குறிப்பிட்டபடி குறிப்பிட்ட இடத்தில் ஏனாதியரும் அதிசூரனும் கத்தி கேடயத்துடன் சண்டைக்கு தயாரானார்கள் அதிசூரன் தன் முகத்தை கேடயத்தால் மறைத்து கொண்டிருந்தான் . இருவரும் கத்தியை சுழற்றிக்கொண்டு சண்டை இட்டனர் அதிசூரன் முகத்தை மறைத்தபடியே சண்டை இட்டான் . ஏனாதியார் வெற்றி பெரும் நிலையில் கத்தியை ஓங்க எத்தனிக்கையில் திடீரென்று அதிசூரன் தந்திரமாக கேடயத்தை விலக்கினான் . ஏனாதியார் திடுக்கிட்டார் . அவன் முகத்தில் பட்டையாக திருநீறு பூசி இருந்தான் அவனுக்கு ஏனாதியரை நன்றாக தெரியுமாதலால் சிவனடியார்களை அவர் நிச்சயமாக பெரிதும் மதிப்பார் என்றும் அவர்களுக்கு தீங்கு ஏதும் செய்யமாட்டார் என்றும் உணர்ந்திருந்தான் . ஏனாதியார் அவன் சிவனடியாராக மாறி விட்டான் என்று தீர்மானித்து கத்தியை கீழே போட நினைத்தவர் ஆயுதமற்றவனை கொன்றான் என்ற பழி சொல் சிவனடியாராக மாறியவனுக்கு வந்துவிட கூடாதென்று கத்தியை கையில் பிடித்து கொண்டு நின்றார் . அதுவே நல்ல தருணம் என்று அதிசூரன் கத்தியால் குத்தி அவரை மாய்த்தான் . உயிர் துறக்கும் தருவாயில் ஈசன் ஏனாதியருக்கு காட்சி கொடுத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார் .
Thursday 18 May 2017
Friday 12 May 2017
ஏனாதியார் சொன்னபடி ஒரு மைதானத்தில் இரு கட்சியினரும் மோதினர் . எதிர்பார்த்தபடி ஏனாதியின் கட்சி பெருத்த வெற்றி பெற்றது . அதிசூரன் கட்சி பெருத்த சேதத்துடன் தோல்வியுற்றது . அதிசூரன் ஏனாதியரை வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை அறிந்து கொண்டான் . அவரை சூழ்ச்சி செய்து வெற்றி அடைவது என்று தீர்மானித்தான் . அதை நிறைவேற்ற யோசனையில் ஆழ்ந்தான் . ஏனாதியர் சிவனடியார்கள் மீது கொண்ட அதீத பக்தியை உபயோகிக்க முடிவு செய்தான் . அவன் ஏனாதியரை அழைத்து இவ்வாறு பலர் பலியாவதை தவிர்க்க தாம் இருவரும் மட்டுமே போரிட்டு தீர்த்துக்கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தான் . அவரும் ஒப்புக்கொண்டார் .
Saturday 6 May 2017
அதிசூரன் ஏனாதியாரின் மீது அவர் புகழ் காரணமாக மிக வெறுப்பு கொண்டான் . அவரை எப்படியாவது பழி வாங்கும்வெறியுடன் இருந்தான் . ஒரு நாள் அவன் கத்தியுடன் ஏனாதியாரை சந்திப்பதற்கு தன் சீடர்களுடன் அவர் வீட்டிற்கு சென்றான் . ஏனாதியருக்கு இவர்களை காண இவர்கள் எதற்காக வந்திருப்பார்கள் என்று புரியாமல் ஆச்சர்யத்துடன் பார்த்தார் . உடனே அதிசூரன் இவ்வாறு இருவரும் ஒரே தொழிலில் ஈடுபட்டிருப்பது இருவருக்கும் சங்கடம் . ஆகையால் நாம் இருவரும் சண்டையிட்டு யார் வெல்கிறார்களோ அவரே இத்தொழிலில் இருக்கலாம் என்று அவரை போட்டிக்கு அழைத்தான் . இதற்குள் ஏனாதியின் சீடர்களும் அங்கு குழுமி விட்டனர் . இதை கண்ட ஏனாதியார் இத்தனை பேர்கள் சேர்ந்து விட்டதால் இங்கு சண்டை இடுவது சரியல்ல வேறு மைதானத்தில் போட்டியை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார் .
Monday 1 May 2017
எனாதிநாதன் தன் அடியார்க்கு அடியேன் |
சிவனடியார் சின்னம் தரித்த எதிரிக்கும் அருளிய பெருந்தகை ஏனாதிநாதர் ஆவர் . சோழ நாட்டில் எயினனுர் என்றொரு ஊர் . அங்கு வசிப்பவர் ஏனாதி எனும் சிறந்த சிவபக்தர் . அவர் வாள் வித்தையில் சிறந்தவர் . வீரர்களுக்கு வாள் பயிற்சி கொடுப்பது . அவர் தொழில் . அரசாங்கத்தில் ஒரு படை பிரிவிற்கு அவர் தலைவர் . வித்தை கற்றுக்கொடுத்து ஈட்டிய பொருளில் பெரும் பகுதி சிவனடியார்களுக்கே செலவு செய்தார் .. அவர்களுக்கு சௌகரியங்கள் செய்து கொடுத்தார் . அதனால் அவர் புகழ் பரவியது . அவரிடம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை கூடிற்று . அவரைப்போல் வாள் வித்தை பயிற்சி அளிப்பவன் அதிசூரன் என்பவன் . அவனுக்கு ஏனாதியார் புகழ் ஓங்குவது பெரும் பொறாமையை உண்டாக்கியது . அவருடைய புகழால் இவருக்கு மாணவர்கள் வருகை குறைந்து வருமானமும் குறைந்தது
சிவனடியார் சின்னம் தரித்த எதிரிக்கும் அருளிய பெருந்தகை ஏனாதிநாதர் ஆவர் . சோழ நாட்டில் எயினனுர் என்றொரு ஊர் . அங்கு வசிப்பவர் ஏனாதி எனும் சிறந்த சிவபக்தர் . அவர் வாள் வித்தையில் சிறந்தவர் . வீரர்களுக்கு வாள் பயிற்சி கொடுப்பது . அவர் தொழில் . அரசாங்கத்தில் ஒரு படை பிரிவிற்கு அவர் தலைவர் . வித்தை கற்றுக்கொடுத்து ஈட்டிய பொருளில் பெரும் பகுதி சிவனடியார்களுக்கே செலவு செய்தார் .. அவர்களுக்கு சௌகரியங்கள் செய்து கொடுத்தார் . அதனால் அவர் புகழ் பரவியது . அவரிடம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை கூடிற்று . அவரைப்போல் வாள் வித்தை பயிற்சி அளிப்பவன் அதிசூரன் என்பவன் . அவனுக்கு ஏனாதியார் புகழ் ஓங்குவது பெரும் பொறாமையை உண்டாக்கியது . அவருடைய புகழால் இவருக்கு மாணவர்கள் வருகை குறைந்து வருமானமும் குறைந்தது
Subscribe to:
Posts (Atom)