Saturday, 22 April 2017

மற்றும்   கூட   வந்த   காவலாளிகள்   ஓடி   சென்று   மன்னனிடம்   பட்டத்து    யானை   கொலையுண்ட   செய்தியை   கூறினர் .  புகழ்   சோழ  ன்னன்   செய்தியை   கேட்டு   அதிர்ந்து   போனான் .  பகைவர்   படையுடன்  வந்து   விட்டனரோ   என   அச்சமுற்று   படையுடன்   செல்ல   தயாரானான் .   தானும்   வாள்   மற்ற   ஆயுதங்கள்   ஏந்தி   படைகள்   பின்னே   வர   குதிரை   ஏறி   புறப்பட்டார் .  அவர்   ராஜவீதியை   அடைந்தார் .  அங்கு   பட்டத்து   யானை   மலைபோல்   வீழ்ந்து   கிடந்ததை   கண்டு   மலைத்து   நின்றார் .  அங்கு   மழுவுடன்   எறிபத்தரை   கண்டு   இப்பெரும்   சிவனடியார்   அங்கு   என்ன   செய்கிறார்   என்று   அதிசயித்து   நின்றார் .  அரசனின்   பின்   நின்ற   காவலாளிகள்   யானையை   கொன்றவர்   அவரே   என்று   சிவனடியாரை   காண்பித்தனர் .  அரசன்   அதிர்ந்து   போனார் .  அன்பே   உருவான   சிவனடியார்   இக்காரியம்   செய்தாரென்றால்   தகுந்த   காரணம்   இருக்க   வேண்டும்   என்று   உறுதியாக   நம்பினார் .

No comments:

Post a Comment