Sunday, 12 March 2017

இவ்வாறு   இவர்   ஈசன்   மீதும்   ஈசனடியார்கள்   மீதும்   கொண்ட   பக்தி   வளர்ந்தது .  அவருக்கு   ஈசனை   பல   திவ்ய   க்ஷேத்திரங்களுக்கு   சென்று   அங்கெல்லாம்   வழிபட   ஆவல்   எழுந்தது . காவியும்   ருத்திராக்ஷமும்   தரித்து   தல   யாத்திரை   கிளம்பி   ஈசனையும்   அடியார்களையும்   வணங்கியவாறே   சென்றார் .  பல   இடங்களில்   ஈசனை   தரிசித்து விட்டு   திருவாரூர்   வந்து   சேர்ந்தார் .  ஒருநாள்   அவர்  தேவாசிரிய   மண்டபத்தில்   அடியார்களுடன்   இருந்தபோது    சுந்தரர்  கோவிலுக்கு   வருகை   தந்தார் .        அவர்   மனமெல்லாம்  அங்கிருந்த   அடியார்களையெல்லாம்     கண்டு   மிக்க  பக்தி   மேலிட்டு   இவர்களைப்போல்   தானும்   ஆவது   எப்போது   என்ற   எண்ணம்   மேலிட்டவாறு    கருவறையை   நோக்கி   நடந்தார் .  அங்குள்ள   அனைவரும்   எழுந்து   அவருக்கு   மரியாதை   செலுத்தினர் .  விறன்மிண்டர்   எல்லோராலும்   வணங்கப்பட்ட   அவர்   யார்   என்று   வினவ  அவர்கள்   திருமணத்தன்று   எம்பெருமானால்   தடுத்தாட்கொள்ளப்பட்டவரும்   அவரால்   வன்தொண்டர்   என்று   அழைக்கப்பட்டவருமான   சுந்தரர்   என்று   பதிலுரைத்தனர்            

No comments:

Post a Comment