Saturday, 28 October 2017

திண்ணன்   காலையில்   எழுந்து   வில்லையும்   அம்பையும்   எடுத்துக்கொண்டு  வேட்டையாடி   கொன்ற   விலங்கை   கழுவி   பக்குவமாக   சமைத்து   அங்கு   மரத்தில்   இருந்த தேன்     கூட்டிலிருந்து   தேனை   எடுத்து   அத்துடன்   சேர்த்து   தன்   வா டிக்கைபடி   தன்   வாயில்   நீரை   எடுத்துக்கொண்டு   வில்வம்  மற்றும்   மலர்களை   பறித்து   தன்   தலையில்   செருகிக்கொண்டு   ஆனந்தமாக   ஓடி   வந்து   தன்   செருப்பு   காலால்   லிங்கத்தின்   மீதிருந்த   பூக்களை   தள்ளி விட்டு   தன்   வாயில்   கொண்டுவந்த   நீரால்   ஐயனுக்கு   அபிஷேகம்   செய்து   தான்  கொண்டுவந்த    விலை   மதிக்கமுடியாத   தன்   ஆத்மார்த்த   அன்பை   சேர்த்து   செய்த   அந்த   உணவை   எல்லை இல்லா   ஆனந்தத்துடன்   படைத்தான் .  ஈசன்   அதை   சொல்லொணா   அன்புடன்   ஏற்று   கொண்டிருப்பார்   என்பதில்   ஐயமில்லை .

No comments:

Post a Comment