Saturday, 25 March 2017

அமரநீதியார்   நல்லூரில்   அடியார்களை  சேவையில்   குறை   நேரக்கூடாது   என்ற   எண்ணத்தில்  அதை   தானே   நேரில்   கவனித்து   செய்ய   எண்ணி    தானே      குடிபெயர்ந்தார் .  இவருடைய   இவ்வறிய   சேவை   உலகறிய   செய்ய   வேண்டும்   என்று   ஈசனுக்கு    இச்சை   உண்டாயிற்று .  அன்று   நல்லூரில்   கோவிலில்   எதோ   உத்சவம் .  ஐயன்   பிரம்மச்சாரி   சிவனடியாராக   மாறி   நல்லூர்   வருகிறார் .  பிரம்மச்சாரி   கோலத்துடன்   கையில்   ஒரு   தண்டம்   அதில்   இரண்டு   காவி   கௌபீனங்கள்   கட்டி  தொங்கின .  அவரை   கண்ட     அமர் நீதியார்   மகிழ்ச்சியுடன்   வரவேண்டம்   வரவேண்டும்   என்று   வரவேற்றார் .  அவரும்   உங்களை   பற்றி   நிறைய   கேள்விப்பட்டிருக்கிறேன் .  எனக்கு   ஒரு   உதவி   தேவை   என்று   கூறினார் .

No comments:

Post a Comment