமல்   ஆச்சர்யத்துடன்   பார்த்தார் .  உடனே   அதிசூரன்   இவ்வாறு   இருவரும்  ஒரே   தொழிலில்    ஈடுபட்டிருப்பது   இருவருக்கும்   சங்கடம் .  ஆகையால்   நாம்   இருவரும்   சண்டையிட்டு   யார்   வெல்கிறார்களோ   அவரே   இத்தொழிலில்   இருக்கலாம்   என்று   அவரை   போட்டிக்கு   அழைத்தான் .  இதற்குள்   ஏனாதியின்   சீடர்களும்   அங்கு குழுமி   விட்டனர் .  இதை   கண்ட   ஏனாதியார்   இத்தனை   பேர்கள்   சேர்ந்து   விட்டதால்   இங்கு   சண்டை   இடுவது  சரியல்ல   வேறு   மைதானத்தில்  போட்டியை    வைத்துக்கொள்ளலாம்   என்று   கூறினார் .     

No comments:

Post a Comment