பதினோராம் திருமுறை நம்பிகள் பாடல்களுடன் முடிவடைகிறது .ஈசனின் கைப்பட எழுதப்பட்ட ஒலையுடன் துவங்குகிறது . பெருமைக்குரிய நம்பிகள் பாடல்களுடன் நிறைவடைகிறது . அவருடைய பாடல்கள் தனி முக்கியத்துவம் உடையது . 63 நாயன்மார்கள் பெருமையை உணர்த்தி அவர்களுடைய புராணங்களை உலகறிய வைத்து சிவாலயங்களிலும் அவர்களின் உருவ சிலைகள் கொலுவிருக்க வகை செய்தது . பெரிய புராணம் எழுதப்படவும் காரணமாயிற்று . சுந்தரர் இவ்வறிய சிவத்தொண்டர்களை ஒவ்வொரு வரியில் அறிமுகம் செய்தார் . நம்பிகள் ஒவ்வொருவர் வரலாறையும் சுருக்கமாக தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் ஒவ்வொரு பாட்டாக எழுதி வைத்தார் . அதுவே பிற்காலத்தில் சேக்கிழாரால் பெரிய புராணமாக விரிவாக அத்தனை நாயன்மார்களின் வரலாறும் நமக்கு அளிக்கப்பட்டது . இவ்வகையில் இத்திருமுறை முக்கியத்துவம் பெறுகிறது
Monday 24 October 2016
Wednesday 19 October 2016
நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்த பாக்களை காண்போம் .
திரு நாரையூர் இரட்டை மணிமாலை , கோயில் திருப்பண்ணயர் விருத்தம் திருத்தொண்டர் திருவந்தாதி , ஆளுடைப்பிள்ளையார் திருவந்தாதி , ஆளுடைப்பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் , ஆவுடைப்பிள்ளையார் மும்மணி கோவை , ஆவுடை பிள்ளையார் திரு உலாமாலை , திருக்கலம்பகம் , திருத்தொகை , திரு நாவுக்கரசு தேவர் திரு ஏகாதச மாலை . இவையாகும் . 11 திருமுறை இத்துடன் முடிவு பெறுகிறது .
Friday 14 October 2016
ராஜராஜ சோழன் அத்தி றவுகோலை மீட்டு நம்பியிடம் ஒப்படைத்து தெய்வ பாடல்களை மீட்க வேண்டுகிறார் . நம்பிகள் கதவை திறந்து பார்த்து திகைக்கிறார் . கரையான்களால் சேதமடைந்திருப்பத்தினை கண்டு திகைக்கிறார் . உலகுக்கு தேவையானவை அதில் இருப்பதாக தெய்வீக சக்தியால் அறிந்து இருப்பவைகளை அரும்பாடுபட்டு சேகரித்து தொகுக்க முனைகிறார் . நாம் இன்று காணும் பன்னிரு திருமுறைகள் அவரால் நமக்கு கிடைத்த பொக்கிஷமாகும் . வேதவியாசரால் வேதங்கள் தொகுக்கப்பட்டு உலகுக்கு கிடைத்ததைப்போல் தேவார பாடல்களும் நம்பிகளால் 12 திருமுறைகளாக்க தொகுக்கப்பட்டு நமக்கு தமிழ் மறையாக அளிக்கப்பட சொத்தாகும் . முறையே ஞானசம்பந்தர் , அப்பர் , சுந்தரர் தேவாரங்களும் மாணிக்கவாசகரின் திருவாசகமும் . திருவிசைப்பாவும் , திருமூலரின் திருமந்திரமும் .பல நாயன்மார்களால் அருளப்பெற்ற பாடல்களும் தொகுக்கப்பட்டன . நம்பியாண்டார் நம்பி சுந்தரரின் ' தில்லை வாழ் அந்தணர்தம் ' எனும் பாடலை ஆதாரமாக கொண்டு 63 நாயன்மார்களை அறிமுகப்படுத்தி திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார் . அப்பாடலும் மேலும் பல பக்தர்கள் பாடிய பாடல்கள் 11ஆம் திருமுறை ஆகிறது . பிற்காலத்தில் நம்பியின் பாடல்களை ஆதாரமாக கொண்டு சேக்கிழார் பெருமான் பெரும் ஆராய்ச்சி செய்து 63 நாயன்மார்களின் வரலாறை புராணமாக பாடுகிறார் . அதுவே பெரிய புராணம் என்று பெருமையுடன் 12வது திருமுறையாக தொகுக்கப்பட்டது .
Thursday 13 October 2016
ஆனந்தம் அடைந்த நம்பி காலி தட்டுகளுடன் வீடு திரும்புகிறான் பலகாரங்களை பிள்ளையார் உண்டதாக கூறுகிறான் .ஆனால் யாரும் நம்ப தயாராக இல்லை .தந்தையும் அவனை நம்பாமல் தண்டிக்கிறார் . ஆனால் அவன் திரும்ப திரும்ப அதையே வலியுறுத்துவதை கண்டு மறுநாள் அவனை பூஜை செய்ய அனுப்பிய தந்தை தானும் பின் தொடர்கிறார் . அவன் கதவை தாளிட்டு கொண்டதும் சாவி துவாரம் வழியாக அவர் பார்க்கிறார் . அங்கு நடந்தததை கண்ட அவர் மெயசிலிர்த்து போகிறார் .வெளியே வந்த நம்பியை ஆரத்தழுவி கண்ணீர் சொரிகிறார் .நம்பியின் வாயிலிருந்து மடை திறந்தாற்போல் வரும் தமிழ் பாக்களை கேட்டு ஆனந்தம் மேலிட மகனை ஆர தழுவுகிறார் . ஆவலுடன் நம்பி ஊட்டிய உணவை உண்ட ஈசன் அவனுக்கு ஊட்டிய அறிவு ஊற்று அது . பெற்றோரின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை . இவ்வாறு விநாயகரின் பேரருளால் பெற்ற அறிவால் அவர் நமக்கு அளித்த கொடையே 63 நாயன்மார்களின் வரலாறு . நம்பி பிற்காலத்தில் விநாயகரின் பேரருளால் நாயன்மார்கள் அருளி செய்த தேவார பாடல்கள் தில்லையில் ஓர் அறையில் கிடப்பதாகவும் திறவுகோல் தீட்சிதர்கள் வசம் இருப்பதாகவும் உணர்ந்து மன்னன் ராஜராஜசோழன் உதவியால் அவற்றை கண்டெடுக்கிறான் .
Wednesday 12 October 2016
கதவை தாளிட்ட நம்பி கள்ளமற்ற உள்ளத்துடன் பிள்ளையாரை பிரசாதத்தை உண்ண அழைக்கிறான் . அவர் மௌனமாய் இருப்பதை கண்டு திகைக்கிறான் . அவனுடைய குழந்தையுள்ளம் பிள்ளையார் நேரில் வந்து உண்ணுவார் என்று எண்ணுகிறது . சிறிது நேரம் சென்றது அவர் வராததை கண்டு மனம் வருத்தமடைகிறது . மீண்டும் மீண்டும் கெஞ்சி பார்க்கிறான் . அவர் வராதது கண்டு துக்கம் மேலிட அழுகிறான் . பொறுக்க முடியாமல் பிள்ளையார் வந்து சாப்பிடாவிட்டால் கல்லில் தன் தலையை மோதிக்கொண்டு உயிரை விடுவதாக கூறி தலையை கல்லில் மோதுகிறான் . அவன் வைராக்கியத்தை கண்டு மனமிரங்கிய ஐயன் அவன் முன் தோன்றி அவன் கொண்டுவந்த ப்ரசாதங்களை உண்ணுகிறார் . அனந்த பரவசத்துடன் நம்பி அதை ரசிக்கிறான் .
Tuesday 11 October 2016
Friday 7 October 2016
நம்பி தன் தந்தையுடன் தினமும் கோவிலுக்கு சென்று அவர் பூஜை செய்வதை கூர்ந்து கவனிப்பார் . அவர் கதவை தாளிட்டு கொண்டு பிள்ளையாருக்கு பலகாரங்களை நைவேத்யம் செய்வதையும் கூர்ந்து கவனிப்பார் . ஒருநாள் நம்பியின் தந்தைக்கு அவசரமாக வெளியூர் செல்ல நேர்கிறது. நம்பியின் தாயார் கோயிலில் பூஜை செய்யும் பொறுப்பை நம்பியிடம் ஒப்படைத்துவிட்டு செல்லுமாறு கூறுகிறாள் . அவன் சிறு பிள்ளை அவனுக்கு செய்ய தெரியாதோ என்று ஐயப்படுகிறார் . பிறகு வேறு வழியின்றி அவனிடம் ஒப்படைத்து விட்டு வெளியூர் செல்கிறார் .இந்த சம்பவத்தால் தான் நம்பியின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது . அவனது மாசற்ற பக்தி வெளியில் தெரிகிறது . .
Wednesday 5 October 2016
11 திருமுறையின் கடைசி தொகுப்பை வழங்கியவர் திரு நம்பியாண்டார் நம்பி ஆவார் . அவர் ஆதி சைவர் குலத்தை சேர்ந்தவர் . திருநாரையூரில் கோயிலில் அர்ச்சகராக பணிபுரியும் குடும்பத்தை சேர்ந்தவர் .சிறு வயது முதலே அங்குள்ள பிள்ளையாரிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார் . அவர் தந்தை கோவிலில் பணி புரியும் போது கூடவே செல்வார் . அவர் செய்வதை கூர்ந்து கவனிப்பார் .
Subscribe to:
Posts (Atom)