அமரநீதியார் நல்லூரில் அடியார்களை சேவையில் குறை நேரக்கூடாது என்ற எண்ணத்தில் அதை தானே நேரில் கவனித்து செய்ய எண்ணி தானே குடிபெயர்ந்தார் . இவருடைய இவ்வறிய சேவை உலகறிய செய்ய வேண்டும் என்று ஈசனுக்கு இச்சை உண்டாயிற்று . அன்று நல்லூரில் கோவிலில் எதோ உத்சவம் . ஐயன் பிரம்மச்சாரி சிவனடியாராக மாறி நல்லூர் வருகிறார் . பிரம்மச்சாரி கோலத்துடன் கையில் ஒரு தண்டம் அதில் இரண்டு காவி கௌபீனங்கள் கட்டி தொங்கின . அவரை கண்ட அமர் நீதியார் மகிழ்ச்சியுடன் வரவேண்டம் வரவேண்டும் என்று வரவேற்றார் . அவரும் உங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் . எனக்கு ஒரு உதவி தேவை என்று கூறினார் .
No comments:
Post a Comment