Sunday, 12 November 2017

இச்செய்தியை   கேட்ட   கலயர்   தன்   பக்தைக்காக  சிரம்    தாழ்த்திய   எம்பெருமானை   காண  மிக்க   ஆவலுடன்  உடனே   திருப்பனந்தாள்   புறப்பட்டார் .   கவலை   தோய்ந்த   முகத்துடன்   இருந்த   அரசனை   கண்டார் .யானைகள்   சங்கிலியால்   இழுத்து   லிங்கதிருமேனியை   நிமிர்த்த   முடியாமல்   தவிப்பதையும்   கண்டார் . இத்திருப்பணிக்கு   உதவாத   தன்   திருமேனி   எதற்கு   என்று   எண்ணி   லிங்கத்தில்   கட்டி   இருந்த   கயிற்றை   எடுத்து   தன்   கழுத்தில்   மாட்டிக்கொண்டு   ஈசனை   தியானித்து   கண்ணை   மூடிக்கொண்டு   இழுத்தார் .  அதிகாரத்திற்க்கு   கட்டுப்படாத   ஐயன்   அன்புக்கு   உடனே   கட்டுப்பட்டு   நிமிர்ந்தார் .  சந்தோஷத்தில்   அரசனும்   அங்கிருந்த   எல்லோரும்   ஆரவாரத்துடன்   அவர்   காலில்   விழுந்து   வணங்க   விரைந்தனர் .கலயர்   நெஞ்சு   தழுதழுக்க ஏழையின்   அன்புக்கு   கட்டுப்பட்டு   நிமிர்ந்த  உன்னை   என்   சொல்லி   போற்றுவேன்   என்று   கண்ணீர்   மல்க   நின்றார் .  ஈசன்   தன்   மெய்யன்பனின்   பெருமையை   உலகுக்கு   உணர்த்த   தன்   திருவிளையாடலை   ஆடி   முடித்தார் .

No comments:

Post a Comment