முத்தநாதன் படையெடுத்து சேதி நாட்டை வெல்ல முயற்சித்தான் . தில்லை கூத்தனை முழுமையாக நம்பும் மெய்ப்பொருள் மன்னனின் படையை வெல்வது அவனுக்கு சாத்தியமாக இல்லை . அவன் எத்தனை முறை முயற்சித்தும் தோல்வியே கண்டான் . அவன் படைபலத்தால் அவரை வெல்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தான் . மெய்ப்பொருள் சிவனடியார்களிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான் . அவர்கள் எதை விரும்பினாலும் கொடுக்க தயங்கியதே கிடையாது . முத்தநாதன் இதை நன்கு அறிவான் . ஆகையால் ஏதாவது சூழ்ச்சி செய்து தான் அவனை வெல்ல முடியும் என்பதை உணர்ந்தான் .
No comments:
Post a Comment