யார்க்கும் இடுமின் அவர் இவர் என்னமின் ?) என வினவுகிறார் திருமூலர் . பசி என்று வருபவன் யாராயினும் இல்லை எனாது அன்னமிடல் அவசியம் .எவ்வித பேதமும் பார்த்தல் கூடாது . நாம் செய்யும் தானமே நம்மை தொடர்ந்து வரும் . செல்வம் இருந்தும் எவ்வித தானமும் செய்யாதவன் வாழ்ந்தும் வாழாதவன் . அவன் எட்டி காய் பழுத்தும் யார்க்கும் உதவாமல் இருப்பது போல் அவனும் இருப்பதும் இல்லாததும் ஒன்றே . அவனை ஒறுத்தல் நன்று என்று கூறுகிறார் .
Thursday 31 March 2016
Wednesday 30 March 2016
தானத்தில் சிறந்தது அன்னதானம் .மனிதன் அல்லும் பகலும் உழைப்பது ஒரு சாண் வயிற்றை நிரப்பவே . நாம் என்ன தானம் செய்தாலும் பெறுபவர்க்கு முழுமையாக திருப்தி அடையாமல் இன்னும் கொஞ்சம் கிடைத்தால் நலமாக இருக்கும் என்றே தோன்றும் . ஆனால் அன்னதானம் செய்யும் போது வயிறு நிறைந்த எந்த மனிதனும் மனம் திருப்தி அடைந்து அன்னமிட்டவரை வாயார வாழ்த்துவான் .பசியை போக்குவது நம்மால் செய்யக்கூடிய மிக சிறந்த தர்மம் . காக்கைகளை பாருங்கள் . ஒரு காக்கை உணவைக்கண்டால் தான் மட்டும் உண்ணாது மற்ற காக்கைகளை அழைத்து எல்லாம் சேர்ந்தே உண்ணும் . ஐந்தறிவு படைத்த அவையே இத்தகைய பண்பை கடைபிடிக்கும்போது ஆறறிவு படைத்த மனிதன் கடைபிடிக்காமல் இருப்பது வெட்கம் .
daanam
திருமூலரின் அறியுரை ஆறறிவு படைத்த மனிதன் உயர்வடைய பெரும் சாதனமாகும் . அவர் முதலில் குறிப்பிடுவது தானமாகும் . மனிதன் தன்னால் இயன்ற அளவு இல்லாதவர்க்கு அளிப்பது பெரும் சிறப்பு . அவர் பெரிய அளவு தானம் செய்ய இல்லாதவரை வற்புறுத்தவில்லை அவர் சொல்கிறார் :
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை , யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி , யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே ||
எத்தனை எளிமையான அறியுரை .
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை , யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி , யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே ||
எத்தனை எளிமையான அறியுரை .
Tuesday 29 March 2016
அரசனுடைய பெரும் கடமைகளை உணர்த்திய திருமூலர் அரசன் நேர்மை தவறுவதால் உண்டாகும் பெரும் அவலங்களையும் உணர்த்துகிறார் . அரசன் கடமை தவறுவதால் நாட்டின் வளமை குறைகிறது மக்கள் துன்பப்பட வேண்டி இருக்கிறது . அரசனின் தவறால் வானம் பொய்த்து வறுமை ஓங்குகிறது . அடுத்து வானத்து சிறப்பையும் கூறுகிறார் .ஈசனின் கொடையாக நமக்கு கிடைக்கும் மழை . நம் வாழ்வின் ஜீவநாடி .
Thursday 24 March 2016
அந்தணரின் கடமையை வலியுறுத்திய திருமூலர் அரசனின் கடமைகளையும் கூறுகிறார் .மதிகுறைவான அரசனால் சரியான நீதி நிலைநாட்ட முடியாது . அறநெறி மிக்க மதியூக மந்திரி யை பெற்று அவர் சொல் தட்டாமல் ஆட்சி நடத்துவது அவர் கடமை . அரசன் நீதிமானாக இருந்தால்தான் மக்கள் நல்லபடி வாழ முடியும் . மாதம் மும்மாறி பொழிந்து வளம் செழிக்கும் .
அடுத்து தானத்தின் சிறப்பை உணர்த்துகிறார் .
அடுத்து தானத்தின் சிறப்பை உணர்த்துகிறார் .
Wednesday 9 March 2016
வேதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் யாகங்கள் செய்வதின் அவசியத்தை வலியுறுத்துகிறார் . அந்தணர்களின் கடமையை அடுத்து வலியுறுத்துகிறார் . வேதம் ஓதுவதையும் மாணவர்களுக்கு வேத பாடசாலை நடத்துவதுமே அவர்களுக்கு முக்கிய கடமையாகும் .தக்ஷிணையும் கிடைத்ததை பெற்றுக்கொண்டு அதிலும் இயன்ற அளவு தானம் செய்வது அவசியம் . யாகங்களை ஒரு சிறு தவறில்லாமல் நடத்தி வைத்து நாட்டின் சுபிக்ஷத்தை காப்பது அவர்கள் கடமையே . இவ்வாறு நாட்டின் வளத்திற்கு அந்தணர்களின் பங்கு பெரியது .
Sunday 6 March 2016
பஞ்சமா பாதகங்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டியவை என்று எச்சரித்த திருமூலர் கொல்லாமை , பிறன் மனைவி நாடாமை ,பொய் பேசாமை , கள்ளுண்ணாமை , எல்லா ஜீவன்களிடத்தும் அன்பு செலுத்துவது போன்ற நற்பண்புகளை சிறந்த அறமாக கைபற்றும்படி போதிக்கிறார் . யாகத்தின் சிறப்பை கூறுகிறார் . யாகம் பொது நலனுக்காக செய்யப்படுகிறது . நாட்டில் மும்மாரி பொழிந்து பயிர்கள் செழிப்புறவும் , இயற்கை உத்பாதங்கள் எதுவும் நேராமலும் மக்கள் செழுமையுடன் குறையின்றி வாழ பஞ்ச பூ தங்களின் அதிதே வதைகளையும் மற்ற தேவர்களையும் நன்றியுடன் போற்றும் பொருட்டு செய்யப்படுகிறது .
Wednesday 2 March 2016
வாழ்வின் நிலையாமை செல்வம் நிலையாமை இவற்றை சொல்வதால் இம்மானிட பிறப்பை குறையாக மதிப்பிட தேவை இல்லை . கிடைப்பதற்கு அரியது மானிட பிறவி . விஷ்ணு வே இப்புவியில் ராமராகவும் கிருஷ்ணராகவும் அவதரித்துள்ளார் . சிவபெருமானும் தன் அடியார்களை ரட்சிக்க இப்புவியில் பல வேடங்களில் தோன்றி பல பல விளையாடல்கள் புரிந்துள்ளார் . அநேக சித்தர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து பல சாதனைகள் புரிந்துள்ளனர் . ஹனுமான் இங்குதான் ராமர் இருப்பதால் இவ்வுலகை விட்டு நீங்க விரும்பாமல் இவ்வுலகிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது . இவ்வாறு பெருமை பெற்றது இவ்வுலகம் .திருமூலர் காட்டிய நன்னெறிகளை கடைப்பிடித்து வாழ்ந்தால் வாழ்க்கை இன்பமே .
Subscribe to:
Posts (Atom)