Tuesday, 28 November 2017

எஞ்சாத   வாட்டாயர்   அடியார்க்கும்   அடியேன் |

சோழ   நாட்டில்   கணமங்கலம்   என்ற   ஊரில்  வேளாளர்   குலத்தில்   பிறந்தவர்   தாயனார்   என்பவர் .  அவர்   வேளாளர்   குல   தலைவர் .  அவ்வூரில்   எழுந்தருளி   இருக்கும்  நிதிநெறிநாதரிடம்    அளவு   கடந்த   பக்தி   கொண்டிருந்தார் .  தினமும்   அவருக்கு செந்நெல்   அரிசியில்   அன்னமும்   செங்கீரையும்   மாவடுவும்   செய்து   கொண்டு   சென்று   நைவேத்யம்   செய்து   அங்கு   வரும்   சிவனடியார்களுக்கு   அளிப்பதை   தமக்கு   கிடைத்த   பாக்கியமாக   சிரத்தையாக   செய்து   கொண்டு   வந்தார் .தாயானார்   மேற்கொண்டிருக்கும்   இத்தொண்டினையும்   அவருடைய   பக்தியையும்   உலகுக்கு   உணர்த்த   இச்சை   கொண்டான்   ஐயன் .   

No comments:

Post a Comment