Thursday, 2 March 2017

முத்தநாதன்   படையெடுத்து   சேதி   நாட்டை    வெல்ல   முயற்சித்தான் . தில்லை கூத்தனை   முழுமையாக   நம்பும்   மெய்ப்பொருள்   மன்னனின்   படையை   வெல்வது   அவனுக்கு   சாத்தியமாக   இல்லை .  அவன்   எத்தனை   முறை   முயற்சித்தும்   தோல்வியே   கண்டான் .  அவன்   படைபலத்தால்   அவரை   வெல்வது   சாத்தியமில்லை   என்பதை   உணர்ந்தான் .  மெய்ப்பொருள்   சிவனடியார்களிடம்   மிகுந்த   பக்தி   கொண்டிருந்தான் .  அவர்கள்   எதை   விரும்பினாலும்   கொடுக்க   தயங்கியதே   கிடையாது .  முத்தநாதன்   இதை   நன்கு   அறிவான் .  ஆகையால்   ஏதாவது   சூழ்ச்சி   செய்து தான்   அவனை   வெல்ல   முடியும்   என்பதை   உணர்ந்தான் .

No comments:

Post a Comment